இராமநாதபுரம், ஆக.26 – இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருப்புல்லாணி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ துவங்கி வைத்தார். ராமநாதபுரம், மதுரை, அலங்காநல்லூர், மாவட்டங்களின் அரிட்டாபட்டி, மேட்டுபட்டி, கருப்பாயூரணி, மேலூர், குருவித்துறை, ஆர்.எஸ்.மங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருப்புல்லாணி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் ஜெயமுருகன் ஏற்பாடு செய்தார்.
You must be logged in to post a comment.