ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவரின் விசைப்படகில் ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர் வண்ணன் 43, தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம்(மேற்கு) சேசு 60, பாம்பன் அக்காள்மடம் சேதுபதி நகர் நஸ்ரேன் மகன் ஆஸ்டின் சுசீந்தர் 19 ஆகியோர் ஜூன் 13ல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
ஜூன் 14 ல் கரை திரும்ப வேண்டிய இவர்கள் ஜூன் 16 ஆம் தேதி வரை திரும்பவில்லை. மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காத மீன்வளத்துறை, தேடும் பணியில் ஈடுபடாத இந்திய கடலோரக் காவல் படையினரை கண்டித்து மாயமான மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாயமான மீனவர் 4 பேரில் ஜேசுவை, மல்லிபட்டினம் மீனவர்கள் ஜூன் 16ல் ஆபத்தான நிலையில் மீட்டு மணல்மேல்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். எஞ்சிய மீனவர்களை மீட்டு தரக்கோரி போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் ரெஜின் பாஸ்கர் உடல் மிக அழுகிய நிலையில் சேதுபாவாசத்திரம் கடற்கரையில் நேற்று (ஜூன் 19) முன் தினம் ஒதுங்கியது. கல்லூரி மாணவர் ஆஸ்டின் சுசீந்தர் உடலை மல்லிபட்டினம் அருகே கொள்ளுக்காடு பகுதி மீனவர்கள் நேற்று (ஜூன் 20) மீட்டனர். இந்நிலையில் மலர் வண்ணன் உடல் மல்லிபட்டினம் மீனவர்கள் கொள்ளுக்காடு கடற்கரையில் இன்று (ஜூன் 21) மீட்டனர்.
You must be logged in to post a comment.