12
கொரானா தொற்று பரவல் தடுப்பு களப்பணியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை பணியாளர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணியாளர்களின் பயணப்படி பிடித்தம், விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தம் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர். விஜயகுமார் பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர், கதிரவன், சத்யகிரி, ரமேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.