மதுரையில் வழக்கறிஞர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த சித்திரவேல் என்பவரது மகன் வழக்கறிஞர் சாமி மதுரை அண்ணாநகரில் தங்கி மதுரை மாவட்ட நீதிமன்றத்தி வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார் , இவர் மதுரை வண்டியூர் பகுதியில் அதிமுக பிரமுகர்களான ஜோதி, சீனி, சுந்தர், ரமேஷ் உள்ளிட்டவர்கள் நடத்தும் ரெக்ரியேஷன் கிளப்பில் இரவு நேரத்தில் பல்வேறு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக காவல் நிலையில் புகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும், காவல் துறையினரும் கிளப் நடத்துபவர்களுக்கே ஆதரவாக செயல்படுவதாக கூறி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி வழக்கறிஞர் சாமி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
செய்தி.ஜெ.அஸ்கர்
You must be logged in to post a comment.