Home செய்திகள் நீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்

நீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், எப்எஸ் ஏ – 2 வேதாளைமீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2018 ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு செ.ஹபீப், ந.களஞ்சியம்,

செ.காளிமுத்து, மு. முகமது அயூப்கான், மு.முஜிபுர் ரஹ்மான், வீ.நாகரத்தினம், செ.சீனி அகமது கபீர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக முடிவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தங்களது விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்ட மு.செல்லச்சாமி (காங்கிரஸ் மூத்த உறுப்பினர்) ச.கோவிந்தன் (வேதாளை ஊராட்சி திமுக கிளை செயலாளர்) சீ.முகமது இப்ராஹிம் ஷா (அதிமுக, முன்னாள் மேல மைப்பு பிரதிநிதி), சமூக ஆர்வலர் சு.முருகேசன் (நடு மனைக்காடு கிளை திமுக செயலாளர்) ஆகியோர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். போட்டியின்றி தேர்வு செய்தாக அறிவிக்கப்பட்ட 7 பேருடன், வழக்கு தொடர்ந்த பேரையும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2,229 உறுப்பினர்களில் இறப்பு உள்பட இதர காரணங்களுக்காக 316 உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். எஞ்சிய 1,913 உறுப்பினர்கள் இன்று நடந்த தேர்தலில் சுதந்திரமாக வாக்கு அளித்தனர். இராமநாதபுரம் கூட்டுறவு சார் பதிவாளர் கி.நா.பாலமுருகன் தேர்தல் அலுவலராகவும், . முத்துப்பேட்டை சேதுநகர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அந்தோணி கிரிமினாலி, கடல் முதல்வர் மாரிச்சாமி, கடல் மேற்பார்வையாளர் ம.முருகன் ஆகியோர் தேர்தல் உதவியாளர்களாக பணியாற்றினர். மீனவர் அடையாள அட்டையை உறுப்பினர்கள், சான்று ஆவணமாக காண்பித்து வாக்களித்தனர். வாக்குப் பதிவு வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் நாளை (20.7.19) எண்ணப்படுகின்றன. தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 24/7/19ல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு நாளை (20.7.19) அறிவிக்கப்படுகிறது. மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!