திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி , வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம் ராம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலசபாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, கலசபாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் தணிக்கமலை , முக்கிய பிரமுகர்கள் கதிர்வேல், ஏழுமலை, கோபாலகிருஷ்ணன் வேடியப்பன் ,சிவா கலந்து கொண்டு தமிழக அரசு ஏற்படுத்தித் தருகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் மருத்துவ குழுவினர், மருத்துவ செவிலியர்கள் செல்வி லில்லிமேரி ,மல்லிகா, சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் சத்யா , சிப்பந்தி காந்தி ஊராட்சி துணைத்தலைவர் திவகார் , ஊராட்சி எழுத்தர் அண்ணாமலை , மற்றும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
Category:
செய்திகள்
மதுரை விமான நிலையத்திலிருந்து மேலும் 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
by mohan
written by mohan
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை போக்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிமாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை வெளிமாநிலத்தில் உள்ள ஆக்சிசன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு ஆக்சிஜன் நிரம்பிய பின் ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.அதேபோல் இன்று மதுரை விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது,கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள ஆக்சிசன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லவதற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்ட லாரிகள் அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனை நிரப்பிய பின் மீண்டும் ரயில் மார்க்கமாக டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இதுவரை மதுரையில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இதுவரை 9 டேங்கர் லாரிகள் கொண்ட செல்லப்பட்டது குறிப்பிடதக்கது.மொத்தம் 12 லாரிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் பகுதியில் பொது மக்களுக்கு தடையின்றி காய்க கிடைக்க தோட்டக்கலை மூலம் நகராட்சி நிர்வாகம் 50 வாகனம் மூலம் ஏற்பாடு
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி கிடைக்க தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகம் வார்டு வாரியாக சென்று விற்பனை செய்ய தடுப்பூசி போட்ட நபருக்கு மட்டும் அனுமதி வழங்கி அவருக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளது இவர்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்ய 50 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது .
அரசு நிர்ணயம் செய்த விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அவர்களுக்கு மொத்தமாக காய்கறி விற்பனை செய்யப்பட்டது.இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறும்போது வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து அவர்கள் மூலம் நகர் மற்றும் கிராம பகுதிக்கு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம் இதேபோல் தோட்டக்கலைத்துறை சார்பில் கிராம பகுதியில் விவசாயிகள் விளைவிக்கும் கீரை போன்ற காய்கறிகள் மகளிர் குழு மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இவர்கள் அனைவருக்குமே அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிகமான விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி அவளுக்கு அறிவுரை வழங்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி காரப்பட்டு கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பின்னர் திமுக அரசு பதவியேற்றவுடன் காரப்பட்டு கிராம ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்துகாரப்பட்டு கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.விழாவில் ….மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாரதி ராமஜெயம் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ , ஆறுமுகம் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தற்போது காரப்பட்டு கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் திறக்கப்பட்டுள்ளது அடித்து விவசாயம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் அருகே நூற்பாலையில் மின்சார மோட்டார் ஸ்விட்ச் போட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் வயது 50 இவர் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் .வழக்கம்போல் பணிக்கு வந்த இவர் இன்று பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதற்காக அங்கு இருந்த தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார் அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் சீதாராமன் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தில் பலியானார் பலியான சீதாராமன் உடலை அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் விபத்து குறித்து தளவாய்புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுந்தரராஜபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சேத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்ற அன்பழகன் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடித்து பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கண்ணன் என்ற அன்பழகன் அப்பகுதியில் இருந்து தலைமறைவு. இவர் மீது ஏற்கனவே விலங்குகள் வேட்டையாடியது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.மேலும் இந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பலத்த சத்தத்துடன் வெடித்தது காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையநல்லூரில் கொரோனா பேரிடர் மையமாக மாறிய பள்ளிவாசல்; தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு எம்எல்ஏ பாராட்டு..
