திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி முனியப்பன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலசபாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் மற்றும் புதுப்பாளையம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்குமார் உத்தரவின்பேரில் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி முனியப்பன், தமிழக அரசு ஏற்படுத்தித் தருகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் மருத்துவ குழுவினர், மருத்துவ ஆய்வாளர் எழில், செவிலியர் கோமளவல்லி, காளியம்மா, கிராம நிர்வாக அலுவலர் முருகதாஸ் , ஊராட்சி துணைத்தலைவர் மாணிக்கம் , ஊராட்சி எழுத்தர் ஜெயக்குமார், மற்றும் சத்துணவு மைய பொறுப்பாளர் சுதா பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
Category:
செய்திகள்
கொரேனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாளே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது இதனை எதிர்க்கும் வகையில் எதிர்புசக்தி அதிகரிக்க அரசு பரிந்துறைசெய்த கபசுர குடிநீரை “கமீட்டி ஆப் MIF” நடுத்தெரு சார்பாக நடுத்தெரு மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தெருவாசிகள் மற்றும் பொது மக்களுக்கு கமீட்டி நிர்வாகிகளால் வினியோகம் செய்யபட்டது. பொது மக்களும் ஆதரவு வழங்கி வாங்கி பருகினர்.
இதன் எற்பாடுகளை கமீட்டியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட காலையிலேயே பொதுமக்கள் வந்த போதும் மருத்துவர்கள் வராததால் மக்கள் காத்துக் கிடந்தனர்.
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மேலும் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் உசிலை பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.இன்று காலை 8மணிக்கு தடுப்பூசி போட ஆண்கள் பெண்கள் உள்பட 20க்கும் மேற்ப்பட்டோர் வந்தனர்;.ஆனால் மருத்துவப் பணியாளர்கள் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபொழுது காலை 11.00மணிக்கு மேல்தான் மருத்துவப்பணியாளர்கள் வருவர்.அதுவரை காத்திருக்கவும் எனத் தகவல் தெரிவிக்;கப்பட்டது.கொரோனா தடுப்பூசி போட காலையில் ஆர்வமுடன் வந்த மக்களில் சிலர் மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள ஆா்வம் காட்டினாலும் அதிகாரிகளின் அலட்சியம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆற்காட்டில் கோவிட் தொற்றால் இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்.
by mohan
written by mohan
ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு கலவை சாலையை சேர்ந்த ஹாலி ஜனாபா கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அவரின் உறவினர்கள் கேட்டுகொண்டதின்பேரில் எஸ்டிபிஐ கட்சியினர் சந்தப் பேட்டை மிஸ்கின் மசூதியில் நல்லடக்கம் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்ட காட்பாடி பிஷப்டேவிட் நகரை சேர்ந்த ஜெயகுமார் (59). இவர் சோளிங்கர் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் வாலாஜா அரசு அனுமதிக்கப்பட்டார்.பின்பு கன்னிகாபுரத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் இன்று பகல் 11 மணிக்கு ஜெயகுமார் உயிரிழந்தார்.இவருக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர்.இவருக்கு சக காவல்துறையினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூரில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த கணவன்-மனைவி. பெற்றோரை இழந்து வாடும் 2 குழந்தைகள் நிலை பரிதாபமாக உள்ளது.வேலூர் தொரப்பாடியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சிவராஜ் (42) சில நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இவரது மனைவி பாமா (38) தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கணவன் -மனைவி இறந்த நிலையில் அவர்களது குழந்தைகள் இமான் (10) ஜோயல் (7) ஆகியோர் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் அர்ப்பணிப்பு; வாசு எம்எல்ஏ துவக்கி வைத்தார்..
