தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஒ ஜி ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் சம்பத் வயது 40 இவர் ஒரு பார்வையற்ற பட்டதாரி ஆவார்.இவர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயில் பெட்டிகளில் புத்தகங்களை கையில் எடுத்து க்கொண்டு விற்பனை செய்து வந்தார். கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு காரணமாக மத்திய மாநில ஊரடங்கு அமலில் உள்ளதால் தனது சொந்த ஊருக்கு கால் நடையாகவே வந்து சேர்ந்தார். வந்த உடன் தன்னை அவ்வூர் சுடுகாட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அவ் வழியாக போவோர் வருவோர் அனைவரிடமும் தன்னை கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சை முகாமிற்க்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டுள்ளார். பஞ்சாயத்து தலைவரிடமும் கொரோனா பரிசோதனை காக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு தன்னார்வலர் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் ஓ ஜி ஹள்ளி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து ஆட்டோ மூலம் செட்டிக்கரை கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பரிசோதனை முகாமிற்க்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
Category:
செய்திகள்
பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி கிராமத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒகேனக்கல் குடிநீர் விநியோகம்: கசிவு நீரை பிடிக்கும் அவலம்..
by Askar
written by Askar
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சி எர்ரணஹள்ளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் மூலம் கிராமம் முழுவதிலும் குழாய்கள் அமைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் ஒகேனக்கல் குடிநீர் கிராமத்திற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப் படுவதால் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க முந்தி அடித்தபடி குடிநீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் பிடிப்பதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஒன்றிய நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கிராமத்தில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. தங்கள் அடிப்படை தேவைக்குகூட தண்ணீர் இல்லை என்றும் தண்ணீருக்காக பலகிலோ மீட்டர் தூரம் காலிகுடங்களுடன் சென்று ஒகேனக்கல் குடிநீர் குழாயில் எந்த பகுதியில் கசிவு நீர் வருகின்றது என்று பார்த்து காலிகுடங்களுடன் பலமணி நேரம் காத்திருந்து தண்ணீர் கொண்டும் வரும் அவலநிலையில் தான் உள்ளதாகவும், ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்படுவதால் பெருபாலன விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்பனை செய்து விட்டதாகவும், மனித தேவைக்கு குடிநீர் வேண்டும் என்பதால் கிராம மக்கள் கால்நடையாகவும், சைக்கிள் இருசக்கர வாகனம் என நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாக பொதுமக்கள் கண்ணீர் மல்கதெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒகேனக்கல் குடிநீரை கிராமத்திற்கு முறையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிச்சயிக்கப்பட்டப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாப்பிள்ளை கைது!
by Askar
written by Askar
நிச்சயிக்கப்பட்டப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாப்பிள்ளை கைது!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு என்பவரின் மகன் வடிவேலன்(30). இவருக்கும் திண்டிவனம் மரக்காணம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கலைச்செல்வி கர்ப்பமாகியுள்ளார். இதனைக் கலைச்செல்வி தொலைப்பேசி வாயிலாக வடிவேலனுக்குத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணத்தில் தடை ஏற்பட்டது.
வடிவேலனின் உறவினர்களிடம் பேசியும் எந்தவித முடிவும் எட்டப்படாததால் கலைச்செல்வி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து வடிவேலனை கைது செய்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கரதீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் தீவிர முயற்சி..
by Askar
written by Askar
இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து. தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் குடியிருப்பு பகுதியில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஐயர்சிகாமணி என்பவர் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று திடீரென அப்பகுதியில் குப்பையில் தீப் பிடித்ததை அடுத்து அருகிலிருந்த குடோனிலும் மளமளவென பரவி தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தீ குடோன் முழுவதும் எரிந்து கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறி வருகின்றனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த இராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவா? அல்லது முன் விரோதத்தால் யாரும் தீவைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் கரும்புகை சூழ்ந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசி அருகே தந்தையே தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்ச்சி, 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…
by Askar
written by Askar
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தில் தந்தையே தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்ச்சி 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ முனி(37) இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (28/05/2020) பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சிவமுனி தனது மனைவி வேலைக்குச் சென்ற நிலையில் தனது குழந்தைகள் சிவரஞ்சனி (8), விஜயலட்சுமி (9) சிவபிரசாத் (3) ஆகிய மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்ச்சி செய்துள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பின்புறமாக கதவை திறந்து பார்த்த போது குழந்தைகள் மூன்று பேரும் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தனர்.
