Home செய்திகள் திருமங்கலம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப் லைனில்,பேரிடர்கால தீயணைப்பு ஒத்திகை செயல் விளக்க பயிற்சி முகாம் .

திருமங்கலம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப் லைனில்,பேரிடர்கால தீயணைப்பு ஒத்திகை செயல் விளக்க பயிற்சி முகாம் .

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் பைப் லைன் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையின் சார்பில் நடைபெற்ற தீ தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு தீயணைப்பு துறையினர் செயல் முறை விளக்கம் முகாம் நடைபெற்றது.பருவமழை காலங்களில் மழையினால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் தீயணைப்பு செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடத்தினர்.

இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பைப் லைனில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்விதமாக அணைக்கலாம் என்றும்.மேலும் பெட்ரோல் டேங்கர் லாரிகளில் தீ விபத்து ஏற்பட்டால் விரைவாக அணைப்பது மற்றும் குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயற்படுவது என தத்ரூபமாக செயல் முறை தீயணைப்பு செயல்விளக்க ஒத்திகை பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது.மேலும் பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள்வது குறித்தும், வெள்ளத்தின் போது பாதுகாப்பாக உயிர் தப்பிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் பல்வேறு பயிற்சிகளை செய்து காட்டினார்கள்.மேலும் பேரிடர் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை வெற்றிகரமாக சமாளிப்பது தீயை அணைப்பது குறித்தும் முதலுதவி செய்வது பற்றியும் தீயணைப்பு படை வீரர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com