15
தமிழக அரசு இன்று (07/05/2020) மதுபான கடையை திறந்ததை தொடர்ந்து. தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதைப்போல் கீழக்கரை நகர் கழக செயலாளர் S.A.H பஷீர் அஹமது தலைமையிலும், மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் முன்னிலையிலும் திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் நகர துணைச் செயலாளர் ஜமால் பாருக், வர்த்தக அணி அமைப்பாளர் மக்கள் டீம் காதர் மாவட்ட பிரதிநிதி மரைக்கா,தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் S.K.V முகம்மது சுஐபு, இளைஞர் அணி பயாஸ் நையும் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.