மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்றிணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முருகேசன் துணைத்தலைவர் விஜயலட்சுமி ராஜேந்திரன் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ஆய்வாளர் நரேந்திர குப்தா தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் ஒருங்கிணைந்து பெருங்குடி ஊராட்சி பகுதியில் தூய்மை பணியில் மேற்கொண்டனர்.
பெருங்குடியில் தூய்மை பாரத திட்டத்தின் விழிப்புணர்வுக்காக மத்திய தொகுதி பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் ஜெயபாரதி பொதுமக்களிடம் கூறுகையில் இன்று மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டோம். இன்று போல் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி. சுரேஷ் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கினர்…
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.