உடனடியாக 4 பேரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதில் சிவரஞ்சனி (8) வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை சம்பவம் எதற்காக நடந்தது குடும்ப பிரச்சனையா அல்லது சொத்து பிரச்சனையா என்கிற கோணத்தில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விடாமல் பெய்த மழை; திருப்பரங்குன்றம் மலைப்பாதை செல்லும் படிக்கட்டில் அருவி போல் கொட்டிய நீர்; ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள்!
by Askar
written by Askar
விடாமல் பெய்த மழை; திருப்பரங்குன்றம் மலைப்பாதை செல்லும் படிக்கட்டில் அருவி போல் கொட்டிய நீர்; ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள்!
ஆறுபடை வீடுகளின் முதல் படைவீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று பெய்த கன மழையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் செல்லும் படிக்கட்டில் ஆறு போல நீர் வடிந்து ஓடியது.
மேலும் மலை முழுவதும் அருவி போல் கொட்டிய காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அதை கண்டுகளித்தனர். இதுவரை இது போன்று படிக்கட்டுகளில் நீர் வந்ததை பார்த்ததே இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று (28/05/2020) மாலை சரியாக மூன்று மணி முதல் பலத்த மழை பெய்து வந்தது சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டிய காரணத்தினால் படிக்கட்டுகளிலும் மற்றும் மலையின் மீதும் நீர் வழிந்தோடும் காட்சிகள் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் நாடு திரும்ப முடியாமல் அவதி:தமிழகத்திற்கும் அதிகமான விமான சேவையை இயக்க வேண்டும்;நவாஸ்கனி MP கோரிக்கை..
by Askar
written by Askar
எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் நாடு திரும்ப முடியாமல் அவதி: தமிழகத்திற்கு 3 விமானங்கள் மட்டும் இயங்க அட்டவணை வெளியீடு.
மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியது போல தமிழகத்திற்கும் அதிகமான விமான சேவையை இயக்க வேண்டும்:-வெளி உறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் களுக்கு; நவாஸ்கனி MP கோரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்றால் தாயகம் திரும்ப முடியாமல் 8000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் அவதியுற்று வருகின்றனர்,
இதில் நோயாளிகள், வியாபார மற்றும் சுற்றுலா விசாவில் சென்றோர் என பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியது போல் அதிக அளவில் விமானத்தை இயக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடாவுமான கே.நவாஸ் கனி கோரிக்கை விடுத்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜக மூத்த செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று அறிகுறி-அதிர்ச்சியில் பாஜக..
by Askar
written by Askar
பாஜக மூத்த செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று அறிகுறி-அதிர்ச்சியில் பாஜக..
பாஜகவின் மூத்த செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த சூழலில் மத்தியில் ஆளும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்களில் இதுவரை யாரும் கொரோனாவில் பாதிக்கப்படவில்லை. சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
ஒருவேளை சம்பித் பத்ராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், கடந்த சில நாட்களாக பத்ராவுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த பாஜக தலைவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடலாம்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அம்மன் சன்னதி அருகில் ஜவுளிகடை மீது இடிவிழுந்து பெரும் தீ விபத்து..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அம்மன் சன்னதியில் எதிரே உள்ள மூன்று மாடி ஜவுளிக் கடையில் மழையின் காரணமாக இடி விழுந்ததில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் நிலைய அதிகாரி தலைமையிலான குழுவினர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ அதிகமாக பரவிய காரணத்தால் தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் இரவு சுமார் 8 மணி அளவில் ஏற்பட்டதால் தீயணைப்பு பணியில் மதுரை மாவட்ட அலுவலர், மதுரை உதவி மாவட்ட அலுவலர், மதுரை மற்றும் துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை அலுவலக உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர் மற்றும் அனைத்து பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
இன்று (28/05/2020) மாலை 4 மணியிலிருந்து மதுரை நகர் முழுவதும், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம், மேலும் இந்த விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமல அடைந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
செய்தியாளர்கள் வி காளமேகம்மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரானா பாதிப்பையொட்டி “மஸ்கட்டில்” விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் நாளை (29/05/2020) முதல் நீக்கம்..!