by mohan
written by mohan
கொரோனா பெருந்தொற்று இந்தியா முழுவதும் பல்வேறு பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மக்களை காக்கும் பொருட்டு தமிழகம் முழுவதுமுள்ள 600 பள்ளிவாசல்களை கொரோனா கேர் சென்டராக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள மரியம் பள்ளிவாசலை கொரோனா பேரிடர் உதவி மையமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாற்றியது. இந்த உதவி மையத்தில் அவசர தேவைக்காக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், கையடக்க ஆக்ஸிஜன் கெலன்கள், ஆக்ஸிஜன் உருளைகள்,ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவமனை தகவல் மற்றும் வழிகாட்டுதல்கள்,பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை,
கபசுர குடிநீர், உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்தல், நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள்,அவசர கால இரத்ததானம், மேலும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பேரிடர்கால சேவை பணிகள் இந்த உதவி மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படும் வகையில் பல்வேறு மருத்துவ சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மையத்தை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற கொரானொ தடுப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார். அதன்பின் தவ்ஹீத் ஜமாத்தின் இந்த கொரோனா கால சேவைகளை தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்றார். இந்நிகழ்ச்சிக்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் செய்யது மசூது சாஹிப், துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம் , புகாரி,துணைத் தலைவர் அப்துல் காதர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், துணை தாசில்தார் ஞானசேகர் கொரோனா சேவை மையத்தை பார்வையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை பாராட்டி அறிவுரை வழங்கினார்.கொரோனா பேரிடர் கால உதவி மையம், டிஎன்டிஜே-003, தென்காசி மாவட்டம். தொடர்புக்கு: 9597705763
ஆக்ஸிஜன் தேவைக்கு:9976122408, 7200000477
மருத்துவமனை தகவல் மற்றும் வழிகாட்டுதல்: 95973 40450,8070523234
கபசுர குடிநீர் வழங்குதல் :8870704541
இறந்தவர் உடல் அடக்கம் செய்ய:9597705763,7373505070
நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு: 9715245822
அவசர கால இரத்ததானம்: 8870523234.உள்ளிட்ட அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின் போது சுற்றித் திரியும் நபர்களை போலிசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து எச்சரித்து அனுப்பினர்
by mohan
written by mohan
கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது இந்த நிலையில் ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்து கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் சிறுவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின் போது வெளியே சுற்றித் திரியும் நபர்களை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான போலிசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போது இளைஞர்கள் கேமராவை கண்டதும் ஓடி ஒளிந்து கொண்டனர், தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களையும், நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்களையும் உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன் அறிவுரை வழங்கி வெளியில் சுற்றக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் – விவசாயிகளின் குவியல்களிலேயே மீண்டும் முளைத்த நெல்மணிகளால் விவசாயிகள் வேதனை
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தற்போது கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.
நெல் மணிகளும் நன்கு விளைந்துள்ள சூழலில் கடந்த ஒரு மாதமாக அறுவடை பணிகளும் துவங்கியுள்ளது.இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யாத சூழலில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் விவசாயிகள் குவியல்கள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.தற்போதைய ஊரடங்கு நேரத்தில் வியாபாரிகளும் அதிகம் வருவதில்லை என்றும் வரும் ஒருசில வியாபாரிகளிலும் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.மேலும் தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் சூழலில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நெல் மணிகள் விவசாயிகளின் குவியல்களிலேயே மீண்டும் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைவில் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.பாலாற்றின் ஓரத்தில் இந்த பேரூராட்சி ஊர் உள்ளது. இந்த பகுதி அனைத்துக்கும் இங்கிருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.ஆனால் மணல் கொள்ளையாலும் ஆங்காங்கு பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் நீர் ஆதாரம் குறைந்துவருகிறது.மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீரும். பாலாற்றில் கலக்கிறது.இதனால் நீர் மாசுபடுவதோடு பல்வேறு நோய்கள் இப்பகுதி மக்களை நெருங்க உள்ளது.ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்ணை கட்டிகொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனையில் பேரறிவாளன் இருந்து வருகிறார்.சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் அனுப்பவேண்டும்.என்று அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனுஅளித்தார்.அதன்படி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.நேற்று புழல் சிறையிலிருந்து அனுப்பபட்ட பேரறிவாளன் மாலை அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.30 பேர் கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டுக்கு காவல் பணியை செய்துவருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரூ5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்
by mohan
written by mohan
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயக்குமார் உத்தரவுப்படி வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ராஜ்குமார்வாடகை எடுத்து வசிக்கும் வீட்டில்கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படிஅதிரடியாக நுழைந்த காவல்துறையினர் 1000 லிட்டர் கள்ளச்சாராயத்தையும்அண்டை மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 4500 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இவற்றின் மதிப்பு ரூ 5 லட்சமாகும்.மேலும் தப்பி ஓடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of United Nations Peacekeepers) (மே 29).
by mohan
written by mohan
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of United Nations Peacekeepers) எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை நினைவூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் நாள் அனுட்டிக்கப்படுகிறது. முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின் போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ஆம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. மே 29 1948 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது.
