திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா பெரியகோட்டையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான எம் சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் தரமற்ற முறையில் மணல் தயாரிப்பதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பழனி சார் ஆட்சியர் அருள்ராஜ் அவர்கள் இன்று குவாரியை சோதனை செய்ததில் தரமற்ற மணல் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டு குவாரியை சீல் வைத்தனர். மேலும் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.
Category:
கீழக்கரை செய்திகள்
மதுரையில் காவல்துறை சார்பாக 13/12/2018 அன்று மனுதாரர்கள் குறை தீர்க்கும் நாள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் (குடும்ப பிரச்சனைகள், வரதட்சணை கொடுமைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகள் தொடர்பான மனுக்களை ஏற்கனவே காவல் ஆணையர் அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள், காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்களிடம் நேரடியாக மனு கொடுத்த மனுதாரர்கள் காவல் உதவி ஆணையர் (வரதட்சணை ஒழிப்பு பிரிவு) அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான தல்லாகுளம், திருப்பரங்குன்றம், தெற்கு, டவுன் மற்றும் ஆகிய காவல் நிலையங்களில் மனு கொடுத்து தற்போது மனு விசாரணை முடிவடையாமல் நிலுவையிலுள்ள மனுதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் வரும் 13.12.2018 ம் தேதி காலை 09.00 மணிக்கு மதுரை மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் மனுதாரர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வாதற்காக சிறப்பு மனு மேல்விசாரணை முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். மனு விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (10/12/2018) கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வரவேற்புரையை கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழகம் செயலாளர் செய்யது இபுராஹிம் வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து தலைமையுரையை டாக்டர் துரைஸ்லிங்கம் வழங்கினார். பின்னர் கீழக்கரை BSNL அதிகாரி காளிமுத்து நுகர்வோர் சம்பந்தமான சிறப்புரையாற்றினார். பின்னர் கீழக்கரை மக்கள் டீம் காதர் மற்றும் புதுவை நுகர்வோர் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு செயலாளர் ஹலீல் பெய்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வான TRAI அமைப்புக்கான கருத்து கேட்கும் நிகழ்வு அவ்வமைப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியாக இராமநாதபுரம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் லதா நன்றியுரை வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை பணி மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் விரைவு படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மண்டபம் பேரூராட்சி 6, 9, 10 மற்றும் 11 வது வார்டு புதிய உறுப்பினர்களுக்கு திமுக மூத்த உறுப்பினர்கள் இல்லம் தேடிச் சென்று வழங்கினர்.
ஒன்றிய பிரதிநிதி செல்ல மரைக்காயர் (எ) முகைதீன் அப்துல் காதர் தலைமையில் மூத்த உறுப்பினர் அப்துல் ஒஜீத், நகர் இளைஞரணி முன்னாள் செயலாளர் வே.செந்திவேல், வார்டு முன்னாள் செயலாளர்கள் லக்கி எம்.சகுபரலி, அல் ஹசன், ஆர்.சக்திவேல், மீராசா, யாஹியா கான் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், பணி நியமனக்குழு உறுப்பினருமான ஆர்.ராஜகோபால் வழங்கினார். உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள் திமுக தலைமைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் பல் வேறு அரசியல் அமைப்புகள், சமூக நல் அமைப்புகள், தன்னார்வலர்கள் என பல தரப்பில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்த வண்ணம் உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கீழக்கரை பெத்தரி தெரு மக்கள் நல சங்கம் மூலமாக ₹.40,000/-திற்கு மதிப்பு உள்ள தொகைக்கு அரிசி மற்றும் மசாலா பொருட்கள் கிட்டத்தட்ட 136 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்கள் அறந்தாங்கி அருகில் உள்ள காயக்காடு என்ற பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடிமுல்லை நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேலூர் அடுத்த சேனூர் ஆர்ஜி. முல்லை நகர் குளக்கரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு யாக கால பூஜை தீபாராதனை நடைபெற்றது பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. மகாதீபாராதனை பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
அதே போல் வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு மார்க்க பந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறப்பு நடைபெற்றது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) முன்னிட்டு நள்ளிரவு சிம்ம குளம் திறப்பு நடந்தது. பெண்கள் இந்த சிம்ம குளத்தில் மூழ்கி எழுந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் தீவினை நீங்கி நலமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலில் படுத்து இருந்து சிம்ம குளத்தில் மூழ்கி பின்பு மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்க்க பந்தீஸ்வரர் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார் உதவி ஆணையர் விஜயா, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
கே.எம்.வாரியார், செய்தியாளர் – வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 72வது பிறந்த தினம் ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் இன்று (09/12/2018) கொண்டாப்பட்டது.
இராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை , ஈஷா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை, அன்னை ஜெபமாலை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், துல்கீப், மாவட்ட பொதுச் செயலர்கள் அகமது கபீர், மேகநாதன், சேமனூர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கருப்பையா, ஊடகத் தொடர்பாளர் ஹாஜா நஜிமுதீன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நகர் தலைவர் கோபி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பன்முக கலாசாரம் கொண்ட இராமேஸ்வரத்திற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் வருவோருக்கு மிகுந்த இடையூறு தரும் இடமாக பாம்பன் பாலம் இன்றும் உள்ளது.
இதை தொடர்ந்து கலாம் நினைவிடம் துவங்கி ராமநாதசுவாமி கோயில் செல்வதற்குள் சந்திக்கும் போக்குவரத்து இடையூறை வார்த்தைகளால் சொல்லி மாளாது. நான்கு சாலை சந்திப்பு பகுதியாக திட்ட குடி உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் சாலை விழிப்புணர்வு விதிகளுடன் கூடிய தடுப்பு கம்பி மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. தற்போது சபரிமலை பக்தர்கள் ஆன்மிக பயணமாக ராமேஸ்வரம் வரத்துவங்கி உள்ளனர். இதனால் திட்ட குடி சந்திப்பில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசாரின் தடுப்பு கம்பி வேலியை அப்புறப்படுத்த மாவட்ட காவல் நிர்வாகம் முன் வரவேண்டும் என ராமேஸ்வரம் பொது மக்கள் கோரியுள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அம்மணம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், கைபேசி எண் சேர்த்தல், முகவரி மாற்றம், ஆகிய சேவைகள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு வட்ட வழங்கல் ஆய்வாளர் முருகேசன், உதவியாளர் மூர்த்தி, அம்மணபாக்கம் நியாய விலைக் கடையின் பணியாளர் கன்னியம்மாள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜன., 2வது வாரத்தில் சபரிமலை சென்று மகர ஜோதி தரிசனம் செய்து வருவது வழக்கம். நடப்பாண்டு நவ.17 இல் ஐயப்ப பக்தர்கள் தலைமை பக்தர் மோகன் தலைமையில் ஏராளமானோர் ஆறு வார விரதம் துவக்கினர். இதையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்றிரவு வல்லபை ஐயப்ப கோயில் படி பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் தலைமை பக்தர் மோகன் தலைமையில் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். டி ச., 26ல் மண்டல பூஜை நடக்கிறது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேர்மையாளர் உ.சகாயம் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களிலும் 04-11-2018 அன்று ஒரு மணி நேரத்தில் 1,43,850 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
இந்த மாபெரும் சாதனையை அங்கீகரித்து வில் மாநில சாதனை விருது மக்கள் பாதைக்கு வழங்கப்பட்டது. இந்த உயரிய விருதினை வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் தலைவர் கலைவாணி, செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் வழங்கினர்.
மக்கள் பாதையின் மாபெரும் சாதனை விருதை இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன் குமார், நூருல் அமீன், சரவணக்குமார் மற்றும் மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளர்கள் தினேஷ், வீரக்குமார், ராஜ்கபூர், சிலம்பரசன் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை கிளாசிபைடு நிறுவனர் சேக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாநிலம் முழுவதும் பனை விதை விதைப்பு நிகழ்வை ஒருங்கிணைத்த பனை விதை குழு பொறுப்பாளர்கள் வட சென்னை மணி, திருவள்ளூர் முத்துக்குமார், இராமநாதபுரம் நூருல் அமீன் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார். கண்காட்சியை பள்ளித் தாளாளர் கணேசக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், சங்ககால கருப்பு சிவப்பு மண் குவளைகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானைஓடுகள், வட்டச்சில்லுகள், இரும்புத்தாதுக்கள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், கல்வெட்டுப் படிகள், நாணயங்கள், பழமையான செங்கற்கள், ஓடுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவிகள் ராய் அன்சிகா, மதுமிதா, முகிஆஸிகா, அஸ்விகா, பத்மாவதி, விருத்திகா ஆகியோர் பாரம்பரியப் பொருள்கள் பற்றி விளக்கமளித்தனர். கண்காட்சியை பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் பார்வையிட்டு அறிந்துகொண்டனர். மன்றப் பொறுப்பாசிரியர் சந்தியா நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு காட்பாடி தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கினார்.
