தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில பாரத அனுமந்த் சேனா அமைப்பினர் இறந்தவரை போல கழுத்தில் மாலை அணிந்த ஒருவரை தயார் செய்து மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.