Home செய்திகள் ஆறு போல் ஓடும் கழிவுநீர் நோய்.. தொற்றில் தவிக்கும் பொதுமக்கள்….. கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்..

ஆறு போல் ஓடும் கழிவுநீர் நோய்.. தொற்றில் தவிக்கும் பொதுமக்கள்….. கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்..

by ஆசிரியர்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர் திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி கோவில் மற்றும் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் கழிவுநீர் குளம் போல தேங்கியு உள்ளது இதனை இதனை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவது உடன் அப்பகுதியில் குடிநீர் மாசு ஏற்பட்டு குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் மேலும் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி பேதி உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படுவதாகும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டதற்கு மோட்டார் பழுதாகி உள்ளது எனவும் இதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஒரு வாரத்துக்கு முன்பதாகவே நம்மிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகிறது நோய் தொற்று ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் முன் தூங்கிக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றன உயிரிழப்பு ஏற்படும் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்…

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!