தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டிற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பாக்கெட் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ராமநாதபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் திரவிய பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில பொதுச்செயலர் பிரவீன் குமார், மாவட்ட பார்வையாளர் கோவிந்தன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர். பொருளாளர் காளிராஜா, செயலாளர் ராஜேஸ்வரி, துணை தலைவர் பழனிக்குமார், மண்டல தலைவர்கள் கார்த்திகேயன், சண்முகநாதன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் எஸ்பி குமரன், அரசு தொடர்பு மாவட்ட நிர்வாகி முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
Category:
செய்திகள்
பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
by mohan
written by mohan
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது பெருங்குடி அமுதம் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் துணை ஆட்சியர்,நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன்,கள்ளிக்குடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம், ) நீலாதேவி, திருப்பரங்குன்றம் வட்டாட்சிய வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா , பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்ம முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி ராஜேந்திரன், ஊராட்சி அலுவலர் செந்தில் வேல் முருகன் ஆகியோர் மக்களின் முதல்வர் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக மதுரை, தேனி,திண்டுக்கல் பகுதிகளில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பத்தாம் மற்றும் பண்ணிரென்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும்,அரசு கள்ளர் பள்ளிகளுக்கும் விருது வழங்கும் விழிப்புணர்வு விழா மதுரை ஆரப்பாளையம் சிவபாக்கியா மகாலில் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவினைமூத்த தி.மு.க உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம், தொழிலதிபர் சோலை ரவி குத்துவிளக்கு ஏற்றி துவிக்கி வைத்தனர் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர்.விழாவினை கள்ளர்நாடு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் வல்லாளதேவன் செயலாளர் பிரேம்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.கள்ளர்நாடு நிர்வாகிகள் மற்றம் மாணவ மாணவிகள் 1000 பேர் 33 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசியில், ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாட்டம்…’பூத்தேரில்’ எழுந்தருளிய சுவாமிகள்.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திருவாதிரை திருவிழா வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், மார்கழி மாத திருவாதிரை நாளை ‘ஆருத்ரா’ தரிசனமாக பக்தர்கள் கொண்டாடுவார்கள். இன்று திருவாதிரையை முன்னிட்டு சிவகாசியில் இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமைப்பண்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஸ்ரீநடராஜர் – ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீநடராஜர் – ஸ்ரீசிவகாமி அம்பாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பூத்தேரில் எழுந்தருளினர். மேலும் இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் இருந்து சுவாமிகள் கடைக்கோவிலில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். மேலும் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீகாமாட்சி அம்மன் பூத்தேரில் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் எழுந்தருளிய சுவாமிகள், நான்கு ரதவீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பூத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வரும் சுவாமிகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரம்பரியமிக்க பண்டிகைகளில், அனைத்து தரப்பு மக்களும் சாதி மத சமூக சமுதாய வேறுபாடின்றி கொண்டாடப்படும் சமத்துவ திருவிழா தைப்பொங்கல் பண்டிகை ஆகும். தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டாடப்படும் ஒற்றுமைக்கான ஒரு விழா