Home செய்திகள் மதுரை கே கே நகர் மகாத்மா பள்ளியில் அனைத்து வயதினருக்குமான கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கியது அப்போலோ மருத்துவமனை

மதுரை கே கே நகர் மகாத்மா பள்ளியில் அனைத்து வயதினருக்குமான கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கியது அப்போலோ மருத்துவமனை

by mohan

கோவிட் -19 க்கு எதிரான மாபெரும் மூன்றாவது கட்ட தடுப்பூசி முகாமை மதுரை அப்போலோ மருத்துவமனை தொடங்கியது. 18 வயது முதல் 45 வரை மற்றும் 45 வயது மேற்பட்டோருக்குக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இடமளிக்கும் பொருட்டு, தடுப்பூசி மையத்தை மகாத்மா மாண்டிசோரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை தனியார் பள்ளியில் அனைத்து வயதினருக்கான மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை தொடங்கும் முதல் தனியார் மருத்துவமனை மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தடுப்பூசி மையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை முயற்சி எடுத்து, தனியார் பள்ளியில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பயனாளிகளுக்கு தடுப்பூசி போட தினமும் ஆயிரம் பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி மையத்திற்கு வருவதற்கு முன் கோவின் அல்லது ஆரோக்யா சேது பயன்பாட்டில் முன்பதிவு செய்ய வேண்டும். இணைய பயன்பாட்டில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்படும்.

“கோவிட் இரண்டாவது அலை கோவிட் தொற்றின் எண்ணிக்கையை அதிவேகமாக உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் தினசரி லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலையுடன் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவே போராடி வருகிறது, மேலும் தொற்றின் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனை பல நெருக்கடியின் கீழ் தள்ளப்படுகின்றன, அதே நேரத்தில் கோவிட் நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இந்த இடைவிடாத கோவிட் தொற்றின் உயர்வைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த தீர்வாக அமையும் என்று மதுரை மகாத்மா குழும பள்ளிகளின் நிறுவனர் .பிரமலதா பன்னீர்செல்வம் கூறினார்.”அப்போலோ மருத்துவமனை அனைத்து வயதினருக்குமான கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது, மேலும் தடுப்பூசி வீணாவதை தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. எந்தவொரு நாட்டிற்கும் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான கருவியாக தடுப்பூசியே இருந்து வருகிறது. பொது மக்கள் மற்றும் எண்ணற்ற நிறுவனங்களின் பொது நலனை கருதி, தடுப்பூசி மையத்தை தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்து விரிவுபடுத்தியிருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் வழங்கப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். ஓரிரு நாட்களில் மட்டும் மகாத்மா மாண்டிசோரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் சுமார் 3000 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மதுரை பிரிவின் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் கூறினார். டாக்டர் பிரவீன் ராஜா உதவி இயக்குனர் மருத்துவ பிரிவு மற்றும் மணிகண்டன் விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!