மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராம பகுதிகளில் சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் டிஎன்டீ மக்களின் விடுதலை நாளில் அனைத்து கிராமத்திலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டிஎன்டி மக்களின் நீண்ட வருட கோரிக்கைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தீர்மாணங்கள் மக்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசே டிஎன்டி மக்களின் மீதுள்ள ஹச்ஓஏ பழக்க வழக்க குற்றவாளி என்ற கருப்பு சட்டத்தை உடனே நீக்கிடு, மத்திய அரசே ஈஸ்வரஐயா காமிஷான்2015 ன் பரிந்துரையின்படி ஓபிசி இடஒதுக்கீடு 27/ல் டிஎன்டி மக்களுக்கு 9/ உள் இடஒதுக்கீடு போன்றவைகளை உடனே செயல்படுத்து தமிழகஅரசே தமிழகத்தில் குழப்பமில்லாமல் முழுமையாக டிஎன்டி வழங்கீடு தமிழகத்தில் நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய் என பல்வேறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டன. இதில் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர்.பிவி கதிரவன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களின் ஆணைகிணங்க மதுரை மேற்கு மாவட்டசெயலாளர் தேசிய ஆலோசனைகுழு உறுப்பினர் சீர்மரபினர்நலச் சங்க மாநிலசெயலாளர் பொன் ஆதிசேடன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் ஒன்றிய செயலாளர் குபேந்திரன், விவசாயஅணிசெயலாளர் அம்மாவாசி, மாவட்ட மாணவரணி செயலாளர்கள் விக்னேஷ், முத்துகாமன், மனோஜ் ஜெகதீசன், சிவாத்தேவர்,அஜித் சுபாஸ்,தர்மலிங்கம், தினேஷ் , முத்துராமன் மணிமாறன், யுவராஜா, சேகர், பரத், மகளிரணி மாவட்டசெயலாளர் கூட்டுறவுவங்கி இயக்குனர் ஜெயப்பிரியா, மாவட்டதலைவி லட்சுமி, மலர்கொடி, சரஸ்வதி, தாரணியா, பெருமாயி, ஜெகதாமுத்துராமன், கல்பனா மற்றும் பல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Category:
செய்திகள்
உசிலம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழச்சி
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்து விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் புதுத்தெரு மற்றும் கருப்பு கோவில் தெருவில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்த ரகு (48) அப்பகுதியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து உள்ளார்.தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தை பாவூர்சத்திரத்தில் அமைத்திட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை
by mohan
written by mohan
தென்காசி மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தை பாவூர்சத்திரத்தில் அமைத்திட வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாடு குழு அமைப்பாளரும், மதிமுக ஒன்றியச் செயலருமான ராம.உதயசூரியன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பாவூர்சத்திரம் அமைந்துள்ளது.செங்கோட்டை-திருநெல்வேலி, சங்கரன்கோவில்-அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் நகரமாக இப்பகுதி விளங்குகிறது.புதிய மாவட்டத்தில் இடம் பெறும் என உத்தேசமாக கூறப்படும் நகரங்களான அம்பாசமுத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், செங்கோட்டை போன்ற நகரங்களில் இருந்து சுமார் 10 முதல் 30 கி.மீ. தூரத்துக்குள்ளாக அமைந்துள்ளது.