தைப்பொங்கல் திருநாள்கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணம் உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானை வழிபடும்நிகழ்வு இன்றளவும் விவசாயம் செழிக்க வேண்டும் என்று பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் தமிழர்களின் பண்பாட்டை காத்து வரும் மக்கள் அனைவரும் கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் திருநாள் போற்றப்படுகிறது. மேலும், இந்த விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு இணங்கபோகிப் பண்டிகைதைப்பொங்கல் திருநாள் காணும் பொங்கல் என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பை உருவாக்கி அந்த விழாவிற்கு இன்றுவரை பெருமை சேர்க்கும் விதமாக உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு உன்னத திருவிழா பொங்கல் பண்டிகையாகும்..இந்த திருவிழா ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருள் கரும்புச் சாறில் இருந்து காய்ச்சி எடுக்கப்பட்ட ராட்சத இரும்பு கொப்பரைகளில் காய்ச்சப்பப்பட்டு மலையாள மண்ட வெல்லம் தயாராகிறது .அதேபோல் ,புது பானையைஅலங்கரிக்கும் மஞ்சள் கொத்து செடிகளும் செங்கரும்பும் பாரபட்சமின்றி பயன்படுத்தப்படும் பொருளாக கருதப்படுகிறது.இவ்வாறு பழம் பெருமையும் பாரம்பரியம் வாய்ந்த , செங்கரும்பு மலையாள மண்ட வெல்லம் ஆகியவை பொங்கல் பண்டிகைக்காகமதுரை மாவட்டம்,
அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
அதே போல், மஞ்சள் கிழங்கு செடிகளும் ஆறுவடைக்காக தயார் நிலையில் உள்ளது.மதுரை மாவட்டத்தின் வட பகுதியான அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் செடிகள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகெங்கிலும் ஏற்றுமதி ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டாரப் பகுதியில்கரும்பு அரவை செய்து சாறு பிழிந்து ராட்சத கொப்பரையில் காய்ச்சி எடுத்த பக்குவப்படுத்தப்பட்ட மலையாள மண்ட வெல்லம் வெல்லம்உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மலையாள மண்ட வெல்லம் பெயர் காரணம்,கரும்புச்சாறில் இருந்து பாதுகாக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட வெள்ளம் தேங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் உருண்டைகளாக பொருத்தப்பட்டு வெல்லத்திற்கான உருவம் தரப்படுகிறது வெள்ளம் என்பது அச்சு வெல்லம் ,உருண்டை வெள்ளம், மண்ட வெல்லம் என்று பலவித உருவங்களில் செய்யப்பட்டு வந்தாலும் எந்தவிதமான அச்சுகளும் பயன்படுத்தாமல் கைகளினால் உருண்டைகளாக பிடிக்கப்பட்டு செய்யப்படும் இந்த வெல்லத்தை மலையாள மண்ட வெல்லம் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு தயாராகும் வெல்லம் அதிக அளவில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் காரணங்களால இதற்கு மலையாள மண்ட வெல்லம் என்று பெயர் வந்ததாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் ,ஓணம் பண்டிகை காலத்தில் கையில் உருட்டப்பட்ட வெல்லத்திற்கு கேரளாவில் அதிக மவுசு உள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி ஒன்றியம், இரும்பாடி கருப்பட்டி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அங்கு சுகாதார நிலையம் அமைத்தால், இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி ,கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் கணேசபுரம், பொம்மன்பட்டி, கரட்டுப்பட்டி கீழ்நாச்சிகுளம், மேல் நாச்சிகுளம், சாலட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெறுவர். இந்த மூன்று ஊராட்சிகளுக்கும் சேர்த்து கருப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சரியான இடம் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .மேலும், கடந்த 1972 ஆம் ஆண்டு வரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சிறிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்ட இடம் சுமார் 72 சென்ட் உள்ளதாகவும்,இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றும் ,இரும்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் ஐந்து முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து, மதுரையின் ஆட்சியர்களாக இருந்த விஜய் ,அனீஸ் சேகர், மற்றும் தற்போதைய ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் மனு