ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனி முகம்மது என்பவரின் மகன் கை என்ற முகமதுகான் (வயது 32) இவரும் கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சதாம் என்ற சதாம் உசேன் (34) என்பவரும் தொடர்ந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் மேற்கண்ட சதாம் என்ற சதாம் உசேன் மற்றும் கை என்ற முகமது கான் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மேற்கண்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Category:
கீழக்கரை செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
written by Abubakker Sithik
வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி USP கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால் ட்ரோன்கள் (Drones), ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System RPAS) பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024, 37.தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19.04.2024 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி USP கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேற்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி USP கல்லூரி குழுமம் வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் (Drones) ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System -RPAS) பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்திற்கான விருது; ஒன்றிய அரசின் காயகல்ப் மதிப்பீட்டில் முதலிடம்..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 2023 24 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வழங்கும் மாநில அளவிலான அனைத்து மருத்துவமனைகளின் காயகல்ப் மதிப்பீட்டில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று ரூபாய் 50 லட்சத்திற்கான விருதினை தட்டிச் சென்றுள்ளது. ஒன்றிய அரசானது மாநில அளவில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வுக் குழுக்கள் மூலம் ஆய்வு செய்து ஆண்டுதோறும் காயகல்ப் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. ஆண்டு தோறும் மாநில அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுத்தம், சுகாதாரம் மற்றும் நோய் தொற்று கிருமிகள் பரவுதலை தடுக்கும் வழிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை காயகல்ப் திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்து, சிறந்த முறையில் பின்பற்றும் மருத்துவமனைக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான காயகல்ப் மாநில அளவிலான மதிப்பீடு ஆய்வு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கடந்த ஜனவரி மாதம் 19 மற்றும் 20ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த ஆய்வினை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பாவேந்தன் மற்றும் ஈரோடு அந்தியூர் அரசு மருத்துவமனை செவிலியர் குமாரசுவாமி இருவரும் இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொண்டனர். 35 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கலந்து கொண்ட இம்மதிப்பீட்டு போட்டியில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 92.57 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்று ரூபாய் 50 லட்சம் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
இது குறித்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறும் போது, இந்த விருதின் வெற்றி தன்னலமற்று கடினமாக உழைத்த அனைத்து பணியாளர்கள், QPMS பணியாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நட்புணர்கள்,, நுண் கதிவீச்சாளர்கள், மருத்துவர்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு முயற்சியின் பலனாகும். தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் படி , மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா ஆலோசனைபடியும் செயல்பட்டு இந்த விருதினை பெற்றுள்ளோம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த விருதினை பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும், முக்கியமாக மாநில NQAS திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் மருத்துவர் பாவேந்தன், மருத்துவர் ரியாஸ் மற்றும் சுகுணா ஆகியோருக்கு நன்றிகளை கூறிக் கொண்டார்.
இணை இயக்குனர் நலப்பணிகள் பிரேமலதா கூறும் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையிலான, அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் அடங்கிய குழுவின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என குறிப்பிட்டதுடன், அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை கூறிக்கொண்டார். மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வ பாலா, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எஸ்.எஸ் ராஜேஷ் ஆகியோரின் தலைமையிலான தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும், மருத்துவமனை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க ஒத்துழைக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் மண்டகப்படி ஜமீன்தாரால் நடத்தப்பட்டது. 2ஆம் நாள் மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3ஆம் நாள் மண்டகப்படி செட்டியார், பிள்ளைமார் சமூகத்தினர் சார்பிலும், 4ஆம் நாள் மண்டகப்படி நாடார் சமுதாயமும், 5ஆம் நாள் மண்டகப்படி சேனைத்தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும், 6ஆம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதாயத்தினரும், 7ஆம் நாள் கோட்டைத்தெரு தேவர் சமுதாயத்தினர் மண்டகபடியாகவும், 8ஆம் நாள் அனைத்து சமுதாயம் சார்பில் முளைப்பாரி. தீச்சட்டி, ஆயிரம் கண்பானை. உருவம் மற்றும் மாவிளக்கு, பறவை காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் நாள் திருநாளை முன்னிட்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். 10ஆம்நாள் திருவிழா 9ஆம்தேதி திருவிழா விஸ்வகர்மா சமுதாயத்தினர்கள் சார்பில் நடைபெற உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவி மூ.