தமிழகத்தில் அரசியல் கட்சி முதல் தனியார் அமைப்புகள் வரை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக நிதி அளித்து வரும் வேளையில் மதுரை மாநகர் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் குழந்தைகள் அஸ்வின் குமார் மற்றும் அக்ஷயா, அதே போல் நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த அரவிந்த் குமாரின் குழந்தை நிலா ஸ்ருதி ஆகியோர் சிறுக சிறுக சில்லரையாக சேமித்து வைத்திருந்த சில ஆயிரங்களை வாரி வழங்கியுள்ளனர்.
இக்குழந்தகைகள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தன் சேமிப்பு மதுரை மாவட்ட ஆட்சியாளர் நேர்முக உதவியாளர் திருமதி வானதியிடம் வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.