அளித்ததாகவும் கூறுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடமும் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியரத்திடமும் கோரிக்கை வைத்ததாக கூறுகின்றனர். இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அமைப்பதால் இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஊராட்சியில் முறையே சுமார் 850, 1250, 1200 குடும்ப அட்டைதார்களுக்குட்பட்ட சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவர். மேலும் ,தற்போது இந்த மூன்று ஊராட்சிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் வார சிகிச்சைக்காக மன்னாடிமங்கலம் சுகாதார நிலையத்திற்கும் சோழவந்தானுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது இதனை கருத்தில் கொண்டு கருப்பட்டி திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள 72 சென்ட் இடத்தில் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ, பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தங்களது நிதியிலிருந்து கணிசமான தொகையை ஒதுக்கி நேரில் ஆய்வு செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் மதகு உடைப்பு ஏற்பட்டு வடிவேல் கரையில் புகுந்த வெள்ளம்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை- விளாச்சேரி வழியாக நிலையூர் – கம்பிக்குடி கால்வாய்க்கு நீர் நிலையூர் கண்மாய் பகுதி வழியாக வருகிறது.இந்நிலையில் விளாச்சேரிக்கு கால்வாய்க்கு வரும் தண்ணீர் வடிவேல் கரை கிராமம் அருகே உள்ள மதகு உடைப்பு ஏற்பட்டு இடையில் தம்பிக்குடி கால்வாய் க்கு செல்லும் நீர் முழுவதும் வடிவேல் க்கரை கிராமத்திற்குள் சென்றது ,இதனால் வடிவேல் கரை கிராமத்தில் வயல்வெளிகள் மற்றும் வீடுகளில் வெள்ளத்தில் சிக்கியது .இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடிவேல் கரை மதகை சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.மதகு உடைந்து திடீரென புகுந்த வெள்ள நீரால் வடிவேல் கரை பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் கண் மருத்துவமனையில் கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை திருடிய இளைஞர் கைது
by mohan
written by mohan
மதுரை அடுத்த திருநகர் ஜி எஸ் டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் (வாசன்) கண் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் மருத்துவ மனை முன்பக்கம் பூட்டிவிட்டு சென்ற நிலையில் மறு நாள் காலை வந்து பார்த்த போதுமுன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வரவேற்பு அறையில் இருந்த கம்ப்யூட்டர் யு பி எஸ் போன்ற போன்ற பொருட்கள் திருட்டு போயிருந்தது குறித்து அதிர்ச்சி அடைந்த மேலாளர் அப்சல் ஹக்கீம் திருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.சிசிடிவி காட்சியில் ஒருவர் பொருட்கள் திருடி சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் அந்த மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் கொத்தனார் வேலை செய்த சுல்தான் மகன் பைசூல் என்பதும். அவர் மது போதையில் மருத்துவமனையில் திருடிசென்றதும் தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் திருடி சென்ற பொருட்களையும் மீட்டனர்..திருட்டு நடந்த 24மணி நேரத்தில் திருடனை பிடித்து பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிலுள்ள மயிலாடு;ம்பாறையிலிருந்து மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள மள்ளப்புரம் வரை மலைப்பகுதியில் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை பஸ் வசதி செய்து தரப்படவில்லை. எம்.கல்லுப்பட்டியிலிருந்து மள்ளப்புரம் வழியாக மயிலாடும்பாறைக்கு பேருந்து வசதி ஏற்ப்படுத்தப்பட்டால் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களும் கிராம மக்களும் பயன் பெறுவார்கள்.இது குறித்து இப்பகுதி மக்கள் சுமார் 30 ஆண்டுகளாக பேருந்து வசதி கேட்டு அரசிடம் பலமுறை மனுக் கொடுத்தும் பதில் இல்லை.
இந்நிலையில் எம்.கல்லுப்பட்டியிலிருந்து மயிலாடும்பாறைக்கு அரசு பேருந்து வசதி ஏற்ப்படுத்தக் கோரி எம்.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் கிராம மக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டங்களாக சாலை மறியல் மற்றும் 50 கிராமங்கள் பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் தொடர்பாக விசாரணைக்கு வருவதாக தகவலையடுத்து பரபரப்பு.