1948ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகின்றார். ஜூலை 13 1948ஆம் திகதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார். அதேபோல ஆகத்து 28, 1948 ஆம் திகதி “காசாப் பகுதியில்’ சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும், செப்டம்பர் 17 1948 ஆம் திகதி “கவுண்ட் போர்க் பெர்னடொட்” எனும் அமைதி காக்கும் வீரர், யுத்தத் தீவிரவாத இயக்கமான ‘ஸ்டர்ன் கேங்’ (STERN GANG) எனும் கும்பலினால் கொலையுண்டார். இவ்வாறாக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கலாயிற்று. எனவே அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விசேடமாக நினைவுகூரப்படுகின்றனர்.
யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே. அதாவது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.. யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது, நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நாவால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன்மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்குதல், ”சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயல்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே. இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நாவின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடவுள் துகள்’ எனப்படும் ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற தாமஸ் வேர் ஹிக்ஸ் பிறந்த தினம் இன்று (மே 29, 1929).
by mohan
written by mohan
பீட்டர் வேர் ஹிக்ஸ் (Peter Ware Higgs) மே 29, 1929ல் இங்கிலாந்தின் நியூகேஸில் அபன் டைனில் எல்ஸ்விக் மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை பிபிசியின் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்தார். குழந்தை பருவ ஆஸ்துமாவின் விளைவாக, தனது தந்தையின் வேலை மற்றும் பின்னர் இரண்டாம் உலகப் போரின் காரணமாக குடும்பத்துடன் சேர்ந்து நகர்ந்தார். ஹிக்ஸ் சில ஆரம்பகால பள்ளிப்படிப்பைத் தவறவிட்டு வீட்டில் கற்பிக்கப்பட்டார். அவரது தந்தை பெட்ஃபோர்டுக்கு இடம் பெயர்ந்தபோது, ஹிக்ஸ் தனது தாயுடன் பிரிஸ்டலில் தங்கியிருந்தார். அவர் 1941-46, முதல் பிரிஸ்டலில் உள்ள கோத்தம் இலக்கணப் பள்ளியில் பயின்றார். அங்கு பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான பால் டிராக், குவாண்டம் இயக்கவியல் துறையின் நிறுவனர்.
1946 ஆம் ஆண்டில், 17 வயதில், ஹிக்ஸ் சிட்டி ஆஃப் லண்டன் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவர் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் 1947ல் லண்டன் கிங்ஸ் கல்லூரிக்குச் சென்றார். அங்கு 1950ல் இயற்பியலில் முதல் வகுப்பு கவுரவ பட்டம் பெற்றார். 