சூரிய லட்சுமி தெரிவிக்கையில் :- விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி பருத்தி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் . பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதில் மானாவாரி நிலங்களில் பருத்தியின் ரகங்களை தேர்ந்தெடுத்து அதை விதை நேர்த்தி செய்தும் பருத்தி விளை நிலங்களை பக்குவப்படுத்தி அதில் அதிக மகசூல் ஈட்டுவதற்கு தெளிவாக செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் பருத்தியை எவ்வாறு விற்பனை செய்து வருகின்றனர் என்பதையும் எவ்வாறு பருத்தி சாகுபடி செய்கின்றனர் என்பதையும் தெளிவாக விளக்க உரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கூடுதலாக ஈட்டப்படும் என்றும் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயம் செய்வதற்கு ஒரு தனியாக இருக்கும் என்று தெரிவித்தனர் இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைபள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதிய 131 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளியின் மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-97, இயற்பியல்-99, வேதியியல்-97, கணிதம்-100, கணினி அறிவியல்-100. இப்பள்ளி மாணவி ஆர்.பேச்சியம்மாள் தேவி 580 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி யு. நித்யகல்யாணி 571 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240506_194903-large.jpg?resize=720%2C431&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240506_194715-large.jpg?resize=720%2C494&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/Untitled-design_20240507_171047_0000-large.jpg?resize=1024%2C576&ssl=1)
மேலும் கணினி அறிவியலில் எம்.பத்ரி நாராணயன், எஸ்.அபிராமி, ஏ.சாருண்யா, கணிதத்தில் எம்.பத்ரி நாராயணன், எஸ்தருண், எம்.சூரியபிரகாஷ், இயற்பியலில் எம்.சூரிய பிரகாஷ், வணிகவியலில் எச்.முகமது அஃப்சல் ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்ச்சி பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கீழக்கரை சமூக ஆர்வலர் வாழ்த்து !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 105 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 99 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் முன்னாள் துணைத் தலைவரும் சமூக ஆர்வலருமான முகம்மது அஜிஹர் கூறுகையில் :- கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத்துக்கு கீழ் இயங்கி வரும் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் 13 மாணவ மாணவிகள் 500/600 ம் நான்கு மாணவ மாணவிகள் 550/600 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர் மேலும் பள்ளியில் 575/600 முதல் மதிப்பெண் பெற்று 94.28% சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர் முதலில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு , வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் , மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6302 மாணவர்களும், 7247 மாணவிகளும் என மொத்தம் 13,549 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று தேர்வு முடிவுகள் வெளியிட்ட முடிவின்படி 5850 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 92.83% தேர்ச்சி அடைந்துள்ளனர். 7007 மாணவிகள் தேர்ச்சி பெற்று 96.69% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 94.89% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 19 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் 36 மேல்நிலைப்பள்ளிகளில் 04 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 53 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 37 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளனார் .இந்த தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற்று வரும். இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக மே 9ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் இருந்து தர்ஹா ஹக்தார்களால் மவ்லிது ஷரீப் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு 23 நாட்களுக்கு ஓதப்படும். அதனைத் தொடர்ந்து மே 19-ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலம் ஆக எடுத்துவரப்பட்டு சிறப்புமிகு கொடியேற்றமும் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 31-ம் தேதி மாலை தொடங்கி ஜூன் 1-ம் தேதி அதிகாலை மேலதான முழங்க யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர, அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும். இதனை தொடர்ந்து ஜுன் 7-ம் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7.00மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு வழங்கப்படும். 850வது சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நிறைவு பெறும். இதை தர்ஹா கமிட்டினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000932970-large.jpg?resize=1024%2C768&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933354-large.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933353-large.jpg?resize=1024%2C461&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறும் இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 9ல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தனக்கூடு திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கும் அமைதியான வழியில் திருவிழாவை நடத்துவதற்கு வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏர்வாடி தர்கா கமிட்டி நிர்வாகிகள் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் கீழக்கரை டிஎஸ்பி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லஞ்சம் வாங்கிய நில அளவைத் துறை பொறியாளர் கைது ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த அட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச் செல்விக்கு என்மனம் கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா உட்பிரிவு செய்ய இ-சேவை மூலமாக மனு செய்து இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தை பலமுறை நாடியுள்ளார். மேலும் நிலத்தை அளவீடு செய்து அதன் அறிக்கையை நில அளவீட்டாளர் அளந்து கணினி மூலம் பதிவேற்றம் செய்ய சம்பந்தபட்ட பகுதி நில அளவையர் சிவா என்பவரை சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது நிலத்தை அளவீடு செய்யவும் கணினியில் பதிவேற்றம் செய்யவும் பட்டா உட்பிரிவு செய்யவும் நிறைய செலவாகும் என்றும் மேல் அதிகாரிகளை தனியாக கவனிக்க வேண்டும் என்றும் அதற்கு ரூ.3,500/- என்னிடம் கொடுத்தால் வேலையை விரைந்து முடிப்பேன் என்றும் திருநாவுக்கரசரிடம் தெரிவித்து உள்ளார். மேலும் பணத்தை