11
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 72வது பிறந்த தினம் ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் இன்று (09/12/2018) கொண்டாப்பட்டது.
இராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை , ஈஷா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை, அன்னை ஜெபமாலை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், துல்கீப், மாவட்ட பொதுச் செயலர்கள் அகமது கபீர், மேகநாதன், சேமனூர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கருப்பையா, ஊடகத் தொடர்பாளர் ஹாஜா நஜிமுதீன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நகர் தலைவர் கோபி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
You must be logged in to post a comment.