1952ல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1851 ஆம் ஆண்டின் கண்காட்சிக்கான ராயல் கமிஷனில் இருந்து அவருக்கு 1851 ஆராய்ச்சி பெல்லோஷிப் வழங்கப்பட்டது. சார்லஸ் கோல்சன் மற்றும் கிறிஸ்டோபர் லாங்குட்-ஹிக்கின்ஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மூலக்கூறு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டனின் கிங்ஸ் கல்லூரியிலிருந்து மூலக்கூறு அதிர்வுகளின் கோட்பாட்டில் சில சிக்கல்கள் என்ற தலைப்பில் 1954 ஆம் ஆண்டில் அவருக்கு பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டது.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ஹிக்ஸ் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்தார். அவர் 1960ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி, டைட் இன்ஸ்டிடியூட் ஆப் கணித இயற்பியலில் விரிவுரையாளர் பதவியைப் பெற்றார். 1949ல் ஒரு மாணவராக மேற்கு ஹைலேண்ட்ஸுக்குச் சென்றபோது அவர் அனுபவித்த நகரத்தில் குடியேற அனுமதித்தார். 1974ல் ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பர்க் (எஃப்.ஆர்.எஸ்.இ) இன் உறுப்பினரானார். 1980ல் தத்துவார்த்த இயற்பியலின் தனிப்பட்ட தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
எடின்பர்க் ஹிக்ஸ் முதன்முதலில் பருப்பொருள் நிறையில் ஆர்வம் காட்டினார். ஒரு கோட்பாட்டுத் துறையுடன் (ஹிக்ஸ் புலம்) தொடர்பு கொண்டதன் விளைவாக துகள்கள் – பிரபஞ்சம் தொடங்கியபோது பருப்பொருளற்றது – ஒரு நொடியின் ஒரு பகுதியை பருப்பொருள் பெற்றது என்ற கருத்தை உருவாக்கியது. இந்த புலம் இடத்தை ஊடுருவி, அதனுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து அடிப்படை துணைத் துகள்களுக்கும் பருப்பொருள் கொடுக்கும் என்று ஹிக்ஸ் குறிப்பிட்டார். குவார்க்ஸ் மற்றும் லெப்டான்களில் பருப்பொருள் நிறை வழங்கும் ஹிக்ஸ் புலத்தின் இருப்பை ஹிக்ஸ் பொறிமுறையானது குறிப்பிடுகிறது. இருப்பினும் இது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற பிற துணைத் துகள்களின் பருப்பொருள் நிறை ஒரு சிறிய பகுதியை மட்டுமே ஏற்படுத்துகிறது. இவற்றில், குவார்க்குகளை ஒன்றாக இணைக்கும் குளுவான்கள் துகள் பருப்பொருள் நிறை வழங்குகின்றன.
ஹிக்ஸின் படைப்புகளின் அசல் அடிப்படையானது ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டாளரும் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பரிசு பெற்றவருமான யோய்சிரோ நம்புவிடமிருந்து வந்தது. அமுக்கப்பட்ட விஷயத்தில் சூப்பர் கண்டக்டிவிட்டியில் என்ன நடக்கும் என்று அறியப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தன்னிச்சையான சமச்சீர் முறிவு எனப்படும் ஒரு கோட்பாட்டை பேராசிரியர் நம்பு முன்மொழிந்தார். இருப்பினும், கோட்பாடு பருப்பொருள் துகள்கள் (கோல்ட்ஸ்டோனின் தேற்றம்), ஒரு தவறான தவறான கணிப்பை முன்னறிவித்தது. கோல்ட்ஸ்டோனின் தேற்றத்தில் ஒரு ஓட்டை சுரண்டிக்கொண்டு ஒரு சிறு கட்டுரையை எழுதினார். ஒரு சார்பியல் கோட்பாட்டில் உள்ளூர் சமச்சீர் தன்னிச்சையாக உடைக்கப்படும்போது வெகுஜனமற்ற கோல்ட்ஸ்டோன் துகள்கள் ஏற்படக்கூடாது. 1964ல் அதை சுவிட்சர்லாந்தில் உள்ள CERN இல் திருத்தப்பட்ட ஐரோப்பிய இயற்பியல் இதழான இயற்பியல் கடிதங்களில் வெளியிட்டார்.