இன்று மாலை 5மணிக்கு மேல் இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளக இ-சேவை மையம் அருகே வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனை திருநாவுக்கரசு இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளார் . அதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இரசாயனம் தடவிய ரூ.3,500/-ரை கொடுத்து மாறு வேடத்தில் இ-சேவை மையம் அருகே அங்காங்கே மறைந்திருந்தனர். அப்போது நில அளவையர் சிவா இரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு போலிஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933301-large.jpg?resize=1024%2C597&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933739-large.jpg?resize=795%2C1024&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் நிலம் மோசடி செய்த நபர் மீது நடிகை கௌதமி குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நடிகை கௌதமிடம் ரூபாய் 3 கோடி பணம் பெற்றுள்ளதாகவும். இந்நிலையில் சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ 57 லட்சம் மதிப்பில் மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் , அந்த நிலமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது . எனவே நிலத்தை போலியாக வாங்கிக் கொடுத்தது பணத்தை ஏமாற்றியவர் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் ஏற்கனவே நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார் . இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு வழக்கு விசாரணைக்கு இன்று வந்துள்ளது. இது தொடர்பாக நடிகை கௌதமி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்து காவல்துறை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் அளித்தார். இது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திரைப்பட நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் கூறுகையில் :- நிலம் வாங்கி தருவதாக தான் ஏமாற்றப்பட்டதாகவும் தவறான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933300-large.jpg?resize=952%2C608&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933299-large.jpg?resize=883%2C602&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933182-large.jpg?resize=1024%2C591&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000933215-large.jpg?resize=1024%2C572&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ! நடுரோட்டில் அமர்ந்திருந்த பெற்றோர்கள்!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்களில் சுமார் 2229 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த நிலையில் ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் சுமார் 900 பேர் மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் . தற்போது கொளுத்துகின்ற அக்னி நட்சத்திரம் வெயில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையத்தின் வெளிப்பகுதியில் சாமியானா பந்தல் போதுமான அளவுக்கு போடப்படவில்லை அதனால் மாணவ மாணவிகள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் நிலவியது. ஒரு மணிக்கு தேர்வு ஆரம்பிக்க கூடிய நிலையில் 11 மணிக்கு மாணவ மாணவிகள் வரிசையில் நிற்க துவங்கி விட்டனர். தற்போது வெயில் காலம் என்பதாலும் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க முடியாத நிலையில் மாணவ மாணவிகள் சோர்வடையக்கூடிய சூழல் நிலவியது .மேலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பாதுகாப்புக்கு கூடவே வந்ததால் கூடுதலாக கூட்டம் நிரம்பியது. இதனால் வெயிலின் வெப்பம் தாங்காமல் மாணவ மாணவிகளோடு பெற்றோர்களும் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்தனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெயிலின் வெப்பத்தை உணர்ந்து கூடுதலாக சாமியானா பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் கழிப்பறை வசதிகள் அமைத்து கொடுத்திருக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் பெற்றோர்கள் காத்திருந்தது அனைவரும் மனதையும் கவலை அடைய செய்தது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928530-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928528-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928529-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928531-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928532-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928533-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000928534-large.jpg?resize=1024%2C576&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை..
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி பிரதான சாலையில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே சாலையில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார். இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த பணம், செல்போன் மற்றும் பொருட்கள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் கடையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு அளித்தார். கடையம் காவல் நிலைய பயிற்சி துணை ஆய்வாளர் பிரசாத், காவலர் ரமேஷ், தடயவியல் துணை ஆய்வாளர் ராஜேஷ், ஆகியோர் விசாரணை செய்து, கைரேகைகளை ஆய்வு செய்தனர். பூட்டுகள் கடைக்கு பின்பகுதியில் தூக்கி வீசப்பட்டதை கண்டுபிடித்தனர். கைரேகைகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வியாபாரிகளுக்கு மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள இது போன்ற குற்றச்சம்பவங்களை தடுத்திடவும், குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கத்தலைவர் கட்டி அப்துல் காதர் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் முதலியார்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
நெல்லையில் ரயில்வே மேம்பாலத்தை திறக்கக்கோரி மமக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜா நகர் உழவர் சந்தைப் பகுதி சாலையில், தினந்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து சுமார் 26 கோடியே 30 லட்சத்தில் நெல்லை திருச்செந்தூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த 2016 ல் பாலம் வேலை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பாலம் வேலை முழுவதுமாக வேலை முடிந்து போக்குவரத்திற்கு தயார் நிலையிலுள்ளது.