by Askar
written by Askar
கொரானா பாதிப்பையொட்டி மஸ்கட்டில் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் நாளை (29/05/2020) முதல் நீக்கம்..!
ஓமான் நாட்டின் அரசாங்கம் ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி ஏப்ரல் மாதத்திலிருந்து விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனை வரும் வெள்ளிக்கிழமை (மே 29,2020) முதல் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 10 ம் தேதி முதல் மஸ்கட் பகுதியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஓமான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈத் விடுமுறை முடிந்ததையடுத்து அனைத்து வளைகுடா நாடுகளும் கொரோனாவிற்கு தங்களுடைய நாட்டில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அதே போல், ஓமான் நாட்டிலும் கொரோனாவிற்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவுகளின்படி, பொதுத்துறை ஊழியர்கள் அந்நாட்டில் படிப்படியாக பணிகளைத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31, ஞாயிற்றுக்கிழமை முதல், 50 சதவீத பொதுத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொற்றுநோய் பரவாமல் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கும் விதிகளை பொது மற்றும் தனியார் துறை விதிக்க வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டின் கொரோனாவிற்கான உச்சக் குழு அறிவுறுத்தியுள்ளது. பணிக்கு வரும் ஊழியர்களும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக கவசம், கையுறை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டை காவல்துறை சார்பில் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
by Askar
written by Askar
சுரண்டை காவல்துறை சார்பில் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணா சிங் ஆலோசனையின் பேரில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வர வலியுறுத்தி வரும் நிலையில், சுரண்டை பேருந்து நிலைய சாலையில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கி மூலம் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்ஐ ஜெயராஜ், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஜேக்கப், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அழகுசுந்தரம், ரமேஷ், சண்முகவேல், வேலாயுதம், ஓலி பெருக்கி உரிமையாளர் சங்க நிர்வாகி ஜெகன், போட்டோ ஸ்டுடியோ சங்க நிர்வாகி கிருபாகரன், மன்னா டிரஸ்ட் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் பாரத சாரண சாரணியர் இயக்கத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பாராட்டு!
by Askar
written by Askar
செங்கம் பாரத சாரண சாரணியர் இயக்கத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பாராட்டு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் அவர்களின் ஆலோசனையின்படி பாரத சாரண சாரணியர் இயக்க மாவட்ட செயலர் வெங்கடேஷ் தலைமையில் சாரண ஆசிரியர்களுக்கு உண்டு தன்னார்வப் பணி மேற்கொண்டனர். விடைத்தாள் திருத்தம் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு முக கவசம், கையுறைகள், கிருமிநாசினி, ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் சார் நான் ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
சாரணஆசிரியர்கள், பாலகுமார், வேலாயுதம், அன்பழகன், பகவான், கிருஷ்ணமூர்த்தி சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு தன்னார்வப் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து 2 நாட்கள் செய்துவரும் தன்னார்வப் பணி குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..
by Askar
written by Askar
வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வீரபாண்டி ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கார்த்திக் ஏற்பாட்டில் ஏழை,எளிய குடும்பங்களுக்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிவாரண உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலசுந்தரம் ,மாவட்ட தொண்டரணி செயலாளர் வீரகுமார் , ஒன்றிய செயலாளர் சசிகுமார்,இளம்பிள்ளை நகர செயலாளர் நாகராஜ் , பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி,வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒன்பது வருடங்களாக வழங்கப் படாத எட்டு மாத ஊதியம்! தமிழ்நாடு முதலமைச்சரால் மட்டுமே தீர்வு காண இயலும்:தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்..
by Askar
written by Askar
ஒன்பது வருடங்களாக வழங்கப்படாத எட்டு மாத ஊதியம்! தமிழ்நாடு முதலமைச்சரால் மட்டுமே தீர்வு காண இயலும்:தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்..
