புற்றுநோயால்முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில் சிகிச்சை அளிக்க உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவரை ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரி ஒரு நாள் முதல்வராக்கி கவுரவித்தது. இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோய் பாதிப்பால், அவனது முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு ஆளானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், முதுகு தண்டுவடம் மேலும் செயல் இழக்கும் அபாயம் உணர்ந்து 8 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனது உறவினர்கள், தமுமுக.,விடம் உதவிக்கரம் கோரினர்.
இதை தொடர்ந்து நோய் பாதித்த சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்ல முடிவு செய்தனர். புதுச்சேரி துரிதமாக செல்ல தமுமுக.,வினர் இராமநாதபுரம் – புதுச்சேரி இடையே அனைத்து பகுதிகளிலும் உள்ள தமுமுக., முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலை பதிவிட்டனர். இத்தகவல் படி, இராமநாதபுரம் – புதுச்சேரிபோலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோரினர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் வழியாக 366 கி.மீ., தூரத்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை தமுமுக., ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொண்டி ஜாஸ் ஒட்டிச் சென்று உரிய நேரத்தில் சிறுவன் உயிர் காக்க உதவினார். நிஜ ஹீரோ தொண்டி ஜாஸ் சாமர்த்தியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரியில் தொண்டி ஜாஸை ஒரு நாள் முதல்வராக்கி, நிறுவனர் முகமது ஷலாவுதீன் கவுரவித்தார்.
மாவட்ட செய்திகள்
கல்வி ஆலோசகர் முனைவர் அ.சங்கரலிங்கம் எழுதிய நம் குழந்தை பத்திரம் நூல் வெளியீட்டு விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது.ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் அரிமா எம்.ஏ.சுந்தரராஜன் தலைமை வகித்தார். சு.மா.ஆதர்ஷியா இறை வாழ்த்து பாடினார். நேஷனல் அகாடமி பள்ளி குழும தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா முன்னிலை வகித்தார். டாக்டர் ச.ஜெ.அஸ்வின் துரை வரவேற்றார். செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளரும், ரோட்டரி முன்னாள் ஆளுநருமான டாக்டர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை கவிஞர் ஏகலைவன் புத்தக அறிமுகவுரை ஆற்றினார். நூலாசிரியர் முனைவர் சங்கரலிங்கத்தை நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் டாக்டர் வ.ஜெயலட்சுமி அறிமுகம் செய்து பேசினார். கனகமணி கிளினிக் மகப் பேறு தலைமை டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் சிறப்புரை ஆற்றினார். ஆப்டிகல் பேபஸ் உரிமையாளர் எம்.பாஷா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு) ச.அப்பாதுரை முதல் பிரதியை வெளியிட்டார். பொதுப்பணி துறை ஆட்சி அலுவலர் (ஓய்வு) சி.வள்ளி நாயகம், நெய்வேலி நிலக்கரி கழக மின்னியல் பிரிவு துணை பொது மேலாளர் வே.வேலப்பன், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் கு.கேசவராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நம் குழந்தை பத்திரம் நூலாசிரியர் முனைவர் அ.சங்கரலிங்கம் ஏற்புரை வழங்கினார். ச.ஜெ.பத்ம தர்ஷினி நன்றி கூறினார். திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை சே.தமிழரசி உதயகுமார் தொகுத்து வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அடிப்படைவதிகள் இல்லாததை கண்டித்து மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் மாணவர்கள் படித்து வருகிறார்கள் இந்த கல்லூரியில் மாணவிகளுக்கான எந்தவிதமான கழிப்பிட வசதிகளும் குடிநீர் குழாய் யே எதுவுமே இல்லாத நிலையில் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத முதல்வரை கண்டித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இன்று மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் கழிப்பிட வசதிகளை உடனடியாக செய்து தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தப் போவதாக கூறினர் இதன் பின்பு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவளுடைய பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சரி செய்வதாக கூறியதின் பேரில் கலைந்து வகுப்பறைகளுக்கு சென்றனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பும் பதற்றமும் நிலவியது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.திருச்சி பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனூரில் புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ – மாணவியர் நேற்று (5ம் தேதி) காலை, ‘துாய்மை பாரதம்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனூர் மேலக்காடு என்ற இடத்தில் பேரணி செல்லும்போது, சாலையில் பணக் கட்டு கிடந்துள்ளது.