மேலும், தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச்சாலை பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் 24 மணி நேரமும் வாகன வசதி கிடைக்கும். நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி நிறைந்த நகரமாக உள்ளது. அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு போதுமான இட வசதிகள் உள்ளதால், புதிய மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் பாவூர்சத்திரத்தில் அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விசைப்படகு கடலில் மூழ்கியதால் நீந்தி கச்சத்தீவில் கரையேறிய மண்டபம் மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த நல்லிக்குறிச்சி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பொன்னழகு (51), குமார் (40), கணேசன் (56), முருகன் (30) ஆகிய மீனவர்கள் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (31ம் தேதி) மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு, நள்ளிரவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பாறை மீது விசைப்படகு மோதியது.இதில் படகில் உடைப்பு ஏற்பட்டதால் கடல் நீர் உள்ளே புகுந்தது. சற்று நேரத்தில் படகு கடலில் மூழ்கியது. தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரும், நீந்திச் சென்று கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று (1ம் தேதி) காலை அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகு ஒன்று மூழ்கிய நிலையில் காணப்படவே அதன் அருகே வந்தனர்.அப்போது, சோர்வுற்ற நிலையில் கச்சத்தீவில் தஞ்சம் அடைந்திருந்த 4 மீனவர்களைக் கண்டனர். இதையடுத்து அங்கு சென்ற கடற்படையினர், அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்கினர்.இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்கள் 4 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.மீனவர்களிடம் இலங்கை மீன்வளத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர்களின் உறவினர்கள் கூறுகையில், ‘‘கச்சத்தீவில் தஞ்சமடைந்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேர் மீதும் இலங்கை அரசு வழக்குப்பதிவு செய்யக்கூடாது. மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் மேலரேஞ்சி கண்மாய் பகுதியில் மேலூர் DSP சுபாஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக 23 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து
11 டூவீலர்கள் 2 சண்டைசேவல்கள் பணம் ரூ.4300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
.செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் 01.09.2019 கொட்டில்பாட்டை சேர்ந்தவர் பிளேஸ்(48) இவர் முட்டம் துறைமுகம் பகுதியில் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த முட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் (28) மற்றும் கிருஷ்ணபுரத்தை சேர்ந்த சிஸில் ஸ்ரீ ஆகியோர் பிளேசிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டனர். பிளேஸ் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயக்குமார் குற்றவாளி ஜார்ஜை கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களினால் உயிர் இழப்புக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல், மது அருந்திவிட்டு, அதி வேகமாகவும் பைக் ஓட்டி செல்பவர்கள்,சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள் மீதும் மற்றும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி சென்றால்,அவர்களின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் போக்குவரத்துபிரிவு ஆய்வாளர்மகேஸ்வரி சாலை பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் விதிமுறைகள் குறித்து குளச்சல் பகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ,புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019 -ன் படி அதிகரிக்கப்பட்ட அபராத தொகை உள்பட போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டி செல்ல வேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரம் விநியோகித்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி வந்தவர்கள்,சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் என்கிற காளிமுத்து இவர் மனைவி பெயர் பிரியா .இவரது இரட்டைக்குழந்தைகள் ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி.16.3.2010ஆம் ஆண்டு பிறந்த இவர்களுக்கு வயதோ ஒன்துபதுதான்.ஆனால் இவர்கள் அடைந்துள்ள உயரம் மிகப்பெரியது. இந்த ஒன்பது வயது சிறுவர்கள் இளம் வயதிலேயே ஐந்து வயதிலும் ஒண்பது வயதிலும் இரண்டு முறை இந்த இரட்டையர்கள் கராத்தே எனும் தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர் .அதுமட்டுமின்றி பல்வேறுபட்ட கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல மாநிலங்களிலும் நாடுகளிலும் சென்று பலதரப்பட்ட பட்டங்களையும் பரிசுகளையும் அள்ளிவந்துள்ளனர் இந்த இணைபிரியா இரட்டையர்கள்.
