10
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் பல்வேறுபட்ட நபர்கள் உள்ளார்கள் .அவர்களுக்கு போதிய உணவு நீர் இன்றி தவித்துக் கொண்டிருந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் முருகன் தலைமையில் அவர்களை மீட்டு மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு செலுத்தப்படும் வரை அவர்களுக்கு உணவு நீர் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படும் எனவும் மேலும் இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தபின் நோய் தொற்று எதுவும் இல்லை என்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள். நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப் படுவார்கள் எனவும் தகவல் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.