Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் – இஸ்லாமிய கல்வி சங்கம்..

கீழக்கரை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் – இஸ்லாமிய கல்வி சங்கம்..

by ஆசிரியர்

இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி கீழக்கரை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், “ கீழக்கரையில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதனை கருத்தில் கொண்டு கீழக்கரையில் கடந்த 07/04/2020 மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் சுகாதார துறையினர் வீடு வீடாக கணக்கு எடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள் உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை சளி, இருமல், மூச்சு்திணறல் , சக்கரைவியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று கணக்கு எடுத்து வருகிறார்கள் அதனுடன் குடும்ப தலைவர் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கேட்டு வருகிறார்கள்

இந்த சூழலில் மக்களுக்கு ஒரு அய்யம் ஏற்படுகிறது இது NPR, NRC, CAA க்கு இருக்குமோ என்று, இது சுகாதார துறையின் ஆய்வு மட்டுமே. இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இதை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி வரும் சுகாதார துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நம் ஊரை கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாப்போம்.

மேலும் மேற்கூரிய அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் சுகாராத துறை ஆய்வாளர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இது தவிர்த்து உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் படியான கேள்விகளோ அல்லது செயல்களோ நடைபெற்றால் எங்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். என் வெளியிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!