கடந்த ஒன்பது வருடங்களாக வழங்கப்படாத எட்டு மாத ஊதியம், நடப்பு ஆண்டான 2020 ஆம் ஆண்டிலாவது கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அவரால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
” படித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி,
ஓவியம், கணினி அறிவியல்,இசை, தையல், தோட்டகலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதி நேர ஆசிரியர்களாக தமிழ் நாடு அரசுபள்ளிகளில் பணிபுரிய உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான்.
கடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில் 99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்தப் பட்டனர். ஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும் அம்மாதத்திற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.
பின்னர் வந்த மே மாதம் பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் சென்று விட்டது. ஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை.
அடுத்த கல்வியாண்டும் பின்னர் துவங்கிவிட்டது.ஜூன் மாதம் பள்ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில்தான் முதன் முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில் மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல்ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது.
இதுவே சிக்கலுக்கு முதல் காரணம் இப்படி முதல் முறை விடுபட்ட 2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் இதுவரை கடந்த 8 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை. இதனால் ஒவ்வொரு வருக்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் 2014ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு 700 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது மாதம் 7700 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 9 ஆண்டு களாக பணி புரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நடப்பு மே மாதம் ஊதியம் உட் பட 8 வருடங் களாக வழங்கப்படாத மே மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
இதற்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடவும் வேண்டும்.
“இவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் சி செந்தில்குமார் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விவசாயத்தை அழிக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்:- ஈ ஆர் ஈஸ்வரன் கோரிக்கை..
by Askar
written by Askar
விவசாயத்தை அழிக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்:- ஈ ஆர் ஈஸ்வரன் கோரிக்கை..
இது சம்பந்தமாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது என்று சொன்னது போல வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டுக்கு வராது என்று தமிழக அரசு சொல்வது கவனக்குறைவை காட்டுகிறது.
வெளிநாடுகளிலே அழிவை ஏற்படுத்துகின்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடமாநிலங்களை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறது. பல கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிட்டே அழிக்கிறது. பாதிக்கப்பட்ட குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். கொரோனா பரவலில் இருந்து இந்தியா மீளாத நிலையில் வெட்டுக்கிளிகளுடைய தாக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மாநில மாவட்ட எல்லைகளை மூடியது போல தடுப்புகளை போட்டு வெட்டுக்கிளி பரவலை தடுக்க முடியாது. ஒரே நாளில் 200 கிலோமீட்டர் பயணம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்த வெட்டுக்கிளிகள் எவ்வளவு விரைவில் தமிழகம் வந்து சேர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திறமைவாய்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை போட்டும், வெளிநாடுகளில் வெட்டுக்கிளி பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பதை கேட்டறிந்தும் தீர்க்கமான திட்டங்களோடு இந்த அபாயத்திலிருந்து தமிழகத்தை காப்பாற்ற அரசு உடனடியாக அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தேவைப்படுகின்ற நிதியை தாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்புக் கொடியேந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..
by Askar
written by Askar
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்புக் கொடியேந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..