by mohan
written by mohan
புளியங்குடி பார்ட் அறக்கட்டளை சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பார்ட் அரங்கத்தில் அறக்கட்டளை தலைவர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பார்ட் அறக்கட்டளையின் செயலாளர் ஷேக் காதர், பொருளாளர் அப்துல் கரீம், உறுப்பினர்கள் அபுசாலி, பைஜி, உமர் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர், எம்.எஸ்.எஃப் தேசிய இணைச்செயலாளர் புளியங்குடி அமீன் வரவேற்புரை ஆற்றி நிகழ்வை தொகுத்து வழங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் குமார் சிங், தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சுலைமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் வகாப், மமக மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரகுமான், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பத்திரம் சாகுல் கமீது, காங்கிரஸ் நகரத் தலைவர் பால்ராஜ், மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், கல்வத்து நாயகம் தைக்கா முத்தவல்லி முகம்மது எஹியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்சி மாணவர்கள் அப்பாஸ், அப்துல் ரஹ்மான் ஹமீது, முகைதீன், முகமது சித்தீக், நாகூர் மைதீன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். முடிவில் அறக்கட்டளை துணைத்தலைவர் முகைதீன் ஷா நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சங்க கால தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர் பாரதி”; இணையவழி தமிழ் கருத்தரங்கில் எழுத்தாளர் நாறும்பூநாதன் பேச்சு…
by mohan
written by mohan
மகாகவி பாரதியின் படைப்புகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் போட்டிகளை நடத்திவரும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இப்போது நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து வாரந்தோறும் உரையரங்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இணைய வழியில் நடந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாம் வார நிகழ்ச்சி புதன் கிழமை மாலை இணையவழியில் நடந்தது. இதில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் “சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் புலமை பெற்றவரே பாரதி “எனப் பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வரவேற்புரை வழங்கினார். இணைய வழி நிகழ்வில் முதலாவதாக திருச்செந்தூர் சிவந்தி கல்வியியல் கல்லூரி மாணவி வனச்செல்வி பேசினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “கவிதைகளை மட்டுமின்றி நிறைய கட்டுரைகளையும் எழுதியவர் பாரதி. பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதுபவராக மட்டுமின்றி பத்திரிக்கை நடத்துபவராகவும் விளங்கியவர் பாரதி. அவர் தன் கவிதைகளில், கட்டுரைகளில் சொன்னவற்றை யெல்லாம் அப்படியே செய்து காட்டினார். பெண் கல்வி பற்றி பேசிய பாரதி கடையத்தில் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் தன் மகளைப் படிக்க வைக்க சண்டையிட்டு உரிமையைப் பெற்றார். பாரதி சங்க இலக்கியங்களிலும் புலமை பெற்றவராக விளங்கியவர் தான். புறநானூறு, தொல்காப்பியம் உட்பட சங்க இலக்கியங்களிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி “எனக் குறிப்பிட்டார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி, பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா ஆகியோர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள், தர்மபுரி சங்க இலக்கிய ஆய்வு நடுவம் தலைவர் நாகராஜ்,துபாய் தமிழ் அறிஞர் முனைவர் முகமது முகைதீன் உட்பட பல தமிழ் ஆர்வலர்களும், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகளும் திரளாக இணையவழி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கத்தார் தமிழ் சங்கம் சார்பில் மலைவாழ் மக்களுக்கு மளிகை தொகுப்புகளை கொரோனா நிவாரண உதவி
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.மலைகளுக்கு சென்று கிழங்கு தேன் எடுத்து வந்து நகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்த இந்த மக்கள் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிதும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.இது குறித்து அறிந்த கத்தார் நாட்டில் உள்ள கத்தார் தமிழ் சங்க நிர்வாகிகள் உசிலம்பட்டி மாஸ்டர் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக இந்த மலைவாழ் மக்களுக்கு ஒரு மாததிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்புகளை நிவாரண உதவியாக வழங்கினர்.அனைத்து மலைவாழ் மக்களையும் சமூக இடைவெளியுடன் அமர வைத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் கட்டாயம் முக கவசம் அணிந்து அனைவரும் பாதுகாப்புடன் இருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பின் நிறுவனர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
உசிலை சிநதனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரோனோ தடுப்பூசி முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழகத்தில் பரவி வரும் கொரோனோவை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (28/05/2021) கீழக்கரை தைக்கா வளாகத்தில் வடக்குத் தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரொனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத்தை சாரந்த அனைவரும் கலந்து கொண்டு முழு ஓத்துழைப்பு அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள் இன்று (மே 28, 1969).
by mohan
written by mohan
சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் (Sivaramakrishnan Pancharatnam) பிப்ரவரி 9, 1934ல் கல்கத்தாவில் பிறந்தார். இவரது 25ஆவது அகவையில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக சேர்ந்தார். 1961 முதல் 1964 வரை மைசூர் பல்கலைக்கழகம் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் ஆய்வுகள் சி. வி. இராமனின் மேற்பார்வையில் பெரும்பாலும் நடைபெற்றன. இராமன் பஞ்சரத்தினத்தின் திறமையினை மிக நன்றாக உணர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு முறை ஜவகர்லால் நேரு இராமனைச் சந்திக்க இராமன் ஆய்வகத்திற்கு வந்த போது நேருவிடம் அந்த இளைஞன் இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத் தருவான் எனக் கூறினாராம்.
பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955ம் ஆண்டு கண்டறிந்தார். ஆயினும் அவர்தம் ஆய்வுகள் 1984ம் ஆண்டு வரை உலகளாவிய அளவில் பெரிதும் அறியப்படாது இருந்தது. 1984ம் ஆண்டு மைக்கேல் பெரி என்பார், இதே போன்ற ஒரு வடிவியற்கட்டத்தை குவாண்ட இயங்கியலில் கண்டறிந்து, ராயல் சொசைட்டி எனப்படும் வேந்தியக் குழும பனுவலில் வெளியிட்டிருந்ததன் பின், இந்திய இயற்பியலாளர்களான சி.இராமசேஷன், இராசாராம் நித்தியானந்தா, சைமன், முகுந்தா, ஜோசப் சாமுவேல், இராஜேந்திர பண்டாரி போன்றோர் ஒளியியலில் பஞ்சரத்தினம் அவர்கள் தந்த ஆய்வுகளை உலகம் அறியச் செய்ததோடு அவர்களும் வடிவியற்கட்டத்தில் பெரிய ஆய்வுகளைச் செய்தனர். அவை குவாண்டவியலிலும், அடிப்படை இயற்பியல் கட்டமைப்பிலும், கணிதத்திலும் முக்கியமானப் பொருளாக ஆய்வு செய்யப்படுகிறது.
குவாண்டக்கணினியியலில் மிக முக்கியமான அம்சமாக, தவறிலாக் கணித்தலிலும், செய்திப் பரிமாற்றத்திலும் ஊகிக்கப்படுகிறது. மேலும் அறியப்பட்ட ஆய்வாளர்களான அகரனோவ், ஜீவா ஆனந்தன், அருண் குமார் பதி, வேத்ரால், ஸ்யோக்விஸ்ட் போன்றோர் இத்துறையில் மிகவும் முக்கியமானப் பங்களிப்பினைத் தந்துள்ளனர். பஞ்சரத்தினம் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டுவிளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.
பஞ்சரத்தினம் புகழ்பெற்ற இயற்பியலர்களான, இராமன் விளைவுக்காக நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமன் மற்றும் சந்திரசேகரின் விண்மீன் ஆயுள்வரையறைக்கான நோபல் பரிசு பெற்ற சு. சந்திரசேகர், நீர்மபடிகவியல் மற்றும் படிக ஒளியியல் ஆய்வுகளுக்காக அறியப்பட்ட சி. சந்திரசேகர், சி. இராமசேஷன் அவர்களின் உறவினர் ஆவார். பஞ்சரத்தினம் தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். தமது சமூகப் பணிகளின் போது, ஏற்பட்ட கிருமித் தொற்றால், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இராமன் ஆய்வகத்தைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்த போது, உடல்நலக் குறைவால் மே 28, 1969ல் தனது 35வது அகவையில் ஆக்சுபோர்டு, இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வீரசிகாமணி ஊராட்சி பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்;பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களின் சிரமத்தை போக்க பல நல்ல திட்டங்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் கோவிட்-19 தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
ஊராட்சி திருமண மண்டபத்தில் வைத்து 27.05.21 வியாழக் கிழமை நடந்த இந்த முகாமில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். காலை 10 மணி முதல் துவங்கிய இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த பணியின் இடையே தடுப்பூசி காலியான நிலையில் மேலும் கூடுதலாக 120 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு முகாம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த முகாமில் 180 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் வீரசிகாமணி ஊராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது. கலந்து கொண்டவர்கள், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வீரசிகாமணி ஊராட்சி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டு முகாம் நிறைவுற்றது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம்கிராமம் மற்றும் சுற்று வட்டாரபொதுமக்கள் பயன்பெறும் வகையில்கொரோனா தடுப்பு பணியாக முதற்கட்ட காய்ச்சல் பரிசோதனை முகாமில் அலோபதி மருத்துவம் , சித்தா மருத்துவம் , ஹோமியோபதி மருத்தும் மூலம்சிகிச்சை அளிக்கும் முகாமை வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர் விசாகன் , மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தவிட்டு சந்தை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வரும் 53 வயதான முதியவர்.
