உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் பல வகையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
http://keelainews.com/wp-content/uploads/2020/03/IMG_9561.mp4இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்ற உத்திரவாதம் கொடுத்ததை. ஆனால் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற முறையான உத்தரவு இல்லாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள. மக்கள் சேவைக்கு சென்ற மருந்துவரையும் காவல்துறையினர் லத்தியால் அடித்த சம்பவம் நடந்தேறியது.
அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை மாற்றி, மாற்றி அறிவித்து வரும் ஊடகங்கள், மறுபுறம் வரும் உத்தரவு என்ன என்று கூட கவனிக்காமல் மக்களை தொல்லக்குள் உண்டாக்கும் காவல்துறை.
சிறுமியை கொலை செய்த குற்றவாளிக்கும், கல்லூரி மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியவர்களுக்கும், குற்றவாளிகளை தண்டிக்கும் அரசு அதிகாரிகளை கண்டிக்கும் மனித உரிமை ஆணையம், இப்பொழுது பொதுமக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தாக்குதலுக்கு ஆளாகும் பொழுது எங்கே சென்றது மனித உரிமை ஆணையம்.
இப்பிரச்சினைகள் ஒரு புறம் இருந்தாலும், தொற்று நோயின் வீரியம் அறியாமல் உதாசினமாக சுற்றி திரியும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
You must be logged in to post a comment.