ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
Category:
கீழக்கரை செய்திகள்
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..
written by Abubakker Sithik
கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சுந்தர பாண்டியபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் செங்கோட்டை மேலூரைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராக உள்ளார். அதிகாலை நேரம் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சையது காட்டன் மில்ஸ் முன்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் பேருந்தின் நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக அளவு காயம்பட்டிருந்த பொட்டல்புதுரைச் சார்ந்த பிர்தவுஸ் மற்றும் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறு சிறு காயங்களுடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் தலைவர் ஜாஃபர் ஜலாலுதீன் நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்; கவிஞர் பேரா பேச்சு..
written by Abubakker Sithik
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நெல்லை இலக்கிய விழாவில் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் 07.04.2024 அன்று பொருநை இலக்கிய வட்டத்தின் 2059-ஆவது வார நிகழ்வு நடந்தது. இலக்கிய ஆர்வலர் நசீர் தலைமை வகித்தார். மீனாட்சிநாதன் இறைவணக்கம் பாடினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா.திருமலையப்பன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோதைமாறன், சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, முத்துகுமாரசாமி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். அவர் பேசுகையில் “நடக்க இருக்கும் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும். படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் இவர்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நிலை வருத்தமாக இருக்கிறது. அதுபோல கிராம மக்களை விட நகர மக்களின் வாக்குப் பதிவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக நகரங்களின் விரிவாக்கப் பகுதியில் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கிறது. இந்நிலை மாறிட அனைவரும் வாக்களிப்போம். வாக்களிக்க வைப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் 80-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கோதை மாறனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கவிஞர் பாமணி நன்றி கூறினார். நிகழ்வில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல் துறையினர் தீவிர சோதனை..
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு பொது இடங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வாகனங்களை தேர்தல் தனிப்படை அமைத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024. ஐ முன்னிட்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பணிபுரிய உள்ள 1820 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Presiding officer), 1820 முதல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 1), 1820 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 2), 1820 மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 3), 190 நான்காம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer-4) வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 07.04.2024 அன்று 37-தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு பி.ஏ. சின்னராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும்,
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கஞ்சா போதையில் கொலை வெறித் தாக்குதல் ! தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் !! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை !!!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகாலை பஜர் தொழுகை முடித்து விட்டு வந்த முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஆர் .அப்துல் கரீம் செய்தி குறிப்பில் தெரிவிக்கையில் :-கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா பழக்கங்களும் அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். கஞ்சா போதையில் உள்ளவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. கஞ்சா குடித்து விட்டு வீதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்கிறார்கள். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர் கடுமையான மன உளச்சலில் உள்ளனர். இவை அனைத்தும் அறிந்தும் காவல்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வந்தவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்யக் கூடியவர்களும், கஞ்சா பயன்படுத்தக்கூடியவர்களும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிகமான இரத்தம் வெளியேறியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். தமிழகத்தில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாகி வருவதால் பொதுமக்கள் நிம்மதி இழந்து விட்டனர். இதை கருத்தில் கொண்டு கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான முழு முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! இரவு முழுவதும் ரோந்து பணியில் கீழக்கரை காவலர்கள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வதாகவும் , அதிக சத்தம் கொண்ட வாகனத்தை இயக்குவதாகவும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்: அதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு அனைத்து இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்யப்பட்டதில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களையும் முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். மேலும் இளைஞர்கள் அதிகமானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அரசு விதித்த விதிமுறைகள் படி நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் செயல்பட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார் . மேலும் சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் தான் இது போன்ற தவறுகளை செய்வார்கள் என்றும் பெற்றோர்கள் இன்றைய இளைஞர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இரவு 12 மணிக்கு மேல் இளைஞர்கள் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கீழக்கரை காவல் நிலைய காவலர்கள் செயல்பாடுகளை கண்டு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்..
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் இலவசமாக கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ் 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல் இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவுலத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்திகள்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்மருத்துவம்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
கீழக்கரை நகராட்சி நாய்களைப் பிடித்து நோய் தொற்று பரிசோதனை !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 04 ல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு கிளினிக் எதிர்புற பகுதியில் 8 நபர்களை நாய் கடித்தது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் அடிப்படையில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 7 நாய்கள் பிடிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான பள்ளமோர்க்குளம் ABC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தொற்று ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக வேண்டுகோள் விடப்பட்டது . அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நேரில் பார்வையிடப்பட்டு இராமநாதபுரம் மண்டல இணை இயக்குநர் கால்நடை மருத்துவதுறை அலுவலர் முன்னிலையில் ரேபீஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு (10 நாட்கள்) கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . இதில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா கால்நடை மருத்துவர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை மாணவி; தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வாழ்த்து..
written by Abubakker Sithik
தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை மாணவி; தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வாழ்த்து..