by mohan
written by mohan
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூபாய் 20 லட்சம் பெற்றார் இதனை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.மேலும் லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக அங்கி திவாரி வீடு மற்றும் மதுரையில் உள்ள மரக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் கடந்த 01. 12.23 அன்று சோதனை மேற்கொண்டனர்.கடந்த 01.12.23 அமலாக்கத்துறை மதுரை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்ற தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் சங்கர் ஜுவாலிடம் மதுரை மண்டல அமலாக்க பிரிவு உதவி ஆணையர் பிரிஜேஸ் பணிவால் புகார் அளித்தார்.இந்த புகாரை தொடர்ந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் (இன்று) (26.12.23) விசாரணை நடைபெறுவதையொட்டி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தல்லாகுளம் போலீஸார் ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளனர்.இதனால் இன்று காலை முதல் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பரபரப்பிக காணப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2004 சுனாமிக்கு பின் தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைந்தது என் தெரியாமல் நிர்மலாசித்தாரம்மன் கூறுகிறார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா எம்எல்ஏ பேட்டி
by mohan
written by mohan
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜ்மல் கான் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹர்லால் எம்எல்ஏ செய்தியாளர் சந்திப்பு.தமிழ்நாட்டில் டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை காஞ்சிபுரம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நூறாண்டு காலம் காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் பெய்யாத அளவிற்கு ஏறத்தாழ 90 சென்டிமீட்டர் அளவிற்கு ஒரு சில நாட்களிலேயே மழை பெய்துள்ளது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் அதேபோல மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் மக்களை மீட்கக்கூடிய பணியில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணிகளிலும் எங்களுடைய துணைத் தலைவர் பிஎஸ் ஹமீது தலைமை நிர்வாக உறுப்பினர் ஜோசப் தலைமையில் பல்வேறு மீட்பு குழுவினர் நிவாரண பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் தரக்கூடிய தகவல்களை பார்க்கும் பொழுது இது ஒரு மிக மோசமான பேரிடராக அமைந்திருக்கிறது தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக இந்த பேரிடரை நேஷனல் ஹலாமிக் ஆப் அரெஸ்ட் என மிக அரிதாக நிகழக்கூடிய கூடிய பேரிடராக இதை அறிவிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒன்றியத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த தமிழ்நாட்டில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரிடரை தேசிய பேரிடர் என்று அறிவிக்க முடியாது என்று இதற்கு முன்பாக இந்தியாவில் எந்த பேரிடரும் தேசிய பேரிடராக அல்லது மிக மோசமாக பேரிடராக அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.2004இல் சுனாமி தாக்குதல் பொழுதும் கூட அது தேசிய பேரிடர் இல்லை என்று அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு வஞ்சகம் செய்கிறார் ஒன்றிய பாஜக அரசிற்கு தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை இல்லை என்று எடுத்துக்காட்டும் வகையில் தான் நிர்மலா சீதாராமனின் பேச்சுகள் அமைந்துள்ளது.காரணம் என்னவென்றால் 2904 சுனாமிக்கு பிறகு தான் 2005 நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அதாவது தேசிய பேரிடர் மேலாண்மை குழு உருவாக்கப்பட்டு அதற்காக ஒரு அதிகாரக் குழுவும் அமைக்கப்பட்டது.அதற்குப் பிறகுதான் ஒரு மாநிலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வு ஒரு இயற்கை பேரழிவு அதன் தன்மையை பொறுத்து அதற்கான அதற்கான தேசிய பேரிடர் கான அதன் தன்மையை பொறுத்து ஒன்றிய அரசு அறிவிக்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரிடர்களை எல்லாம் தேசிய பேரிடர்களாக அறிக்கை மட்டும் என்று அவர்கள் சொல்லக்கூடியது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்ன காரணம் என்றால் 2013ல் உத்தரங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மிகத் தெளிவாக அதாவது மிக மோசமான இயற்கை பேரழிவு என்று அறிவிக்கப்பட்டது..