16
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நகை கடையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் சிங்கப்பூர் நகை கடையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. தீபாவளி சமயமானதால் அநிகமான பொதுமக்கள் நடமாட்டம் இருந்தது, ஆனால் துரிதமாக செயல்பட்ட கள்ளிக்குடி மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.