இதைப் பார்த்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவியரான மதுஸ்ரீ (9), கனிஷ்கா (9) ஆகியோர், அந்த பணத்தை எடுத்து அருகில் இருந்த ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அவர், பேரணி முடிந்து பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர் மெட்டில்டா ஜெயராணியிடம் பணத்தை ஒப்படைத்தார்.பள்ளியின் தாளாளர் செபாஸ்டின் அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்து, உரியவரிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இது குறித்து, தாளாளர் செபாஸ்டின் கூறியதாவது: “இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மதுஸ்ரீயின் தந்தை கல் கொத்துபவர். கனிஷ்காவின் தந்தை பெயின்டர். இந்த இரண்டு மாணவிகளும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்படி இருந்தும், கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை நேர்மையுடன் ஆசிரியையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த மாணவியரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களை, பள்ளி சார்பில் கவுரவிக்க உள்ளோம்” என, அவர் தெரிவித்தார்.ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட மாணவியரை, ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அஞ்சல் பிரிப்பகம் மூடும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்..அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அஞ்சல் பிரிப்பகம், தொடர்ந்து திருவண்ணாமலையிலேயே செயல்பட வேண்டும், இந்த அலுவலகம் மூடும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என, அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே ஒரு அஞ்சல் பிரிப்பகம் மட்டுமே திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அலுவலகமான இது, 1982 ஆம் ஆண்டு முதல் தியாகி அண்ணாமலை நகரில் உள்ள, தலைமை அஞ்சலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும், இந்த அஞ்சல் பிரிப்பகத்தை மூடிவிட, தபால்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தை விழுப்புரம் மாவட்ட தலைநகரோடு இணைத்திட அஞ்சல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அலுவலகத்தை மூடிவிட்டால், பொதுமக்கள் இந்த சேவைகளை பெற விழுப்புரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.எனவே, அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தியும், இந்த அஞ்சல் பிரிப்பகம் மூடப்படுவதை கண்டித்தும், திருவண்ணாமலையில் வெள்ளியன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கோட்ட தலைவர்கள் பி.குணசேகரன், கே.அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயலாளர்கள் கே.சங்கரன், பி.பரந்தாமன், கோட்ட செயலாளர்கள் டி.குணசேகரன், டி.பி.ரமேஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையிலிருந்து மதுரைக்கு வந்து பயணிகள் ரயிலில் பொள்ளாச்சியில் டிக்கெட் எடுத்து ஏறியுள்ளார் .இவர் இரவு துப்புரவு பணிக்காக ரயில் கொண்டு செல்லப்பட்டது .அப்போது இவரது உடலைக்கண்ட துப்புரவு பணியாளர்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் .அவரை சோதித்து பார்த்தபோது அவர் பாலக்காட்டில் நேற்று மதியம் மது வாங்கியதற்கான பில் ஒன்று அவர் பையில்இருந்துள்ளது .இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேதத்தை கைப்பற்றி இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை மது அதிக அளவில் குடித்து மரணம் அடைந்தாரா அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து, திருச்சி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இந்த இயந்திரத்தைக் கொண்டு, ஒரு நிமிடத்தில் 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இணைந்து, ‘புதிய கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு கிளப்’ என்ற அமைப்பை உருவாக்கி சில கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அமைப்பைச் சார்ந்த மாணவர்கள், 1983-ல் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுடன் இணைந்து, சாலையோர குப்பைகளை அகற்றும் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு முன்னர், சென்னை மாநகராட்சிக்கு சென்று அங்கு உள்ள குப்பை அகற்றும் இயந்திரத்தை பார்வையிட்டனர்.
அதன்பின்னர், என்.ஐ.டி-யின் முதல்வர் மினிஷாஜி தாமஸ், திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த இயந்திரத்தை வடிவமைத்தனர். ஒரு லட்சம் ரூபாய் செலவில், ஓராண்டு கால உழைப்பில் வாக்வம் கிளீனர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை, திருச்சி மாநகராட்சிக்கு வழங்கினர்.