செங்கோட்டையில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்பு கொடியேந்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணையின் படியும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ச.பழனிநாடார் ஆலோசனையின் படியும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், குடிசையில் வாழும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசையும்,அதனை தடுத்து நிறுத்தாத மாநில அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கையில் கருப்பு கொடி ஏந்தி செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் எம்எஸ்.முத்துசாமி தலைமை தாங்கினார். நகரத்தலைவர் இராமர், மாவட்டத் துணைத்தலைவர் இராம்மோகன், முன்னாள் நகரத்தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஐஎன்டியுசி மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், நகர செயலாளர் இசக்கியப்பன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் ராஜீவ்காந்தி, வார்டுத்தலைவர் சுரேஷ்குமார், நகரப் பிரதிநிதி கோட்டைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று: அலச்சியம் காட்டும் நிர்வாகம்; அச்சத்தில் கிராம மக்கள்…
by Askar
written by Askar
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஜெர்த்தலாவ் ஊராட்சியில் உள்ள எண்டபட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இவருக்கு ஒரே நாளில் புதியதாகக் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர் தனது சொந்த ஊரான எண்டபட்டி, மணியாக்காரன்கொட்டாய், சர்க்கரை ஆலை என இரண்டு நாட்களில் மூன்று கிராமங்களை சுற்றி வந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.இது சம்பந்தமாக
ஊர் பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
பொதுமக்களின் புகாரை அடுத்து சுகாதாரத் துறை பணியாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து சென்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்ததால் பல்வேறு நபர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைப்பதில் ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் அமைக்காததால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் இருசக்கர வாகனம் நடைப் பயணமாகவும் உள்ளுக்கும் வெளியேயும் சென்று வருவதால் மற்ற பகுதிக்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வைரஸை வீட்டுக்கு கொண்டு வந்து பாதிப்பை அதிகப்படுத்த வாய்ப்பும் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இவர்களோடு சேர்த்து எட்டு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதியில் முழுமையாக அடைத்து கரோனா வைரஸ் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் அக்கினி நட்சத்திர இறுதி நாளான இன்று (வியாழன்) இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், மக்கள் மனதும் குளிர்ந்தது. மதுரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் மதுரை நகர் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அனல் காற்று வீசி வந்தது.
மதுரை நகர் பகுதியை தவிர, சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், மம்சாபுரம், அலங்காநல்லூர், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்தது.
திருமங்கலம் அருகே டி. கல்லுப்பட்டியில் புதன்கிழமை மாலை ஓருமணி நேரம் பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்து வருவதால், பல கிராமங்களில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு, கிணற்றுப் பாசன மூலம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஓன்றியத்தில், திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களும்அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
மதுரை நகருக்குள் மழை பெய்யாமல் வாட்டி வந்த நிலையில், அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், இன்று மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மதுரை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், தல்லாகுளம், தெப்பக்குளம், டி.ஆர்.ஓ.காலனி, சிந்தாமணி போன்ற பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. மேலும் பைபாஸ் சாலை பொன்மேனியில் உள்ள இ எம் எஸ் காலனியில் ஒரு மரம் ஒன்று விழுந்துள்ளது தற்பொழுது மழை கனமழை பெய்து வருவதால் தீயணைப்பு துறையினர் வரமுடியவில்லை குறிப்பாக தீயணைப்புத்துறை எதுக்கு தரைவழி தொலைபேசி எண் எனது தொலைபேசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பழுதாகி உள்ளது இதனால் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து இருக்க வாய்ப்புகள் உள்ளது இதனால் தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ள எனது 101 என்னை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இதற்கு மாற்று தொலைபேசி எண்ணை இணைய வழியாக சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களும் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது
மதுரை மாவட்டத்தின் குடிநீருக்காக வைகை அணையில் திறந்து விடப்பட்டிருந்த தண்ணீர் மதுரை வந்து சேர்ந்த நிலையில், மதுரையிலும் மழை பெய்தது மதுரை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி தொடங்கியது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிழ்வாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பாடாகி பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேவியர்களுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நநடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில் பணியாளர்கள், பட்டர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். திருவிழாவானது அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் 800 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்
by mohan
written by mohan
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காலகஸ்திநாதபுரம் ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையால்புரம் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் கபடி பாண்டியன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.