செங்கோட்டை அரசு நூலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும் பெருமாள் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர், போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர், தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், நூலக பணியாளர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.