இந்த இயந்திரத்தைக் கொண்டு காய்ந்த இலைகள், பலவகை நெகிழிகள் மற்றும் இதர குப்பைகள் என, ஒரு நிமிடத்தில் 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அ.இ.பா.பிளாக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மூக்கைத்தேவாின் 40வது குருபூஜை அனுசாிக்கப்பட்டது.இதில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று6.9.19 கல்வித்தந்தை அமரர் மூக்கையாத்தேவர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.பின் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளா் ராஜேஷ் கண்ணன் ராஜஸ்தான்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை காந்திபுரம் 3 வது தெருவை சேர்ந்த முத்து அவரது மகள் அர்ச்சனா 15 .லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வாரமாக நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார் .இந்த நிலையில் இன்று 06.09.19 பள்ளிக்கு வந்த அர்ச்சனா பள்ளிக்கு வரும்போது பள்ளிப் பையில் சேலை வைத்துக் கொண்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து வகுப்பு அறைக்கு உள்ளே சென்று சேலையை போட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. நீண்ட நேரமாகியும் உடலை எடுத்து செல்ல வாகனம் வராத்தை தொடர்ந்து உறவினர்கள் அர்ச்சனா உடலை இருசக்கர வாகனத்துல் எடுத்து செல்ல முயன்றனர்.. அதில் உறவினா்களுக்கும் காவல்துறையினருக்கும் தகராறு எற்பட்டது. பின் வாகனம் வந்தது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு எடுத்துச் செல்லப்பட்டது
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடிகர் ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் இறங்கினால்தான் அவரைப் பற்றி கருத்து கூற முடியும் என உசிலம்பட்டியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவருமான மூக்கையாத்தேவரின் 40வது குருபூஜை விழா உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர்வiளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைதொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிpவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், இவரது நடிப்பை தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இவர் முழுமையாக அரசியலுக்கு வந்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்தால் தான் அது பற்றி கருத்து சொல்லமுடியும் கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத்குமார் மற்றும் சட்டமன்றஉறுப்பினர்கள் நீதிபதி பெரியபுள்ளான் மாணிக்கம் ராஜன் செல்லப்பா உள்;பட பலர் கலந்தகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வேன் மோதியதில் 2 பேர் சாவு – டிரைவருக்கு வலைவீச்சு
பெரணமல்லூர் அருகே உள்ள தவணி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்குழந்தை. அவருடைய மனைவி வள்ளியம்மாள் ( 40). இவர்களது உறவினரான கோவிந்தசாமியின் மகன் விக்னேஷ் (22).வள்ளியம்மாள், விக்னேஷ் ஆகிய இருவரும் மேலப்பூண்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.தவணி-நமத்தோடுக்கு இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பள்ளி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனையடுத்து வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இந்த விபத்தில் வள்ளியம்மாள், விக்னேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘நீர் வங்கி’ மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் நீர்நிலைகளை பாதுகாக்க விரும்புவோர் காசோலையாக பணம் செலுத்தலாம். இதனை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.இதையடுத்து தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-பொதுமக்கள் பங்களிப்புடன் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் கடந்த 2 மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பாதுகாத்து பொதுமக்கள் நிரந்தரமான வாழ்க்கை வாழ்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,067 வருவாய் கிராமங்களில் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு மற்றும் நீதிமன்றம் மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகிறது. இது ஆரம்பம் தான். நிரந்தரமாக தீர்வு காண்பதற்காக மாவட்டத்தில் முதல் முறையாக ‘நீர் வங்கி’ மைய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் அரசுத்துறைகள், தன்னார்வலர்கள், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக இத்திட்டம் தொடங்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் முன் மாதிரி மாவட்டமாக திகழ்கிறது.இந்த இயக்கத்தில் நீர்நிலைகளை மீட்டெடுக்க எந்தவித தயவு, தாட்சனையும் பார்க்கக்கூடாது. கிராமத்தில் இருக்கும் நீர்நிலைகளை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு நாம் வழங்க வேண்டும். நிலத்தடிநீர் மற்றும் மழைநீர் சேகரிப்பு எந்த கிராமங்களில் இருக்கிறதோ அங்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படவில்லை.இந்த இயக்கம் நிரந்தரமாக நீர்நிலைகளை மீட்டெடுக்க செயல்பட்டு வருகிறது. நமது சொத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்கு உயிரோடு வழங்கிய நீர்நிலைகளை நாம் அழித்து வருகிறோம். கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அது அனைவரையும் பாதிக்கும். மழைநீரை நம்பி விவசாயம் செய்யும் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. மழைநீரை சேமிக்காவிட்டால் விவசாயம் அழிந்து விடும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய நகர் தெற்கு காவல்துறை