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த ஒன்தாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் ஷைனி தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்றார். அசிசி பள்ளியில் பயிலும் மாணவி ஆக்னஸ் ஷைனியை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் யுனிவர் சிட்டியில் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை தேசிய ஊசூ போட்டி நடந்தது. இதில் பாவூர்சத்திரம் அசிசி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுரண்டை மாணவி எஸ்.ஆக்னஸ் ஷைனி ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். இந்நிலையில், ஊசூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை மாணவி எஸ்.ஆக்னஸ் ஷைனி, பழனி நாடார் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஊசூ பயிற்சியாளர்கள் சத்திய பீமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி..
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகளின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 05.04.2024 அன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள், அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
மேலும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து உழவர் சந்தை வரை விவசாயிகள், அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியில், என் வாக்கு என் உரிமை, வாக்களிப்பது நம் கடமை, 100 சதவீதம் வாக்குப் பதிவு போன்ற வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை விவசாயிகள், அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஏந்தி வந்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கோ. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச.கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) சங்கர், தென்காசி, வேளாண்மை துணை இயக்குநர் (பொ) உதயகுமார், தென்காசி, வேளாண்மை உதவி இயக்குநர் ஜோதிபாசு, தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்களைச் சார்ந்த முன்னோடி விவசாயிகள் ஜாகீர் உசேன், பெரியசாமி, இஸ்மாயில், கோமதி தேவர் மற்றும் பெருந்திரளான விவசாயப் பெருமக்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் பி.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நாடார் பேட்டையில் Pssj மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பள்ளியில் தாளாளர் கார்த்திக் தலைமையில் நாடார் பேட்டை தலைவர் மாடசாமி கல்வி குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த வழக்கறிஞர் கிருபாகரசேகரன் , வழக்கறிஞர் தேவ பிரீத்தி தினகரன் , வேலு மனோகரன் கலைக் கல்லூரி பேராசிரியர் சுதா தாசின்பீவி அப்துல் காதர் கல்லூரி பேராசிரியர் விசாலாட்சி , எஸ்தர் செந்தில் குமார் முதுகலை ஆசிரியர் ஜெய் சங்கர் ஆசிரியர் சேர்மத்தாய்வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சுரேஸ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் நிர்வாகிகள் நாக ஜோதி முருகரேவதி சுரேஸ் கண்ணன் நாணல் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் . ஸ்போக்கன் இங்கிலிஷ் முதல்வர் நன்றியுரை வழங்கினார். பாலகிருஷ்ணன் லயன்ஸ் கிளப் பொருளாளர் கலந்து கொண்டவர்கள் சுந்தரபாண்டியன் அழகர்சாமி ராஜேஷ் ராஜா மற்றும் பெற்றோர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் தேர்தல் பிரச்சாரத்தில் செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என பேசிய டிடிவி தினகரன்..
written by Abubakker Sithik
மதுரை அலங்காநல்லூரில் டிடிவி தேர்தல் பிரச்சாரம்; செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என டிடிவி தினகரன் பேச்சு..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஆர் பி உதயகுமாரை பபூன் என்றும், செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என்றும் டிடிவி தினகரன் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆன பின்பு நாங்கள் விரல் சூப்பிக்கொண்டு இருக்க முடியாது. இன்று டிடிவி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியதன் காரணம் உண்மையான தொண்டர்களுக்கு ஜனநாயக கட்சியான அதிமுகவை மீட்டெடுப்பதற்கும் அம்மாவின் கட்சியை மீட்டெடுப்பதற்கும் தான் என்றும், அதற்கு அமமுக ஒரு ஆயுதமாக உள்ளது. ஆர் கே நகர் தேர்தலில் மட்டும் தானே வெற்றி பெற்றீர்கள். அதன் பிறகு நடைபெற்ற மக்களை தேர்தலில் ஜெயிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கவில்லையே என்று கூறுகிறார்கள் என்று கேட்டபோது, அமமுகவை மக்கள் மூன்றாவது அணியாக தான் பார்த்தார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் நாய் என்றும் சிங்கமாகாது நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறலாம் என்றும், நாங்கள் அவர்கள் வீட்டில் காவலாளியாகவும் அடிமைகளாகவும் இருந்தோம் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு காவலாளியாக இருந்தவங்க இன்னும் காவலாளியாக தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றியுடன் உள்ளார்கள். இவர்கள் நன்றி இல்லாதவர்கள். துரோக சிந்தனை உள்ளவர்கள் அதனால் தான் இரட்டை இலை பலவீனமாகி வருகிறது.
நானும் பன்னீரும் இணைந்து இருப்பது இரட்டை இலையை மீட்டெடுக்கத்தான். மீட்டெடுத்து அதை திரும்ப தொண்டரிடம் ஒப்படைப்பதற்காக தான் இணைந்து இருக்கிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள் திருடிட்டு ஓடுறான் என்று திருடனே சொல்வதைப் போல உங்களிடம் இருந்து இரட்டை இலையை பெற்று தொண்டர்களிடம் கொடுப்போம். இந்தி எதிர்ப்பு குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு அண்ணாமலை கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக சொல்லவில்லை. பேரறிஞர் அண்ணா 1967இல் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியை திணிக்க முயன்ற போது அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது காங்கிரஸில் இருந்த காமராஜருக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை.
