செங்கம் பாரத சாரண சாரணியர் இயக்கத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பாராட்டு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் அவர்களின் ஆலோசனையின்படி பாரத சாரண சாரணியர் இயக்க மாவட்ட செயலர் வெங்கடேஷ் தலைமையில் சாரண ஆசிரியர்களுக்கு உண்டு தன்னார்வப் பணி மேற்கொண்டனர். விடைத்தாள் திருத்தம் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு முக கவசம், கையுறைகள், கிருமிநாசினி, ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் சார் நான் ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
சாரணஆசிரியர்கள், பாலகுமார், வேலாயுதம், அன்பழகன், பகவான், கிருஷ்ணமூர்த்தி சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு தன்னார்வப் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து 2 நாட்கள் செய்துவரும் தன்னார்வப் பணி குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார்.
You must be logged in to post a comment.