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த தாமோதரன், மனைவி ரோகினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்களுக்கு ஆண், பெண் 2 குழந்தைகள் உள்ளனா்.குடும்பத்தகராறு காரணமாக ரோஹினி தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் இருக்கும் தனது தாய் சுப்புலட்சுமிக்கு செல்போன் மூலம் தகவல் கூறிவிட்டு அனைப்பட்டி அணைக்கு சென்றுவிட்டாா். ரோகிணியின் தாயார் சுப்புலட்சுமி திண்டுக்கல் நாகல்நகர் வந்து தனது மகளை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் விசாரித்து விட்டு தெரியவில்லை என்றவுடன் நகர் தெற்குகாவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகர் தெற்கு காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக ரோகினியிடம் சமாதானம் செய்து கொண்டே அனைப்பட்டி சென்று ரோகிணி கண்டுபிடித்து சமாதானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை கைவிட செய்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணன் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ரோகினியின் கணவர் தாமோதரனை வரவழைத்து இருவருக்கும் அறிவுரைகளை கூறி பிரச்சினையை தீர்த்து அவரது குடும்பத்தினரிடம் ரோகினியையும் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,பன்னாட்டு அரிமா சங்கங்கள் மாவட்டம் , இராமநாதபுரம் லைப் சேவர்ஸ் அரிமா சங்கம், இராமநாதபுரம் கோல்டு அரிமா சங்கம் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழா பேரணி நடந்தது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.ஜவஹர்லால் தலைமை வகித்தார். அரிமா மாவட்ட அமைச்சரவை இணை செயலாளர் அபர்ணா ஆர்.வெங்கடாசலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். லைப் சேவர்ஸ் அரிமா சங்க பட்டயத் தலைவர் ஏ.வி.சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். இராமநாதபுரம் கோல்டு அரிமா சங்க தலைவர் எஸ்.சரவணன், இராமநாதபுரம் லைப்சேவர்ஸ் அரிமா சங்க தலைவர் சி.ஏகாம்பரம் ஆகியோர் பேசினர். மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.சுபாசங்கரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சுப்ரமணியன், லைப் சேவர்ஸ் அரிமா சங்க செயலாளர் டி.சீனிவாசன், கண் தான ஒருங்கிணைப்பாளர் ஏ.சீனிவாசன், .அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், அரிமா சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே மாணவர் பலியான சம்பவம் ..ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் இருவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரன்,13. வகுப்பாசிரியை அபிலஷா மதியம் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தமிழரசு அறிவுறுத்தல் படி பள்ளி மின் மோட்டார் ஸ்விட்ச் போட கார்த்தீஸ்வரனை அபிலஷா அனுப்பினார்.இந்நிலையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போட முயன்ற கார்த்தீஸ்வரன் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியர்களின் அலட்சிய போக்கால் கார்த்தீஸ்வரன் இறந்ததாக, மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் , மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி, உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் ஆசிரியர்களிடம் விசாரித்தனர். விசாரணை அறிக்கை அப்படையில், ஆசிரியர் தமிழரசு, ஆசிரியை அபிலஷா ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் மாணவர் உயிரிழப்பிற்கு காரணமான ஆசிரியர்களை மீது நடவடிக்கை எடுக்காதவரை கார்த்தீஸ்வரன் உடலை வாங்க மறுத்தனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்மேரி, ஆசிரியர் தமிழரசு ஆகியோர் உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் ஜூடி ஷியல் மாஜிஸ்டிரேட் – 2 முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மல்லிப்பட்டினம் கடலில் சூறைக்காற்று படகு மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர் 4 பேர் குடும்பத்திற்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆறுதல்
இராமேஸ்வரம் அருகே நடராஜபுரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் ஆக.29 ஆம் தேதி கடலூர் சென்றனர். அங்கு பைபர் படகு வாங்கினர். பின்னர் படகு மூலம் கடலூரில் இருந்து 10 பேரும் இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர். மல்லிபட்டினத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் நிலவிய திடீர் சூறைகாற்றால் படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் நடுக்கடலில் மூழ்கினர். அதில் ராஜா மகன் காளிதாஸ், முனியாண்டி மகன் செந்தில்வேல் ஆகியோரை உள்ளுர் மீனவர்கள் மீட்டு மல்லிபட்டினம் கடற்கரையில் சேர்த்தனர். முனியாண்டி மகன் நாகசாமி 47, ஆண்டி மகன் ரஞ்சித்குமார் 23 , காந்தி மகன்கள்
