இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்கள் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு உதவி…

அரசு உதவிபெறும் கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் பயின்று. அரசு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக அரிசி மற்றும் பருப்பு உணவு வகைகள் 150 மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் ஒரு மாத தேவையான அரிசி 3 கிலோ மற்றும் பருப்பு வகை வழங்கப்பட்டது.

அத்த்துடன்  இஸ்லாமியா துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தனலட்சுமி ஏற்பாட்டில், ஆசிரியர்கள் சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் உணவு பொருட்களுடன் தலா 100 ரூபாய் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில்  சத்துணவு அமைப்பாளர் திருமதி வித்யா, இஸ்லாமியா பள்ளி  செயல் அலுவலர் திரு மலைச்சாமி மற்றும் சக ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.