ஒரு தத்துவார்த்த மாதிரியை விவரிக்கும் இரண்டாவது கட்டுரையை ஹிக்ஸ் (ஹிக்ஸ் பொறிமுறை) எழுதினார். ஆனால் அது இயற்பியலுக்கு வெளிப்படையான பொருத்தமில்லை என்று நிராகரிக்கப்பட்டது. ஹிக்ஸ் ஒரு கூடுதல் பத்தியை எழுதி, மற்றொரு முன்னணி இயற்பியல் இதழான பிசிகல் ரிவியூ லெட்டர்களுக்கு அனுப்பினார். இது பின்னர் 1964ல் வெளியிடப்பட்டது. இந்த கட்டுரை ஒரு புதிய பாரிய சுழல்-பூஜ்ஜிய போசானை (ஹிக்ஸ் போஸான்) கணித்துள்ளது. இயற்பியலாளர்களான ராபர்ட் ப்ரட், பிரான்சுவா எங்லெர்ட், ஜெரால்ட் குரால்னிக், சி. ஆர். ஹேகன் மற்றும் டாம் கிபிள் ஆகியோர் ஒரே நேரத்தில் இதே போன்ற முடிவுகளை எட்டினர். இந்த போஸன் கண்டுபிடிப்பில் எழுதப்பட்ட மூன்று ஆவணங்கள் ஒவ்வொன்றும் இயற்பியல் மறுஆய்வு கடிதங்கள் 50 வது ஆண்டு விழாவால் மைல்கல் ஆவணங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த புகழ்பெற்ற ஆவணங்கள் ஒவ்வொன்றும் இதேபோன்ற அணுகுமுறைகளை எடுத்தாலும், 1964 பிஆர்எல் சமச்சீர் முறிவு ஆவணங்களுக்கு இடையிலான பங்களிப்புகளும் வேறுபாடுகளும் குறிப்பிடத்தக்கவை. 1962 ஆம் ஆண்டில் பிலிப் ஆண்டர்சன் ஒரு முக்கியமான சார்பியல் மாதிரியை சேர்க்கவில்லை என்றாலும் இந்த வழிமுறை முன்மொழியப்பட்டது.
ஜூலை 4, 2012 அன்று, அட்லாஸ் மற்றும் காம்பாக்ட் மூன் சோலெனாய்டு (சிஎம்எஸ்) சோதனைகள் ஒரு புதிய துகள் இருப்பதற்கு வலுவான அறிகுறிகளைக் கண்டதாக அறிவித்தது. இது ஹிக்ஸ் போசானாக இருக்கலாம். ஜெனீவாவில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஹிக்ஸ், “இது உண்மையில் என் வாழ்நாளில் நிகழ்ந்த ஒரு நம்பமுடியாத விஷயம்” என்று கருத்துத் தெரிவித்தார். முரண்பாடாக, ஹிக்ஸ் போசனின் இந்த உறுதிப்படுத்தல் இயற்பியல் கடிதங்களின் ஆசிரியர் ஹிக்ஸை நிராகரித்த அதே இடத்திலேயே செய்யப்பட்டது.
அக்டோபர் 8, 2013 அன்று, பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா எங்லெர்ட் 2013 இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. அணுவுட்டுகளின் நிறைத் தோற்றத்தினை அறிய உதவும் கருத்தியல் முறையில் கண்டுபிடித்தமைக்காக அறிவிக்கப்பட்டது. இந்தத் துகள் நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக கருதப்படுகிறது. இதுவரை இந்தத் துகளை எந்த துகள் முடுக்கி சோதனையிலும் காணாதபோதும் துகள் இயற்பியலின் செந்தரப் படிவத்தின் ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி. நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான். இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் போசான் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.
இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ‘கடவுள் துகள்’ எனப்படும் ஹிக்ஸ் போசான் துகள் கண்டறியப்பட்டு விட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மஹ்தூமியா சமுக நல அமைப்பு சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மஹ்தூமியா சமுக நல அமைப்பு சார்பாக கொரானா ஊரடங்கினால் வேலையின்றி வாழ்வாதரம் இல்லாமல் வாழும் நலிந்த 40 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளரும் அன்பு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான கொ.அன்புகுமார், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார்.
அந்த வகையில் அகரகீரங்குடி முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அப்பகுதியின் ஊராட்சிமன்ற தலைவர் கயல்விழி சரவணன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் சேர்ந்து வறுமையில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான கொலம்பஸ், அன்புராஜா, துணை ஊராட்சிமன்ற தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கே கே நகர் மகாத்மா பள்ளியில் அனைத்து வயதினருக்குமான கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கியது அப்போலோ மருத்துவமனை
by mohan
written by mohan
கோவிட் -19 க்கு எதிரான மாபெரும் மூன்றாவது கட்ட தடுப்பூசி முகாமை மதுரை அப்போலோ மருத்துவமனை தொடங்கியது. 18 வயது முதல் 45 வரை மற்றும் 45 வயது மேற்பட்டோருக்குக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இடமளிக்கும் பொருட்டு, தடுப்பூசி மையத்தை மகாத்மா மாண்டிசோரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை தனியார் பள்ளியில் அனைத்து வயதினருக்கான மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை தொடங்கும் முதல் தனியார் மருத்துவமனை மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தடுப்பூசி மையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை முயற்சி எடுத்து, தனியார் பள்ளியில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பயனாளிகளுக்கு தடுப்பூசி போட தினமும் ஆயிரம் பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி மையத்திற்கு வருவதற்கு முன் கோவின் அல்லது ஆரோக்யா சேது பயன்பாட்டில் முன்பதிவு செய்ய வேண்டும். இணைய பயன்பாட்டில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்படும்.
