செய்தி எதிரொலி தற்காலிகமாக சரி செய்யப்பட்ட சாலை…… மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் மெயின் ரோட்டில் சாலைகள் பழுதாகி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆஸ்பத்திரி சென்று பிளாஸ்திரி போடும் நிலைக்கு சாலைகள் இருந்தது இதுமட்டுமல்லாது தள்ளுவண்டி ஒன்று கடலை உள்ளிட்ட வியாபாரம் செய்யும் நபர் வாகனத்தை தள்ளி செல்லும்பொழுது தலைகுப்புற கவிழ்ந்தது இதன் சிசிடிவி காட்சியுடன்.. அது கீழை நியூஸ் இணையத்தள செய்தியில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் வார்டு அதிகாரி விஜயகுமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் தற்காலிகமாக சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் 76வார்டு அதிகாரி விஜயகுமார் கூறும்போது தற்பொழுது மதுரை மாநகர் முழுவதும் முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது பணிகள் நிறைவடைந்தவுடன் நிரந்தரமான சாலைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் தற்காலிகமாக சாலைகளை சரி செய்ய உதவிய கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரைமாவட்டம்
You must be logged in to post a comment.