அது மட்டுமல்லாமல் 2014இல் என்று பேரிடப்பட்ட குட் கூத் என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய புயல் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்ட பொழுது அதுவும் தேசிய பேரிடராக மிக மோசமான பேரிடராக அறிவிக்கப்பட்டது.. எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் மிக மோசமான பேரிடர் என்று குறிப்பிட ஒன்றிய அரசுக்கு மனமில்லை.அவர்கள் தரக்கூடிய தருவதாக கூறிய நிதி கூட வழக்கமாக வரக்கூடிய ஒரு நிதிதான் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே இந்திய அரசுக்குநாம் செலுத்தக்கூடிய வரி மூன்று மாநிலங்களில் ஒன்றாக பெரிய அளவிற்கு வரியே செலுத்துகின்றோம்.ஆனால் அதற்கு பதிலாக ஒன்றிய அரசுக்கு பதிலாக நமக்கு தரக்கூடிய வரிநிதி மிக மிக குறைவாக ஒரு ரூபாய் செலுத்திகிறோம் என்றால் வெறும் 26 பைசா தான் நமக்கு திரும்ப வருகின்றது தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய துயரங்கள் ஏற்பட்ட பொழுதிலும் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியை தர மறுக்கின்ற பாஜக அரசும் மோடியின் தலைமையிலான அரசும் தர மறுக்கின்றனர்.தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்கக்கூடிய நிதியை கொடுக்க கொடுக்க முடியாததும் அவர்கள் தமிழக மக்களின் மேல் அக்கறை இல்லாததையும் காட்டுகின்றது அவர்கள் அக்கறைப்பட வேண்டும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்ககூடக்ஷடிய இந்த பெருந்துயரில் இருந்து அவர்களை மீட்க தமிழக அரசே கேட்கக்கூடிய நிதியை கொடுக்க வேண்டும்.எல்லாம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள் இல்லை பொருட்கள் எல்லாம் போய்விட்டது வீடுகளில் சமைப்பதற்கு பாத்திரங்கள் இல்லை இப்படி பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு கேட்கக்கூடிய நிதியை ஒன்றிய அரசு வழங்கி தமிழ்நாடு மக்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை நிரூபிக்க வேண்டும்.ஜிஎஸ்டி வரிகள் அதிலும் பாரபட்சமாக தான் உள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரம் கோடியும் தமிழ்நாட்டிற்கு 2600 கோடி தான் கொடுத்துள்ளார்கள் எல்லா விஷயத்திலும் ஜிஎஸ்டி முறையில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்ற கேள்விக்குஅதாவது அதை தான் நான் குறிப்பிட்டுள்ளேன் தமிழ்நாட்டில் நாம் ஒரு ரூபாய் மரியாதை செலுத்துகின்றோம் நமக்கு வருவது 26 பைசா தான் ஆனால் உத்தர பிரதேசம் ஒரு ரூபாய் செலுத்தினால் அவர்கள் சுமார் மூன்று ரூபாய் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பெறுகின்றனர் எனவே இது ஒரு பாரபட்சமான போக்கு மோடி ஆட்சியில் மிக மோசமான பாரபட்சமாக உள்ளது அதில் தமிழ்நாடு மிகவும் மோசமாக உள்ளது என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாய மக்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதாது. -ஓபிஎஸ் பேட்டி
by mohan
written by mohan
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருக்கு கூறுகையில்:தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என குறித்த கேள்விக்கு:திமுக அறிவித்ததா அல்லது தமிழ்நாடு அரசு அறிவித்ததா என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அதைப்பற்றி விரிவான அறிக்கையை நேற்றே வெளியிட்டு இருக்கிறேன்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஞானசாஸ்தா ஐயப்ப பக்தர்களின் 22– வது ஆண்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது. மூலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மூன்று நாட்களாக நடைபெற்றது.முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலை நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கீர்த்தனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.இரண்டாம் நாள் சனிக்கிழமை இரவு அனைத்து ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜையும், நாம சங்கீர்த்தன பஜனையும், மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுவாமிக்கு சிறப்பு ஆலங்கராம் அன்னதானம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை ஸ்ரீசடைஉடையார் சாஸ்தா திருக்கோவில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.படவிளக்கம்: சிறப்பு அலங்காரத்தில் பூர்ணா, புன்னைவனத்தாய்,சமேத சடைஉடையார் சாஸ்தா..