சமீபத்தில் சர்வே ஒன்று படித்தேன் தாய்மொழி கல்வி படிப்பவர்கள் தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் தாய்மொழி கல்வியான தமிழ் படிப்பவர்கள் 9 சதவிதமாக குறைந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் போட்டி அதிமுக திமுகவிற்கு தான் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு அதற்கு பதில் ஜூன் 4-ம் தேதி தெரியும் என்றும் சசிகலா பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்விக்கு அதிமுகவை மீட்டெடுப்பதில் இருப்பவர் எப்படி பிரச்சாரத்திற்கு வருவார் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொது மக்கள் அவதி..
written by Abubakker Sithik
சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்கள் அவதி..
சோழவந்தான் ரயில்வே கேட் முன் அறிவிப்பு இன்றி மூடியதால் அன்றாட வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது மட்டும் அல்லாது ரயில்வே கேட்டுக்கு வடபகுதியில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்கின்றனர். இவர்களுடைய அன்றாட தேவைக்கும் அடிப்படை தேவைக்கும் தென்பகுதிக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது இவர்கள் பெரும்பாலும் நடந்து செல்லக் கூடியவர்கள். சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், தற்போது திடீரென்று முன் அறிவிப்பு இன்றி ரயில்வே கேட்டை மூடியதால் பல்வேறு மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். ரயில்வே கேட் மூடியது தெரியாமல் இருபுறமும் மக்கள் ரயில்வே கேட்டுக்குள் புகுந்து தண்டவாளத்தை ஆபத்து அறியாமல் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிர் சேதம் நடக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் இவர்களுக்கு நடந்து செல்வதற்கான மாற்று ஏற்பாட்டை செய்து தரும்படி இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டு வெடி குண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
written by Abubakker Sithik
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்களை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினரை கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி நபரிடம் விசாரணை செய்ததில், சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி நாட்டு 8 வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டு கார்த்திக் என்பவருக்கும் கொடுத்து வைத்திருப்பதாகவும், மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ் (34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக் (25) சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர் (19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயில் இன்று (31/03/2024) லேன்ட் மார்க் ஹோட்டலில் கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்களின் இஃப்தார் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 40கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் அக்பர்கான் வருங்காலத்தில் படித்து விட்டு அமீரகம் வரும் சகோதரர்கள் எவ்வாறான தொழிற் படிப்புகள் அவசியம் என்பதையும், தெருவின் நலன் மற்றும் வளர்ச்சியுயும் மனதல் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதை தொடர்ந்து அமீரகத்தில் தொழில் புரியும் மற்ற சகோதரர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அது போல் வரும் காலங்களில் தெரு மக்களின் ஒன்று கூடலை தொடர்ச்சியாக நடத்துவது, வேலை தேடி வரும் நபர்களுக்கு வழிகாட்டும் மையம் அமைத்தல், தற்போதைய அமீரகத்தின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் போன்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டது.
பின்னர் அனைவரின் நலம் விசாரிப்புடன் நிகழ்ச்சி் இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 30.03.2024 அன்று தென்காசி தனி நாடாளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை பார்வையாளர் பங்கஜ் நைன், பாராளுமன்ற தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின்றி நடக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து வேட்பாளர்களும் தொகுதி வாரியான செலவின கணக்குகளை பராமரித்து வரவேண்டும் எனவும், உரிய காலத்தில் செலவின கணக்குளை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தெரிவித்ததாவது, தேர்தல் நடத்தை தொடர்பான புகார் மற்றும் கருத்துக்களை தென்காசி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425 8375 வாயிலாகவும், வாக்காளர் உதவி மைய எண் 1950 என்ற எண்ணிலும் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள cVIGIL என்ற செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் எவரேனும் நேரடியாகத் தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க விரும்பினால் குற்றாலம், அரசு விருந்தினர் மாளிகையில் அறை எண்.102- ல் தினமும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும், கைபேசி எண் 9363752362 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
கூட்டத்தில் தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக அனைத்து கட்சியினரும் மற்றும் வேட்பாளர்களும் எழுப்பின சந்தேகங்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் உரிய பதிலளித்தனர். இக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சதீஷ்குருமூர்த்தி, சித்திக் முகமது அமீர் முகமது இக்பால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா கூட்டணி நெல்லை தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா..
இந்தியா கூட்டணியின் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நெல்லை பைபாஸ் சாலையில் மத்திய மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.
மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான், தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஞானதிரவியம் M.P. பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் MC மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட, பகுதி, நகர, நிர்வாகிகள் மற்றும் முன்னாள் MPக்கள் விஜிலா சத்தியானந் ஹெலன், இந்தியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராம், சிபிஐ மாவட்ட செயலாளர் சடையப்பன், காசி விஸ்வநாதன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், பாட்டபத்து முகம்மது அலி, விசிக மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சேகர், முத்து வளவன், உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P..சுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில், 29.03.2024 அன்று வாசுதேவநல்லூர் பகுதிகளில் RPF வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் RPF வீரர்கள் முக்கிய வீதிகளில் மேலதாளங்கள் முழங்கிட ஊர்வலமாக சென்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.