ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த தாயகம் திரும்பியவர்களுக்கு சிறப்பான வரவேற்பு…

இந்த வருடம் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையை ஹஜ்ஜை நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் மூலம் சென்றவர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு 07-09-2017 அன்று சென்னை விமானம் நிலையம் வந்து அடைந்தார்கள்.

சென்னை வந்தவர்களுக்கு ரய்யான் ஹஜ் உம்ரா நிறுவனத்தின் சார்பாக பூங்கொத்து வழங்கி சிறப்பாக வரவேற்பு தரப்பட்டது. மேலும் தொழில் அதிபர் சாதிக் அலி மற்றும் ஜமாத்தார்கள், பல குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ரய்யான் நிறுவனம் மேலாளர் இப்புனித பயணத்திற்கு ஆதரவும், துவாவும் செய்த அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.