வேலூர் சப்-கலெக்டர் மெகராஜ் அனைத்து கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் மேலும் வாக்காளர் தகவல் குறித்து விளக்கி கூறினார். இதில் வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் சமூக நல திட்ட தாசில்தார் நரசிம்மன் அனனத்து கட்சியினர் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் பட்டிணம் காத்தான் ஊராட்சியில் ஆரோக்யா மருத்துவமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு திட்ட குடியிருப்போர் நலச்சங்கம், தேசிய பசுமை படை சார்பில் பட்டிணம் காத்தான் ஊராட்சி பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைவர் அ.நாகசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் எம்.அங்குசாமி, செயலாளர் எஸ்.நடராஜன், இணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எம்.கருப்பசாமி முன்னிலை வகித்தனர். பட்டணம் காத்தான் ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார்.
இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துமனை நிறுவனர் டாக்டர் ஆர்.பரணி குமார் மரக்கன்று நட்டார். செயற்குழு உறுப்பினர்கள் வி.நிறைமதி, எஸ்.பொன்னையாண்டி, கே.அழகர்சாமி எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா, டி.கிருபாகரன், எம். பாட்ஷா, மாதவன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட், மற்றும் டாக்டர் மலையரசு, ஓம் சக்தி நகர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரோக்யா மருத்துவமனை நிறுவனர் ஆர். பரணி குமார், டாக்டர் பி.வித்யா பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 102மாணவர்களுக்கான (“வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் கல்லூரியின் S.M முஹம்மது சதக் தஸ்தஹீர் அரங்கத்தில் நடைபெற்றது.
கணினி பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றர். கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையின் மூலம் +2 என்பது உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் படிப்பு அதில் இறை நம்பிக்கையுடன் கூடிய கல்வியை விடாமுயற்சியுடன் கற்றால் எதையும் சாதிக்கலாம். எனவே ஒவ்வொரு மாணவரும் இறை நம்பிக்கையுடன் இந்த +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பொறியியல் துறையை தேர்வு செய்து சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தினார். மேலும் கல்லூரியில் உள்ள பொறியியல் பாடப்பிரிவுகளின் சிறப்பும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.
கல்லூரி டீன் தனது சிறப்புரையில் பொறியியல் பட்டதாரிகளாக படித்து வருங்கால சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தி எங்கள் கல்லூரியில் பொறியியல் பாடம் கற்றுதருவதோடு, Cloud computing, CISCO networking, CADD, Big DATA, Data Mining, Embedee system, ஆங்கிலப்புலமையை பயிற்றுவித்தல் மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான தனித்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகுத்து கொடுக்கின்றோம் என தெரிவித்தார்.
கல்லூரியின் கணினி பொறியியல் துறை துணைப் பேராசிரியை ரசினா பேகம் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித்தொகைகள் பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய இயற்பியல் பிரிவு ஆசிரியர் தங்கபாண்டியன், அரசு உயர்நிலைப் பள்ளி, சாத்தனூர் வேதியியல் பிரிவு ஆசிரியர் சூர்யா, அரசு மேல்நிலைப் பள்ளி, மங்களகுடி கணித பிரிவு ஆசிரியர் நவநீத கிருஸ்ணன், முதல்வர் எலைட் பள்ளி, இராமநாதபுரம் ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர். மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய விடாமுயற்சியால்தான் நீங்கள் நாளைய சாதனை படைக்கும் பொறியாளாராக உருவாவதற்கு விடாமுயறடசியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர்.
தேவிபட்டிணம், விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் தீனதயாளன் மாணவர்களுக்கான உத்வேக உரையும்இ மாணவர்களின் நினைவாற்றலை எவ்வாறு வளர்த்து கொள்வது என்பதை பற்றி எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இராமேஸ்வரம், மண்டபம், திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், இரட்டையூரணி, முதுகுளத்தூர். பார்த்திபனூர், திருவாடனை, ஏர்வாடி, கீழக்கரை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த சுமார் 1800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் +2 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் எப்படி பெறுவது போன்ற வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர்.
கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் முனைவர். ஜெயசீலன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மயில்வேல்நாதன், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக 108 ஆம்புலன்சில் மெடிக்கல் டெக்னீசியன் மற்றும் டிரைவர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
மெடிக்கல் டெக்னீசியனுக்கான தகுதி: பி.எஸ்சி., (தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி) +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட நர்சிங் அல்லது மூன்று வருட நர்சிங், பி.எஸ்சி (நர்சிங்) வயது:19 வயது முதல 30 வயது வரை.
