திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகசதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இவ்விழா சிறப்பாக நடைபெற தலைமை பொறுப்பு KKS தமிழ்செல்வன் ஜி மாவட்ட செயலாளாளரும்,தொகுப்புரை P நாகப்பாண்டி,ஆ.ஒ.இ.மு.தலைவர், ஆண்மீக ஆசியுரை கிரிசுவாமிகள்(இரமணகிரிஆசிரமம்குட்ளாடம்பட்டி)முன்னிலை C.வேலுச்சாமி(மா.வ.தலைவர் இ.மு) M.ஜெகன்(மா.பொ.செயலளார்.இ.மு) K.பாலன்(மா.வ ஒ.இ.மு) மற்றும் இந்து முன்னணிஅமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இவ்விழா நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நான்கு சக்கர வாகனங்களில் அமர்த்தப்பட்டு பேருந்து நிலையம் முன்பு நிருத்தப்பட்டிருந்த நிலையில் அமைப்பின் நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி தலைப்பாய் கட்டி அழகுபடுத்தியபின் தொண்டர்களும்மேலதாளம் முழங்க ஆரவாரத்துடன் கோசம் எழுப்பி கொடிகளைஅசைத்தபடியும் நடனம் புரிந்து தங்களுக்கிடையே உள்ள தேசபற்று ஒற்றுமையையும், பக்தி உணர்வையும் வலுப்பெறச்செய்தனர் அதன்பின் நடனத்துடன் ஊர்வலம் தொடங்கி சின்னாளபட்டி”பூஞ்சோலை”பொன்னன் கடைவழி,சேவா சங்கம்” அஞ்சுகம் காலனி, ஆதிலட்சுமிபுரம், ஆத்தூர் கோழிப்பண்ணை பிரிவு மற்றும் பல தளங்கள் வழியாக சென்று விழாநிகழ்வு நிறைவுக்குவந்தது இவ்விழாவில் பொதுமக்களும்”சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு விநாயகரின் அருள் பெற்றுச் சென்றனர் இதற்கிடையில் விழா நிகழ்விலும்,ஊர்வழநிகழ்விலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் ஆய்வாளர்களும்,காவல் அதிகாரிகளும் காவல் பணிமில் ஈடுபடுத்தப்பட்டனர் …
செய்தியாளர் திண்டுக்கல் மாவட்டம் அழகர்சாமி
You must be logged in to post a comment.