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்த்தில் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் நடத்தும் தேசிய நுகர்வோர் தின விழா தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து நடைபெற்றது முன்னதாக தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி பேரணியை துவக்கி வைத்தார். தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து நுகர்வோர் தின விழா கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மைய செயலாளர் லட்சுமண சாமி வரவேற்று பேசினார். விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் முனைவர் மனோகரன் சாமுவேல் அறிமுக உரையாற்றினார். விழாவில் நுகர்வோர் உரையை டாக்டர் சி. பாக்கியலட்சுமி வழங்கினார். சிறந்த ஊழியருக்கான விருதினை ஆதார் அமைய சேவகர் நொண்டி கருப்பன் அவர்கள் பெற்றார் மேலும் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் ராமசுப்பிரமணியன் போக்குவரத்து ஆய்வாளர் லாவண்யா மற்றும் அவினாஷ் திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள். விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி நிறைவுரை ஆற்றினார். வழக்கறிஞர் ராஜேந்திரன் நன்றி கூறினார். விழாவில் விருதுநகர், இராஜபாளையம், தேசிகாபுரம், மவுண்ட் சீயோன், எட்டிசேரி, அழகாபுரி, அருப்புக்கோட்டை, கொடைக்கானல், சோழபுரம் என்ற பகுதிகளை சேர்ந்த நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கையற்கன்னி நகர் பகுதியில் மீனாட்சி நகர் விரிவாக்கம் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அடிப்படை தேவையான சாலை வசதி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “அடிப்படைத் தேவையில் ஒன்றான சாலை வசதி இந்த பகுதியில் பூர்த்தி அடையாமல் உள்ளது. பொதுமக்கள் சென்று வருவதற்கு எதுவாக தார் சாலை அமைக்கவில்லை. மண்பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது சாலை சேறும் சகதிமாக மாறி விடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருவதுடன் பொதுமக்களும் அதில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.மேலும் இதன் அருகே ஊராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால் இங்கே கொட்டப்படும் குப்பை கழிவுகள் மழை நீரில் கலந்து நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மீனாட்சி நகர் விரிவாக்கம் பகுதியில் தரமான சாலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அறிவுறுத்தல் படி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் ஆலோசனை படி கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், பரமக்குடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ஆகியோர் திருப்புல்லாணி வட்டாரம் உத்தரகோசமங்கை நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர். அனைத்து கடைகளில் உரிமம், பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கலப்பட டீத்தூள், எண்ணெய் மறு பயன்பாடு, கோழி இறைச்சி வறுவலில் வண்ணப் பொடி அதிகம் பயன்படுத்தக் கூடாது, வடை, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் பலகார தயாரிப்புகளை கண்ணாடி கூண்டில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அனைத்து கடை உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டது.வண்ணப்பொடி அதிகம் சேர்த்து வறுத்து திறந்த வெளியில் விற்பனைக்கு வைத்திருந்த கோழி இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வரும் 2024 லோக் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டியிட திமுக கூட்டணியில் சீட் கேட்டு வலியுறுத்துவோம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்முகைதீன் கூறினார்.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்முகைதீன் வந்திருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:. திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு தொகுதி மக்களிடம் நற்பெயர் உள்ளது. இதனை கூட்டணி கட்சியினரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் 2024 லோக் சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி எம்பி மீண்டும் போட்டியிட சீட் ஒதுக்க கோரிக்கை வைப்போம். இதன் முடிவை திமுக தலைமை தான் இறுதி செய்யும். மக்களின் விருப்பத்தை திமுக தலைமையிடம் எடுத்துக் கூறுவோம். சமீபத்திய மழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு வக்ப் வாரியம்,பள்ளிவாசல்கள் சார்பில் தலா ரூ30 லட்சம் நிதி வழங்க உள்ளோம். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து எம்பிக்கள் 146 பேரை வெளியேற்றிய சம்பவம் உலகில் எங்கும் நடந்திராதது. நிறைவேற்றிய சட்டங்களை எதிர்கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றன. தென் மாவட்ட மழை சேதம் குறித்த கேள்விக்கு வானிலை ஆய்வு மையம் மீது குறை கூறமுடியாது. இயற்கையாக நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமரிடம் முதல்வர் பேசியதை தொடர்ந்து அனைத்து உதவிகளும் செய்து தருவதாக கூறியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் கோரிக்கையும் அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். நவாஸ் கனி எம்.