Home செய்திகள் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் 75 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் அன்னை சோனியா காந்தி 75வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் கோவிலில் சிறப்பு பூஜையும் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இல கணேசன் விவசாயிகளை போராட்டத்தை சமூக விரோதிகள் ஓடுகின்றனர் என்றும் புரோக்கர்கள் என்றும் கூறுவதை பதிலளித்த உழைக்கின்ற விவசாயிகளை புரோக்கர்கள் என்று சொல்லுகின்றனர். அதானிக்கு புரோக்கராக இருக்கின்ற பிஜேபி காரர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. அதுவும் வயது முதிர்ச்சி காரணமாக ரிட்டயர்மென்ட் வாங்க வேண்டிய வயதில் இப்படி விவசாயிகள் மேல் அவமானப்படுத்த நினைத்த செயலை ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்கள் செய்வதென்பது வன்மையாக கண்டிக்க கூடியது.நிவர், புரெவி புயல் சேதத்தில் பாதிக்கப்ப்ட விவசாயிகள் மற்றும் பயிர்களுக்கு நிவாரண தொகையை வழங்கிடவும்தமிழக அரசு முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்த 75 கோடி குறைவானது.மத்திய அரசு ரூபாய் 3 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.தமிழக அரசு டெல்லி தர்பார் அதுவும் மோடி அமித்ஷா அடிபணிந்து கிடக்கின்றது.நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் தமிழக அரசு குறிப்பாக கடந்த 70 ஆண்டு வரலாற்றில் எப்போதுமே முதலமைச்சர்கள் இவ்வளவு அடி பணிந்து நடந்து கொண்டதில்லை.தமிழக முதல்வராக மோதிக்கும். ஷாவிற்கும் அடிமைகளைப் போல நடக்கின்ற தமிழகத்தினுடைய முதலமைச்சர்.அடிமைத்தனத்தை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார் இவ்வளவு வளைந்து கொடுத்து மோதிக்கும், வாவிற்கும் அவர் செய்கின்ற பணிவிடை எந்த ஒரு பலனையும் தமிழகத்திற்கு ஈட்டவில்லை ..ரூபாய் 3 கயிரம்கோடி ரூபாய் கேட்டால் 75 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது.தமிழகத்தை இந்தியா தமிழகத்தை பொருத்தமட்டில் தமிழகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டுகிறது என்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.தொடர்ந்து தமிழகத்திற்கு உதவிகள் மத்திய அரசு தயக்கம் காட்டுகின்றனர். இது கண்டிக்கப்பட வேண்டியது தமிழகத்திற்கும் தமிழக அரசு கூறியிருக்கின்ற 3,000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் அப்படி வழங்கவில்லை என்றால் அதற்காக மத்திய அரசிற்கு எதிராக மாநில அரசு போராடியது பெற வேண்டும் ஆனால் போராடுவதற்கான தகுதியும் அது என்னமோ இல்லாத அரசாக பழனிசாமி உடைய கமிஷன் அரசு மாறி இருக்கிறது.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக தலைவரை விமர்சிப்பது குறித்த கேள்விக்குமங்குனி அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள எப்பொழுதுமே அதிகார போதை உச்சத்தில் இருப்பவர்.அவர் மங்குனி அமைச்சர் பால்வளத் துறையாக இருந்தாலும் சரி . உயர் நீதிமன்றத்தில் அவர் மேலிருந்த சொத்துக்குவிப்பு வழக்கு இருந்தாலும் சரி இவை அனைத்தும் மதசார்பற்ற கூட்டணி தளபதி ஸ்டாலின் அரசு வரும் பொழுது அந்த அரசினுடைய முதல் வேலையாக தமிழக முதலமைச்சராக பொறுபேற்கும் வேளையில் என்னுடைய கோரிக்கை என்னவாக இருக்கும் என்றால் அவருடைய சொத்துக்குவிப்பு வழக்கையும் அவர் செய்த ஊழலை விசாரிக்க கமிஷன் அமைத்து . விரைவாக அவரை சிறைக்கு அனுப்ப வேண்டிய பணி. அவர் விரைவில் சிறை சென்று கழி தின்பார்.. சந்தானம் மாதிரி காமெடி செய்கிறார் பாஜக தலைவர் முருகன் கண்ணாடி அவர் அணிந்திருக்கும் அந்த கண்ணாடியில் இப்படித்தான் தெரியும். அதற்கு பவர் கொறஞ்சு போச்சு முருகனை .பொருத்தமட்டில் அவர் தெளிவாகப் பேச வேண்டும் அவர் படத்தில் சந்தானம் போல் மாறிப் பேசக்கூடாது என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!