15
மதுரை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உயரழுத்த மின் கம்பம் ஒன்று உடைந்த நிலையில் சாய்ந்துள்ளது ..எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது ..இது பிரதான சாலை என்பதால் கீழே விழுந்தால் மிகப்பெரிய அபாயமும் உள்ளது ..உயரழுத்த மின் கம்பம் என்பதால் மிகப்பெரிய உயிர் சேதமும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது ..பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது ..உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.