மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் 29 கோடி ரூபாய் செலவில், அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை, அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள் ஆகிய திட்டப் பணிகளை, முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் நன்றி தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, புதூர் பூமிநாதன், வெங்கடேசன் மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.