Home செய்திகள் தென்காசியில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்; தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..

தென்காசியில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்; தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..

by ஆசிரியர்

தென்காசியில் நடந்த திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசியில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ராஜா ஆகியோர் தலைமையில் இசக்கி மஹாலில் 29.08.2023 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 5-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளுக்கான ஆலோசனை வழங்கினார். பெண்களின் உரிமைத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக மூத்த முன்னோடிகள் 750 பேருக்கு பொற்கிளி வழங்கவும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. விழா நடைபெறும் இடத்தினை அமைச்சர் இராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் தென்காசி எம்.பி தனுஷ் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம், பொருளாளர் செரீப், மாவட்டச் செயலாளர்கள் ஜெயபாலன், ராஜா, தலைமை செயற்குழு செல்லத்துரை, ஜேசுராஜன், ஆறுமுகசாமி,ஷேக் தாவூது, முத்துப்பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் ராஜா, நகரச் செயலாளர்கள் சாதிர், அப்பாஸ், வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, கனிமொழி தமிழ் செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை ராஜேஸ்வரன், ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அழகு சுந்தரம், மகேஷ், மாயவன், ஜெயகுமார், செல்லதுரை, சுரேஷ், மாரிவண்ண முத்து, திவான் ஒலி, சிவன் பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் JK ரமேஷ், கனகராஜ், முத்துபாண்டியன், ஐவேந்திரன், தினேஷ், ஆறுமுகசாமி, சங்கரநயினார், பேரூர் செயலாளர்கள் முத்தையா சுடலை, பண்டாரம், குட்டி. சிதம்பரம், நாகராஜன், தங்கப்பா, நெல்சன், லெட்சுமணன், அழகேசன், வளன் அரசு, இஞ்சி இஸ்மாயில், செல்வகுமார், கோமதி நாயகம், மகளிர் அணி திவ்யா மணிகண்டன், சங்கீதா, பொன் செல்வன், சாம்பவர் வடகரை மாறன், மாநில விவசாயி அணி துணை செயலாளர் அப்துல் காதர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முத்துச் செல்வி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com