புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் என்கிற காளிமுத்து இவர் மனைவி பெயர் பிரியா .இவரது இரட்டைக்குழந்தைகள் ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி.16.3.2010ஆம் ஆண்டு பிறந்த இவர்களுக்கு வயதோ ஒன்துபதுதான்.ஆனால் இவர்கள் அடைந்துள்ள உயரம் மிகப்பெரியது. இந்த ஒன்பது வயது சிறுவர்கள் இளம் வயதிலேயே ஐந்து வயதிலும் ஒண்பது வயதிலும் இரண்டு முறை இந்த இரட்டையர்கள் கராத்தே எனும் தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர் .அதுமட்டுமின்றி பல்வேறுபட்ட கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல மாநிலங்களிலும் நாடுகளிலும் சென்று பலதரப்பட்ட பட்டங்களையும் பரிசுகளையும் அள்ளிவந்துள்ளனர் இந்த இணைபிரியா இரட்டையர்கள்.
இந்த சாதனையை ஊக்குவிக்கும் விதமாக வில் மெடல்ஸ் உலக சாதனை மற்றும் வில் மெடல்ஸ் குழந்தைகள் சாதனையானது இவர்களுக்கு கிடைத்துள்ளது. உலகிலேயே இரட்டை குழந்தைகள் குறைந்த வயதில் இரண்டு முறை பிளாக் பெல்ட் பெற்று பல பெருமைகளையும் சிறப்புகளையும் நம் நாட்டிற்கு பெற்றுத்தந்திருக்கிறார்கள் என்பதற்காகவும் இந்த அங்கீகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர்களுடைய இந்த சாதனை அங்கீகார விழா காரைக்காலில் அமைந்துள்ள இவர்கள் பயிலும் V.R.S.MARTIAL ACADEMY நிறுவனத்தில் நிகழ்ந்தது.வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி,முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு, ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.இந்த விழாவிற்கு V.R.S.MARTIAL ACADEMY மஹாகுரு V.R.S.குமார் முன்னிலை வகித்தார். இந்த இரட்டை சாதனையாளர்களின் நண்பர்கள்,பெற்றோர்கள் ,உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.மருத்துவ முகாம்,கருத்தரங்குகள்,கல்வி உதவிப்பணிகள்,என பல உதவிப்பணிகளை மேற்கொண்டு வரும் வில் மெடல்ஸ் நிர்வாகத்தினரை மஹாகுரு.V.R.S.குமார் மென்மேலும் சிறந்து விளங்க தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
You must be logged in to post a comment.