ஆனால், பாலத்தின் பணிகள் 100% முடிந்தாலும் ரயில்வே துறை பாலத்தை திறக்க காலம் தாழ்ததி வரும் நிலையில், பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி தமுமுக, மமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பாலத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் கண்டித்து வால்போஸ்டர்கள் நெல்லை, பாளை போன்ற மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் காட்டுமாடுகளைக் கட்டுப்படுத்தும் முறையை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் ஹெர்போலிவ் என்னும் மருந்து குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. மேலும் மாணவி தாமரைச்செல்வி கூறுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெர்போலிவ் என்னும் மருந்தினை தெளிப்பதினால் காட்டு விலங்குகளான காட்டு மாடு எருமை காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றார். கோனேரி கிராம விவசாய இடங்களில் நூற்றுக்கணக்கான காட்டு மாடுகள் இரவு நேரங்களில் பயிர்களுக்குள் நுழைந்து பெரும் சேதத்தினை ஏற்படுத்துவதாக கிராம விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் காட்டு விலங்கு பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்கும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுப்பதற்கும் செய்முறையினை இங்கு செய்து காட்டுகிறோம் என்றும் இதனைப் பயிர்களுக்கு தெளிப்பதனால்பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார், அதனை தொடர்ந்து பயிர்களுக்கு வளர்ச்சிக்கு உதவியாக செயல்படும் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000926010-large.jpg?resize=576%2C1024&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000926003-large.jpg?resize=576%2C1024&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000926017-large.jpg?resize=1024%2C576&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கைக்கு கடத்த இருந்த 12 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் OCIU பிரிவினர் திருப்புல்லாணியை அடுத்த ஆனைகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த TATA AC வாகனத்தை சோதனை செய்தனர் சோதனையில் 11,88,000 லட்சம் மதிப்பிலான PREGAP Capusules எனும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டதும் அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான திருப்புல்லாணி நம்பியான் வலசை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(20) என்பவரை பிடித்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர்கள் சுவாமிநாதன் (இராமநாதபுரம்), கார்த்திகேயன் (திருவாடானை), சாந்தி (பரமக்குடி), சடையாண்டி (முதுகுளத்தூர்) தலைமை நீதித்துறை நடுவர் கே.கவிதா, இலவச சட்ட உதவி மைய செயலர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000922406-large.jpg?resize=1024%2C621&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000922408-large.jpg?resize=1024%2C774&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000922407-large.jpg?resize=1024%2C490&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000922409-large.jpg?resize=1024%2C737&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்..
கனிமவளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அம்பை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி, நெல்லை, குமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்தால் திருவனந்தபுரத்திற்கு அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
அதேபோல் இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசலால் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் விமானங்களை தவற விட்டு தவிக்கும் அவலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கனிம வளங்களை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், முழுமையான விபரங்கள் இல்லாமல் கனிமவளத்துறை உதவி இயக்குனரின் கையொப்பத்துடன் வெற்று அனுமதி சீட்டுகளோடு வாகனங்கள் சென்று வருகிறது. அதில் வாகனங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறது, யாருக்கு அவை கொண்டு செல்லப்படுகிறது? எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற விவரங்கள் இல்லை. இதனால் போலி பாஸ் உள்ளிட்ட பலவிதமான முறைகேடுகள் நடந்து அரசுக்கு தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சுற்றுலா தலங்களுக்கு வழங்கப்படுவது போல் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் இரவு பகலாக 24 மணி நேரமும் தீவிரமாக இயங்கும் அலுவலகம் கனிமவளத்துறை அலுவலகம் மட்டுமே. தற்போதுள்ள நடைமுறையை மாற்றி இ- பாஸ் வழங்குவதன் மூலம் எத்தனை வாகனங்கள்? எவ்வளவு கனிமங்களை கொண்டு செல்கிறது? எந்த ஊருக்கு? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த நடைமுறையால் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் போய்விடுவதால் அரசுக்கும் வருவாய் அதிகரிப்பு ஏற்படும். மேலும் இ – பாஸ்களில் பயண நேரம் குறிப்பிட்டு வழங்குவதன் மூலம் போக்குவரத்தையும் முறைப்படுத்தி நெரிசலை தவிர்க்க இயலும். ஆகவே கனிம வள வாகனங்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து மோர் பந்தல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து ரோட்டரி சங்கம் கீழக்கரை முக்கு ரோட்டில் மோர்பந்தல் வெயிலுக்கு மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் மோர் பந்தல்அமைத்து பிரயாணிகளுக்கு மோர் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் S. ராஜ சேகர் (Rotaract Club of SHASC ), கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.சம்சுல் கபீர், மருத்துவர் ராசிக்தீன் , முன்னாள் தலைவர் Dr. சுந்தரம், மிப்தாஹூதீன் மற்றும் முன்னாள் செயலாளர் கார்த்திக் மற்றும் ரோட்டராக்ட் சங்க தலைவர் சபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மோர் பந்தல் கோடை காலம் என்பதால் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக பொதுமக்களுக்கு அமையும். இந்நிகழ்வை Staff Advisor H. சதாம் உசேன் மற்றும் ரோட்ராக்ட் சங்க மாணவர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
You must be logged in to post a comment.