சாதரண கான்ஸ்டபிலாக பணி புரிந்த தில்லை கமல் கைவிரல் ரேகை சார்பு ஆய்வாளராக ( Sup Inspector Of Finger print Bureau ) பணி உயர்வு பெற்றார். தன் பணி உயர்வு அரசு ஆணை பெற்றதும் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தன் பள்ளி தோழர்களை கண்டறிந்து தன் மன மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.
நண்பர்கள் மகிழ்வான கலந்துரையாடல் தருணத்தில் மீதம் இருக்கும் பள்ளி தோழர் தோழிகளையும் கண்டறிந்து.எதிர் வரும் சந்திப்பில் நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒருவகையில் உதவிட வேண்டும். சமூக சேவை செய்திட வேண்டும்.மரம் நடுதல் வேண்டும் என உறுதி ஏற்றனர்.
பின்பு விருந்தில் கலந்து கொண்ட நண்பர்கள் ராஜ்கபூர், சங்கர், சரீப், மருது பாண்டி, சீனி செய்யது அப்தாகிர், தட்சிணாமூர்த்தி, நம்புவேல் ஆகியோர் நண்பருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்தனர்.மேலும் இத்தனை வருடம் கழித்து நண்பர்களை சந்தித்தது மன நெகிழ்வை தந்தது என நண்பர்கள் கூறினார்கள்.
You must be logged in to post a comment.