ஊதியம் : ரூ.13,650
பைலட் (டிரைவர் ) க்கான தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி இலகு ரக வாகன உரிமம் பெற்று மூன்று ஆண்டுகளுடன் பேஜ் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 24 வயது 35 வயது வரை மட்டும்:
ஊதியம்: ரூ.13,100
இடம்: பரமக்குடி அரசு மருத்துவமனை
நாள்: 10.12.2018
தொடர்புக்கு: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: தமிழ்செல்வன்- 73977 24828, 73974 44156
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி சந்தோஷ்குமார் இன்று 08.12.2018 அதிகாலை தப்பி ஓடினார். மருத்துவமனையில் சந்தோஷ்குமாருக்கு பாதுகாப்பில் இருந்த தொண்டி சிறப்பு எஸ்ஐ சுல்தான் இபுராஹீம், திருப்பாலைக்குடி போலீஸ்காரர் காகிதமூர்த்தி, ஆர் எஸ் மங்கலம் போலீஸ்காரர்கள் முத்துராமலிங்கம், பாலமுருகன் ஆகியோரை ஓம் பிரகாஷ் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
http://keelainews.com/2018/12/08/convict-escape/
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் (NPCI – National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.
விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.
யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI – National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன்,
மூத்த நிருபர்,கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 48 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம் நசெய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் பார்வையாளர் செய்தியாளர் கூறினார் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் கே.மிஸ்ரா வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.ராமன் திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது வாக்காளர் பட்டியல் சேர்த்தல் நீக்கல் குறித்து விசாரணை செய்தனர். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செய்யபடும் வாக்காளர் அலுவலகத்தை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து விசாரணை செய்தார்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்திற்கு சென்று அங்கு இருந்த பயனாளிகளிடம் சேவை குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்கள் கூடிய சந்தோஷம் வாக்காளர்களை கண்டு நீக்குதல் இறந்தவர்களின் பெயர் மற்றும் ஒரு இடத்தில் வாசித்தவர்கள் இன்னொரு இடம்பெயர்ந்தவர்கள் பெயர்கள் இரண்டு அல்லது மூன்று முறை வந்தால் அவரை கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுத்து விசாரணை செய்து பாரம் 7 கொடுத்து அதை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவற்றை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் வாலாஜா தாலுகாவில் 5000 பேரும் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர் பின்னர் வாலாஜா தாலுக்கா கடபேரி கிராமத்தில் வாக்குச்சாவடி நேரில் பார்வையிட்டுடார் உடன் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாசியர் வேணுசேகரன் (பொறுப்பு) வாலாஜா வட்டாசியர் வேண்டும்.பூமா வாலாஜா நகராட்சி ராணிப்பேட்டை நகராட்சி ஆற்காடு நகராட்சி ஆணையர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கே.எம்.வாரியார், செய்தியாளர், வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் சனவேலியை சேர்ந்த ஜோதிடர் சங்கரபாண்டியன். நேற்று தினம் (06.12 2018) மதியம் இவர் வீட்டு கதவு திறந்து கிடந்தது. வெளியே சென்றிருந்த சங்கரபாண்டியன் வீடு திரும்பிய போது, வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் சங்கரபாண்டியன் வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்றார். அப்பகுதியைச் மக்கள் . அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 13 பவுன் நகை, ரொக்கம் திருடு போனதாக போலீசில் சங்கரபாண்டியன் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக ஆர் எஸ் மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசில் ஒப்படைக்கப்பட்ட காயமடைந்த வாலிபர் சென்னை வியாசர்பாடி சுப்ரமணியன் மகன் சந்தோஷ் குமார் 28 என தெரிந்தது. அதே நேரம் கைது செய்யப்பட்டவர், தான் இராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி சென்ற போது இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள கண்மாய் சென்று விட்டு திரும்பிய பொழுது தன்னை அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் கட்டி போட்டு கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து ஆர் எஸ் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரித்து வருகிறார். தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். இன்று (07/12/2018) அதிகாலை சந்தோஷ்குமார் கழிப்பறை செல்வதாக கூறிச் சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்ப வில்லை. போலீசார் தேடிச் சென்றபோது கழிப்பறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து அது வழியே தப்பி ஓடியது தெரிந்தது. ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சந்தோஷ்குமாரை தப்ப விட்டு பாதுகாப்பு பணியிலிருந்த 4 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.