தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று (07/05/2020) மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் அதிகாலை முதலே மது வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமக்கள வாங்கி சென்றனர்.
குறிப்பாக எலைட் என்று அழைக்கப்படும் உயர்ரக மது பானம் விற்கப்படும் கடைகளில் மதுபாட்டில்களை கைகளிலும், கட்டை பைகளிலும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. காவல்துறை தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒருவர் பின் ஒருவராக 3 அடி இடைவெளி விட்டு மது வாங்க அனுமதித்தனர்.
மேலும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருந்தால் மது கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். சாதாரண மதுக்கடைகளில் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக கூட்டம் வரிசையில் நின்று அதுகளை ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் காண்பித்தால் மட்டுமே ஒரு நபருக்கு 750ml ஒன்று மட்டும் வழங்கப்படும் எனவும், இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அதுவும் கொடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் பல இடங்களில் டோக்கன் முறையில் மது வினியோகம் நடைபெற்று வருகிறது. இதனால் மது பிரியர்கள் உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.