பழங்காநத்தம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் முறையான மின் விளக்குகள், தார் சாலை வசதிகள் ஏற்படுத்தபடவில்லை.ஆயினும் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றுக்கொண்டனர், பாலத்தின் ஒரு முனையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலரை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன், கார் உள்பட பல வாகனங்கள் இதன் வழியே செல்கின்றன,தற்போது மாநகராட்சி பாலத்தில் மேல் நடுப்பகுதியில் வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது…விபத்தை குறைப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் பாலத்தின் மேல் வேக்த்தடையை ஒட்டி இரு புறமும் வரிசையாக உடைகற்கள் வைக்கப்பட்டுள்ளது… கடந்த இரண்டு நாட்களில் இரவில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் இதனால் விபத்தில் சிக்கியுள்ளனர்.பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து முறையாக பராமரிக்காமல் மக்கள் பணம் வீணாக விரையம் செய்யப்படுகிறது.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.