“கோவிட் இரண்டாவது அலை கோவிட் தொற்றின் எண்ணிக்கையை அதிவேகமாக உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் தினசரி லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலையுடன் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவே போராடி வருகிறது, மேலும் தொற்றின் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனை பல நெருக்கடியின் கீழ் தள்ளப்படுகின்றன, அதே நேரத்தில் கோவிட் நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இந்த இடைவிடாத கோவிட் தொற்றின் உயர்வைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த தீர்வாக அமையும் என்று மதுரை மகாத்மா குழும பள்ளிகளின் நிறுவனர் .பிரமலதா பன்னீர்செல்வம் கூறினார்.”அப்போலோ மருத்துவமனை அனைத்து வயதினருக்குமான கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது, மேலும் தடுப்பூசி வீணாவதை தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. எந்தவொரு நாட்டிற்கும் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான கருவியாக தடுப்பூசியே இருந்து வருகிறது. பொது மக்கள் மற்றும் எண்ணற்ற நிறுவனங்களின் பொது நலனை கருதி, தடுப்பூசி மையத்தை தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்து விரிவுபடுத்தியிருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் வழங்கப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். ஓரிரு நாட்களில் மட்டும் மகாத்மா மாண்டிசோரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் சுமார் 3000 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மதுரை பிரிவின் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் கூறினார். டாக்டர் பிரவீன் ராஜா உதவி இயக்குனர் மருத்துவ பிரிவு மற்றும் மணிகண்டன் விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெளியில் சுற்றினால் எமதர்மன் பிடிப்பது உறுதி. உசிலம்பட்டியில் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய போலிசார்.
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மேலும் பொதுமக்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் காவல்துறை சார்பில் நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இதன்படி எமதர்ம ராஜா வேடமணிந்த நபர் கொரோனா ஊரடங்கில் பைக்கில் வெளியில் சுற்றினால் கொரோனா பிடித்து உயிரிழந்து எமனிடம் வருவது உறுதி.அதனால் அனவசியமாக வெளியில் சுற்றாதீர்.காய்கறி வாங்க வாரம் ஒருமுறை வந்தால் போதும் எனப் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்.இந்நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன் தலைமையில் போலிசார் செய்திருந்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புறக்கணிக்கப்படும் கீழக்கரை முத்துசாமி புரம்… சீரமைக்க விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் அதன் சுற்றி உள்ள தெருக்களில் முறையாக வார்கால் அமைக்காததால் கழிவு நீர் நிரம்பி வழிகிறது. உடனடியாக நோய் தொற்று ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் என்றும், அங்கு உள்ள கழிவு நீர்களை அகற்ற வேண்டும் என்றும் முறையான வார்கால் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கீழக்கரை முத்துச்சாமி புரத்தில் வார்களில் கழிவு நீர் நிரப்பி ஓடி கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திர்வு இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் இங்கு நகராட்சியில் இருந்து யாரும் வருவதில்லை நோய் தொற்று பயத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
சிறு குழந்தைகள் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் நோய் சூழல் ஏற்படும் முன்பு நகராட்சி இதில் துரிதமாக செயல்பட்டு அங்கு உள்ள கால்வாய் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்றும் இருட்டான பகுதிகளில் மின் விளக்குகள் ஏறியவில்லை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தடுப்பூசி முகாம் அரசு போக்குவரத்து கழக குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்:
by mohan
written by mohan
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் இணைந்து தடுப்பூசி முகாம்மதுரை புறவழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை நடைபெற்றது இதில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர் அதன்படி இன்று 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி முகாமை கலந்துகொண்ட இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர் மேலும் அதிக வரவேற்பு பெற்ற காரணத்தினால் நாளையும்29/05/2021 தடுப்பூசி முகாம் நடைபெறும் என மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்தார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.