இந்த சாதனையை ஊக்குவிக்கும் விதமாக வில் மெடல்ஸ் உலக சாதனை மற்றும் வில் மெடல்ஸ் குழந்தைகள் சாதனையானது இவர்களுக்கு கிடைத்துள்ளது. உலகிலேயே இரட்டை குழந்தைகள் குறைந்த வயதில் இரண்டு முறை பிளாக் பெல்ட் பெற்று பல பெருமைகளையும் சிறப்புகளையும் நம் நாட்டிற்கு பெற்றுத்தந்திருக்கிறார்கள் என்பதற்காகவும் இந்த அங்கீகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர்களுடைய இந்த சாதனை அங்கீகார விழா காரைக்காலில் அமைந்துள்ள இவர்கள் பயிலும் V.R.S.MARTIAL ACADEMY நிறுவனத்தில் நிகழ்ந்தது.வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி,முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு, ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.இந்த விழாவிற்கு V.R.S.MARTIAL ACADEMY மஹாகுரு V.R.S.குமார் முன்னிலை வகித்தார். இந்த இரட்டை சாதனையாளர்களின் நண்பர்கள்,பெற்றோர்கள் ,உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.மருத்துவ முகாம்,கருத்தரங்குகள்,கல்வி உதவிப்பணிகள்,என பல உதவிப்பணிகளை மேற்கொண்டு வரும் வில் மெடல்ஸ் நிர்வாகத்தினரை மஹாகுரு.V.R.S.குமார் மென்மேலும் சிறந்து விளங்க தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளிபஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா ஓட்டலில் போலி மதுபான விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.நாட்றம்பள்ளி அடுத்த சொக்கலாம்பட்டி வட்டகொல்லி ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தா கணவர் பெயர் மூர்த்தி . இவர்கள் ஸ்பிரீட் மூலம் போலி மதுபானம் தயாரித்து M.C. சீல் ஒட்டி தங்களுக்கு சொந்தமான நாட்றம்பள்ளி பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா ஓட்டலில் குவார்ட்டர் பாட்டில் ரூ 150 முதல் ரூ 200 வரை காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை விற்பனன செய்கின்றனர் இந்த ஓட்டலில் சரக்குக்கான வாடிக்கையாளர் கூட்டம் நிறைந்து இருக்கும் நாட்றம்பள்ளி போலீசாரும் மாமூல் வாங்கி கொண்டு இதை கண்டு கொள்வதில்லை.வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் உடன் நடவடிக்கை பொதுமக்கள் கோர்க்கை விடுத்து உள்ளனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை பட்டாபிராம் சாஸ்திரி நகரில் உள்ள ஸ்ரீதேவி சிவசக்தி கருமாரி அம்மன் ஆடி வெள்ளி 21-ம் ஆண்டு விழா நடந்தது. கூழ் ஊற்றல், கரக ஊர்வலம், அம்மன் அபிஷேகம், பக்தர்கள் வழிபாடு’ சுவாமி ஊர்வலம் நடந்தது
ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர் கோவில் நிர்வாகி ஸ்ரீதர்சாமி மற்றும் கோவில் பக்தர்கள் செய்து இருந்தனர்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (2ம் தேதி), விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு ‘பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’, ‘சைக்கிள் ஓட்டும் விநாயகர்’, ‘காளையை அடக்கும் விநாயகர்’, ‘கிரிக்கெட் விளையாடும் விநாயகர்’, ‘நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர்’, ‘ரயில் ஓட்டும் விநாயகர்’ என, வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வீதிகளில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது.அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை பயன்படுத்தி 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.இந்த சிலையை, 70 பக்தர்கள் ஒன்றிணைந்து கடந்த 20 நாட்களாக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆபத்தான வகையில் செல்லும் ஷேர் ஆட்டோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருநகர் to திருமங்கலம்TN58 AA 4421 என் கொண்ட ஷேர் ஆட்டோ இருபுறமும் இருசக்கர வாகனங்கள் தள்ளிக்கொண்டு ஆபத்தான வகையில் சாலையை மறித்து விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவை ஓட்டி சென்றனர் இதை அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் தன் நண்பருடன் இணைந்து இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த ஆட்டோ மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற செயல்களை மீண்டும் அவரை ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கும் வேண்டும் என மேலும் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்து ஒரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வீதம் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், உத்தரவின் பேரில் எழுமலை கா.