Home செய்திகள் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. ஒருவர் பலி..

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. ஒருவர் பலி..

by mohan

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே வெங்கல் நாயக்கன் பட்டியில் மோகன் என்பவருக்கு நவரத்தினா என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரில் இயங்கி வரும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறையினரால் வழங்கப்பட்டவை. நேற்று சுய ஊரடங்கு உத்தரவினால் நேற்று பட்டாசு ஆலை விடுமுறை அளிக்கப்பட்டு இன்று வடிக்கம் போல் காலை பட்டாசு ஆலை திறக்கப்பட்டன. இன்று வழக்கப் போல் பட்டாசு தொழிலாmர்கள் பணி ஈடுபடும் போது ஒரு அறையில் ராமமூர்த்தி என்பவர் பேன்ஸி ரக பட்டாசு தயாரிக்கும் போது கெமிக்கல் மருந்து தரையில் ஒராய்வு ஏற்பட்டு தீடிரென வெடி விபத்து ஏற்பட்டதில் ராமமூர்த்தி என்பவர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். மேலும் அவர் பணி புரிந்த அறை முற்றிலும் தரைமட்டமாயின. சம்பவ இடத்திற்க்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இச்சம்பவம் குறித்து வச்ச காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் மோகன், மற்றும் மேலாளர், போர் மேனன தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்க்கு சார் ஆட்சியர் தினேஷ் குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்பு தனி தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!