9
மேல் பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..
செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் புனிதா தலைமை தாங்கினார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்கள் எவ்வாறு தற்காத்து கொள்ளும் முறை., கை கழுவும் முறை, தன் சுத்தம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர் பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.