ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
72
You must be logged in to post a comment.