14
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் குற்றால நாதர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் தீ பரவி தற்காலிக சீசன் கடைகள் சேதம் அடைந்ததன. மெயின் அருவியின் அருகில் உள்ள கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு படை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கேஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பதட்டம் அதிகரித்துள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.