Home செய்திகள் எல்ஐசி ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

எல்ஐசி ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.30 – எல்ஐசி பென்ஷன் தாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். எல்ஐசி யில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.12 நண்பகல் 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை 2 மணி நேரம் வெளி நடப்பு போராட்டம் எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக ராமநாதபுரம் எல்ஐசி கிளை அலுவலகம் முன் கிளை தலைவர் முத்துபாண்டி தலைமையில் இன்று (30/08/2023/ உணவு இடைவேளையில் ஆயத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் பிரதாப் வேலை நிறுத்தத்தை விளக்கி பேசினார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் விக்னேஷ், முதல் நிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஈஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார். கிளை பொறுப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார் .இதில் முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com