விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓட்டம். அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு சரியில்லாத காரணத்தால் தப்பி ஓடியுள்ளார் என அறியப்படுகிறது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரானா தொற்று நோயாளி இரண்டு மணி நேரம் கழித்து அவரது வீட்டு வாசலில் வைத்து பிடிபட்டார். அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு சரியில்லாத காரணத்தால் தப்பி ஓடியதாக மருத்துவமனை அதிகாரிகளிடம் அவர் கூறினார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் மதியம் 3 மணி அளவில் விருதுநகர் காந்திபுரம் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வாட்ச்மேனை தள்ளி விட்டு ஓடி உள்ளார். அவர் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியுவில்லை. அதன்பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து அவரது வீட்டு வாசல் அருகே நின்று கொண்டிருப்பதாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏற்றி மீண்டும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் அரசு மருத்துவமனை அதிகாரிகள் விசாரித்தபோது அங்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்பதால் தான் தப்பி ஓடியதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனை பகுதியில் எந்தவித காவல்துறை பாதுகாப்பும் இதுவரை இல்லை. இதனால் சுலபமாக நோயாளி தப்பி ஓடியுள்ளார்.
எனவே மருத்துவமனை வளாகம் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பதே விருதுநகர் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.