மலேசியாவை சேர்ந்த சுமார் 97 பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலமாக சென்னையிலிருந்து மலேசியா சென்றார்கள். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மலேசியாவிலிருந்து சுற்றுலாவுக்காக இந்தியா வந்தார்கள்.
இந்நேரத்தில்கொ ரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவால் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அனுபதியின் அடிப்படையில் மல்லிகா ஏர்லைன்ஸ் மூலமாக சுமார் 97 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (18/04/2020) பகல் 12.55க்கு மலேசியா செல்லும் விமானம் கொழும்பு வழியாக சென்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 82 பேரை ஏற்றிக்கொண்டு மலேசியா செல்கிறது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தவித்துக்கொண்டிருந்த மலேசியாவை சேர்ந்தவர்கள் தங்களது தாய்நாட்டுக்கு செல்வதற்கு உதவிய இந்திய அரசுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த தமிழக சேர்ந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.