பி., உடனிருந்தார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி நகர தமுமுக சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண உதவி..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர தமுமுக சார்பில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக புளியங்குடி நகர வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து சமுதாய மக்களிடத்தில் வசூலிக்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புளியங்குடியில் இருந்து தமுமுக மாவட்ட செயலாளர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.புளியங்குடி நகர தமுமுக தலைவர் செய்யது அலி பாதுஷா, தமுமுக நகர செயலாளர் அசன், மமக நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் MC, தமுமுக நகர பொருளாளர் முகைதின், தமுமுக நகர துணைத் தலைவர் அப்துல் காதர் MC, தமுமுக நகர துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, சமாதானிய சாகுல் ஹமீது, மட்டன் செய்யது, அப்துல் அஜீஸ், அனீஸ், உசேன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்கள். தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பஷீர் ஒலி Ex.MC, தமுமுக மாவட்ட பொருளாளர் பாசித், மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் மசூது, அப்துல் மஜீத், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பீர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் பாதுஷா, கடையநல்லூர் நகரத் தலைவர் பஸ்ஸில் ஆகியோர் பாதிக்கப்பட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்கம், இந்திய நுகர்வோர் சம்மேளனம் ஆகியவை இணைந்து தேசிய நுகர்வோர் பாதுகாப்பு நாள் விழா நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவ, மாணவியருக்கு தூண்டில் விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓவியப் போட்டியும், நுகர்வோர் கடமை என்ன? நுகர்வோர் உரிமை என்ன? என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க பொருளாளர் கவிஞர் சு. முத்துசாமி வரவேற்றார். கன்ஸ்யூமர் ஆப் அசோசியேசன் கவுன்சில் மாவட்ட பொறுப்பாளர் தம்பான் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து நுகர்வோர் உரிமை கடமை குறித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் இந்திய நுகர்வோர் சம்மேளன மாவட்ட தலைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் நுகர்வோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும் வரி செலுத்தி பில் வாங்க வேண்டும். வல்லவனுக்கு புல் ஆயுதம் நுகர்வோருக்கு பில்லே ஆயுதம். பில் பெற்று இருந்தால் தான் வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு முறையிடுவதற்கு முடியும். தரமான பொருட்களை வாங்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க கூடாது. நிதி முதலீடு செய்யும் போதும், நிலம் வாங்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக யார் கேட்டாலும் கைபேசியில் வருகிற ஓ.டி.பி களை யாரிடமும் கூறக் கூடாது. தேவையில்லாத லிங்கில் சென்று பணத்தை இழந்து விடக்கூடாது. விழிப்பான நுகர்வோராக இருக்க வேண்டும் என்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க மாவட்ட தலைவர் எஸ். ஆர். அனந்தராமன் பரிசுகளை வழங்கியிருந்தார். போட்டிகளுக்கு நடுவர்களாக மனவளக்கலை பேராசிரியை கவிஞர் வேதிகா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பாத்திமா, பி.எஸ்.என். கல்லூரி தமிழ் பேராசிரியை ஆறுமுக செல்வி, கலை ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தக பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன், எழுத்தாளர் மூ.வெ.ரா.பாத்திமா, அருங்காட்சியக பணியாளர்கள் உலகநாதன், வயல் ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் தலைமையில் கொண்டாடப்பட்டது
by mohan
written by mohan
திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16 மண்டபத்தில் அருகே அவருடைய உருவப்படத்திற்கு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் மாவட்ட செயலாளர் கோபாலன், திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் ராமதாஸ் இணை பொறுப்பாளர் ராகப்பன் மண்டல பொதுச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர் .பின்னர் பா.ஜ.க சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.