Home செய்திகள் இராமநாதபுரத்தில் மழையால் வழித்தடம் துண்டிக்கப்பட்ட 7 கிராமங்கள் – வீடியோ ..

இராமநாதபுரத்தில் மழையால் வழித்தடம் துண்டிக்கப்பட்ட 7 கிராமங்கள் – வீடியோ ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரயில் பாதை செல்கிறது. இக்கிராமத்திற்கு ரயில் பாதையை கடந்து அரசு டவுன் பஸ்கள் உள்பட இதர வாகனங்கள் அன்றாடம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தரைப்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்கும் பணி ரயில்வே மூலம் நடந்து வருகிறது. இதற்கு லாந்தை கிராம மக்கள் ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 5 .10. 2018 முதல் பெய்து வரும் தொடர் மழையால் தரைப்பாலத்தை  தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சுமார் 6 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்து போக்குவரத்து துண்டித்தது. இதனால் மாற்று வழியின்றி பெரிய தாமரைகுடி, சின்ன தாமரைகுடி, பண்ணந்தை, திருப்பானை, மக்கா நகர், அச்சங்குடி, லாந்தை கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த ஏழு கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார மகளிர் குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள் இன்று காலை மறியலுக்கு முயன்றனர். இவர்களிடம் ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் , தாசில்தார் சாந்தி மற்றும் ரயில்வே பாலங்கள் கட்டுமான பிரிவு பொறியாளர்கள் சமரசம் பேசினார். தீர்வு காணப்படாததால் வாந்தை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் காலை 10 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!