தரகுடியான் 25, மதன் 26, ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் 20, ராமகிருஷ்ணன் மகன் கந்தகுமார் 23, சண்முகம் மகன் முனீஸ்வரன் 24, ராஜ் மகன் உமாகாந்த் 19 ஆகியோர் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இது குறித்து இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தக்கோரி மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். மாயமான 8 மீனவர்களில் முனீஸ்வரன், தரைக்குடியான், ரஞ்சித் குமார், முனியசாமி ஆகியோர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். கரை திரும்பாத மீனவர் குடும்பத்தினரை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக ராமேஸ்வரம் தாசில்தார் ஜபாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் நகர் திமுக பொறுப்பாளர் நாசர் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உயரழுத்த மின் கம்பம் ஒன்று உடைந்த நிலையில் சாய்ந்துள்ளது ..எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது ..இது பிரதான சாலை என்பதால் கீழே விழுந்தால் மிகப்பெரிய அபாயமும் உள்ளது ..உயரழுத்த மின் கம்பம் என்பதால் மிகப்பெரிய உயிர் சேதமும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது ..பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது ..உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் முன்னாள் பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையாத் தேவர் அவர்களின் 40 வது ஆண்டு நினைவு தினத்தை 6.9.19 ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது. மேற்படி நினைவு தினம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரியில் உள்ளநினைவிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், பல்வேறு அரசியல்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தேவர் அமைப்புகள் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மணிவண்ணன் வேண்டுகோளின் படி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பிரிவு 144 குற்ற விசாரணை முறைச் சட்டப்படி சில நிபந்தனைகள் விதித்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இவ்வுத்தரவு 5.9.19 ம் தேதி மாலை 6 மணி முதல்7.9.19 ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். நினைவு அஞ்சலி செலுத்த வரும்நபிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை . அதே போல் அனைத்து திறந்த வகை வாடகை மற்றும் சொந்த வாகனங்களில் வர அனுமதியில்லை,மேலும் இரு சக்கர வாகனங்களில் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதியில்லை என்றும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.இருப்பினும் மற்ற பள்ளி கல்லூரி வாகனங்கள், பயணிகள் பேருந்து, சுற்றுலா வாகனங்கள்,சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் அவசர ஊர்திகள் ஆகியவை எப்போதும் போல வழக்கமாக செயல்பட அனுமதியளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் மேற்கண்ட ஆணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கதர்கிராப்ட் விற்பனை இந்த ஆண்டு 30கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 35% மானிய விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தூத்துக்குடியில் பேட்டி.
தமிழ்நாடு கதர்கிராப்ட் வாரியத்தின் கீழ் இயங்கும் கதர் கிராப்ட் விற்பனை நிலையம் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே உள்ளது இதன் வடிவமைப்பு முற்றிலுமாக புனரமைக்கப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.இந்த தொழில் என்பது சாதாரண சாமானிய மக்களால் நடத்தப்படும் தொழில் எனவே இதனை ஊக்குவிக்க வேண்டும் மாவட்டம் முழுவதும் அந்தந்த தலைமை இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றோம் என்றார் மேலும் கதர் கிராப்ட் விற்பனை வருடத்திற்கு இரண்டு மடங்கு சதவீதம் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இந்த ஆண்டு 30கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 35%மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் பற்றி தெரிவித்த அமைச்சர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த முதல்வர் வெளிநாட்டிற்கு சென்று அன்னிய முதலீட்டை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகமான முயற்சி செய்து வருகின்றார் அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர் வ.உ.சிதம்பரனாரின் 148 வது பிறந்த நாள் விழா இராமேஸ்வரம் தீவு வ.உ.சி. வெள்ளாளர் இளைஞர்கள் நல முன்னேற்றச் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் இன்று நடந்தது. இராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் நடந்த விழாவில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓவியம், பேச்சு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.விபத்தில் உயிரிழந்த முத்துக்குமார் குடும்பத்திற்கு தையல் இயந்திரம், கணவரை இழந்து நலிவடைந்த இரு வருக்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது.மீனவர் சங்கப் நிர்வாகிகள் என்.ஜே.போஸ், தேவதாஸ்,பாஜ., மாவட்ட தலைவர் கே.முரளிதரன், டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி ஷேக் சலீம்,ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஏ.அர்ச்சுணன், அதிமுக நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுணன், திமுக., நகர் பொறுப்பாளர் கே.இ.நாசர் கான், மதிமுக., இளைஞரணி மாநில துணை செயலர் கராத்தே பழனிசாமி, நாம் தமிழர் கட்சி நகர் நிர்வாகி கண்.இளங்கோ, ஏஐடியூசி மீனவர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், தமாகா நிர்வாகி முகேஷ் குமார், யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இராமேஸ்வரம் தீவு வ.உ.சி. வெள்ளாளர் இளைஞர்கள் நல முன்னேற்றச் சங்க த் தலைவர் ஆர்.பி.வினோத்குமார், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஹரிஹரன், ஆலோசகர் பி.ஆர்.ராமநாதன், நிர்வாகிகள் கணேஷ் குமார், சாந்தகுமார், மனோஜ்குமார், பாரதி முத்து, வேடராஜன், சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
You must be logged in to post a comment.