ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) ஜூன் 13, 1831ல் இந்தியா தெருவில், எடின்பர்க் நகரத்தில் பிறந்தார். ஜான் கிளெர்க் மேக்ஸ்வெல் என்ற வழக்கறிஞர், மற்றும் ராபர்ட் ஹோட்ஷோன் கேயின் மகள் மற்றும் ஜான் கேயின் சகோதரி பிரான்சுஸ்.கே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இளம் பையனின் திறமையை உணர்ந்து, ஜேம்ஸின் ஆரம்ப கல்விக்கான மேக்ஸ்வெல்லின் அம்மா பிரான்சுஸ் பொறுப்பேற்றார். இது விக்டோரிய காலத்தில் பெரும்பாலும் குடும்பப் பெண்களின் வேலையாக இருந்தது. மேக்ஸ்வெல் எட்டு வயதில் அவர் மில்டனின் பத்திகள் மற்றும் 119 வது வேதவாசகங்கள் முழுவதையும் (176 வசனங்கள்) நீண்ட தொகுப்புகளை படிக்கும் திறன் பெற்றுறிருந்தார். அவரது தாயார் அடிவயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையில் தோல்வியுற்ற பின்னர், மேக்ஸ்வெல்லின் தாய் டிசம்பர் 1839ல் மேக்ஸ்வெல் எட்டு வயதில் இறந்தார். ஜேம்ஸ் கல்வி பின்னர் அவரது தந்தை மற்றும் அவரது தந்தையின் அண்ணி ஜேன் ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டது.
48
You must be logged in to post a comment.