நி சரகத்தில் 1-கிலோ 400 கிராம் உசிலம்பட்டி தாலுகா கா.நி சரகத்தில் 300 கிராம் சேடப்பட்டி கா.நி சரகத்தில் 200 கிராம்உத்தப்பநாயக்கனூர் கா.நி சரகத்தில் *1கி 500 கிராம் . ஆகமொத்தம் 3 கி 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த மூன்றுவருடங்களாக அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக பழங்குடியின (நரிகுறவர்)பெண்களுக்கு உடைஉதவிவழங்கபட்டுவருகிறது. நான்காம் ஆண்டாக பழங்குடியின பெண்களுக்கு 20 நபர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக புதியபுடவை பெண்குழந்தைகளுக்கு புதியஉடையை அந்தணர் முன்னேற்ற கழக மாநில மகளிரணிசெயலாளர் திருமதி உமாகனேசன் சாஸ்த்திரிகள் வழங்கினார் உடன் சென்னை மாவட்ட அமுக மகளிரணியினர் கலந்துகொண்டனர்..இந்நிகழ்ச்சியில் அந்தணர் முன்னேற்ற கழகத்தலைவர் நிறுவனர் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் பொதுசெயலாளர் மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொருளாளர் கோவை மணிகண்டசிவாச்சாரியார் மகளிரணி செயலாளர். சென்னை உமா கனேசன் சாஸ்த்திரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் பசுமை இராஜசிங்கமங்கலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மரக்கன்றுகள் நடப்பட்டது..இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்தார்.இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், இராஜசிங்கமங்கலம் இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் மலேசியா நிர்வாக குழு உறுப்பினர் பகுர்தீன், முன்னாள் மாணவர்கள் சங்க துணைப் பொருளாளர் ஆசிரியர் சதக் , இளையான்குடி ஒன்றிய பொறுப்பாளர் சேவியர் மற்றும் ஒலி இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் மாணவர்கள் , பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதி எடுத்தனர். மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேலியும் அமைத்து கொடுக்கப்பட்டது. மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. மரக்கன்றுகள் நடும் பணியின் இறுதியில் இறைவன் மழையை பரிசாக தந்தான்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாதரண கான்ஸ்டபிலாக பணி புரிந்த தில்லை கமல் கைவிரல் ரேகை சார்பு ஆய்வாளராக ( Sup Inspector Of Finger print Bureau ) பணி உயர்வு பெற்றார். தன் பணி உயர்வு அரசு ஆணை பெற்றதும் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தன் பள்ளி தோழர்களை கண்டறிந்து தன் மன மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.
நண்பர்கள் மகிழ்வான கலந்துரையாடல் தருணத்தில் மீதம் இருக்கும் பள்ளி தோழர் தோழிகளையும் கண்டறிந்து.எதிர் வரும் சந்திப்பில் நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒருவகையில் உதவிட வேண்டும். சமூக சேவை செய்திட வேண்டும்.மரம் நடுதல் வேண்டும் என உறுதி ஏற்றனர்.
பின்பு விருந்தில் கலந்து கொண்ட நண்பர்கள் ராஜ்கபூர், சங்கர், சரீப், மருது பாண்டி, சீனி செய்யது அப்தாகிர், தட்சிணாமூர்த்தி, நம்புவேல் ஆகியோர் நண்பருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்தனர்.மேலும் இத்தனை வருடம் கழித்து நண்பர்களை சந்தித்தது மன நெகிழ்வை தந்தது என நண்பர்கள் கூறினார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் ..கால அவகாசம் கோரி அதிகாரிகள் சமரசம்
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, மீன் கடை செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தன. போதை தள்ளாட்டத்தில் சாலையில் நின்று ரகளை செய்யும் குடிமகன்கள், சாலை ஓரங்களில் படுத்து கிடக்கும் குடிமகன்களால் குடிமகன்மேலும் அரசு, தனியார் பஸ்கள் சென்று திரும்புவதில் சிரமம் தொடர்ந்தது. இதனால் இவ்விரு மதுக்கடைகளை அப்புறபடுத்தக்கோரி கீழக்கரையில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தன. மகளிர் அமைப்புகள் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாற்றிடம் அமைய ததால், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு சமூக நல அமைப்புகள் , அரசியல் கட்சியினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில், எஸ்டிபிஐ ., கட்சி இவ்விரு மதுக்கடைகளுக்கு நேற்று 01.09.19 பூட்டும் போராட்டம் அறிவித்தது. இதன் எதிரொலியாக, நேற்று 01.09.19 மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்ட 2 கடைகளும் மதியம் 2 : 30 மணியளவில் மீண்டும் மூடப்பட்டன. கடைகள் முன் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை விலக்கி கொள்ள அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படிஎஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கூடி விவாதித்தனர். கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபீதா,காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன்,டாஸ்மாக் தாசில்தார்சிரோன் மணி காவல் ஆய்வாளர்கள்பிச்சை மணி (கீழக்கரை), அனிதா (சிக்கல்) ஆகியோர், எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், துணை தலைவர் சோமு, தொகுதி தலைவர் அசன் அலி, பேச்சாளர் ஜமீல், நகர் தலைவர் ஹமீது பைசல், ஊடகத் தொடர்பாளர் அப்துல் வஹாப் ஆகியோரிடம் சமரசம் பேசினர். எஸ்டிபிஐ., கட்சிமாவட்ட தலைவர் நூர்ஜியாதீன் கூறுகையில், கட்சி நிர்வாகிகளுடன் முடிவின் 04.9.19 அன்று மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும். மாற்றிடத்தில் மதுக்கடையை கொண்டு செல்ல டாஸ்மாக் மாவட்ட மேலாளர்
ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளார். இந்த உறுதி மொழியை ஏற்று இன்ரைய போராட்டம் தற்காலிமாக விலக்கி கொள்ளப்படுகிறது என்றார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காதல் திருமணம் செய்த கணவர் கொடூர கொலை.மனைவி பாதுகாப்பு வேண்டி அமைச்சாிடம் மனு..
by mohan
written by mohan
ஆரணி டவுன் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் யோகனாந்தம். கடந்த மாதம் காட்டன் சூதாட்ட தகராறில் பழைய பஸ் நிலையம் அருகில் கொடூரமான் முறையில் கொலை செய்யபட்டார்.இவரது மனைவி ஆண்டனிமேரி நேற்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.அப்போது தனக்கும் தங்களுடைய இரண்டு குழந்தைகள் பாதுகாப்பு இல்லை ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள சிலர் எங்களை கொலைமிரட்டல் விடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறினார். உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கோட்டாச்சியர் மைதிலியிடம் பரிந்துரை செய்தார்.
பின்னர் பாதிக்கபட்ட பெண் ஆண்டனிமேரி கூறியதாவது:-
என் கணவர் பெயர் யோகனாந்தம் எனக்கு காதல் திருமணம் ஆகையால் இருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த மாதம் 11-ந் தேதி அன்று என் கணவர் யோகானந்த்ததை அவரது உறவினர் பாண்டியன் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்தார்.இதனால் தற்போது ஆதரவின்றி உள்ளோம். பள்ளிகூடத் தெருவை சேர்ந்த சுமார் 10 பேர் தங்களை மிரட்டி கொலைமிரட்டல் விடுக்கின்றனர். ஆகையால் தனக்கு பாதுகாப்பு வேண்டி முதல்வர் குறைதீர்ப்பு முகாமில் அமைச்சர் சேவூர்ராமசந்திரனிடம்மனுஅளித்துள்ளேன்.இல்லையென்றால் 1 வயது கைகுழந்தை 7 வயது பெண் குழந்தை ஆகிய என்னையும் சேர்த்து கருணை கொலை செய்ய வேண்டி கொள்கிறேன்.எனக்கூறினாா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் முக்கூடல் அணையின் சிறுவர் பூங்காவில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் சுதாகரன் (38) . இவர் கடந்த 20.08.2019 அன்று பணியில் இருந்த போது கல்லூரி மாணவர்கள் சில பேர் முக்கூடல் அணையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே அதில் ஒரு பிரிவு மாணவர்கள் ரவுடியான ராஜவேல்(29) மற்றும் சுரேஷ்(21) துணைக்கு அழைத்து மற்றொரு பிரிவினரை தாக்கியுள்ளனர். இதனை கண்ட சுதாகரன் அவர்களை இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜவேல் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுதாகரனை கெட்டவார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து வேலையை விட்டு செல்லுமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் சுதாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூதபாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்ஜெயசேகர் குற்றவாளி இருவரையும் கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி காளமேகம்
You must be logged in to post a comment.