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழை-எளிய, ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் என ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.
இதேபோல் தெருக்கள் மற்றும் வீதிகளில் சுற்றுகின்ற நாய்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு இருப்பதால் அவற்றிக்கு உணவளித்து வரும் சிலர், தற்பொழுது ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாய்களுக்கு உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.,இந்த நிலையில் மதுரை தவிட்டு சந்தை பகுதியை சேர்ந்த 53 வயதான முருகன் என்ற முதியவர் அப்பகுதியில் ஆவின் பாலகம் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த 2 வருடங்களாக சாலையோரம் சுற்றித்திரியும் 300க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தம்மால் முடிந்த அளவு இறைச்சி கலந்த உணவு, தயிர் சாதம் லெமன் சாதம் என மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார்.மேலும் அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் இவர் கொண்டு வரும் உணவிற்காக காத்திருப்பதாகவும், அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த முதியவரின் தன்னலமற்ற சேவையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ,அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருள் வழங்கினர்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் – வரை மாநகர் காவல் ஆணையர் மதுரை மாநகர் பிரேம் ஆனந்த் சிங்கா அவர்களின் உத்தரவின்பேரில் காவல் துணை ஆணையர் திரு.சிவபிரசாத் அவர்களின் அறிவுரையின் படி திருப்பரங்குன்றம் சரகம் உதவி ஆணையர் திரு. சண்முகம் மற்றும் காவல் ஆய்வாளர் அவனியாபுரம் பிரபு மற்றும் காவலர்கள் அவனியாபுரம் வில்லாபுரம் மற்றும் மேல அனுப்பானடி பகுதிகளில் ஆதரவற்ற 41 முதியவர்களுக்கு(SENIOR CITIZENS) அவனியாபுரம் வில்லாபுரம் அனுப்பானடி சிந்தாமணி ஆகிய பகுதிகளில் தேர்வு செய்து அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.அவனியாபுரம் காவல் துறை சார்பில் உணவின்றி வாடும் எளிய மக்களுக்கு மனித நேய சேவை. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி் முகாமை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதூர் மு.பூமிநாதன் எம்எல்ஏ, வெங்கடேசன் எம்பி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய சாலை அமைக்கும் பொழுது பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவை மீறும் ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:
by mohan
written by mohan
புதிய தார்சாலை அமைக்கும் பொழுது ஏற்கனவே உள்ள தார் சாலையை பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றி மேலும் உயரம் ஏறாமல் இருப்பதற்கு பழைய சாலையை அகற்ற வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது இதனை தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.தமிழக அரசு உத்தரவை மீறும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது அதில் தமிழக அரசு விதித்த எந்த விதியையும் அமல்படுத்தாமல் பழைய சாலை மீது புதிய சாலை அமைக்கப்படுகிறது .இதனால் , சாலையின் உயரம் உயர்ந்து சாலையில் சீக்கிரம் பழுது ஏற்படுகிறது அரசு விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட சாலையை மீண்டும் புதுப்பித்து பழைய சாலை பெயர்த்தெடுத்து பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா? மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழுதான வாகனங்களில் குடிநீர் வினியோகம் .உயிர்ப்பலி ஆகும் முன் வாகனத் தணிக்கை செய்வார்களா மாநகராட்சி நிர்வாகம்:
by mohan
written by mohan
மதுரை மாநகராட்சிக்கு 100 வார்டுகள் உள்ளன இதில் பல வார்டுகளுக்கு மாநகராட்சி தனியா ஒப்பந்தம் வாகனம் மூலமாகவே குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள்.இதில், லாரி வேன்கள் மற்றும் டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்து வருகிறது
இதில் பல வாகனங்கள் பழுதடைந்து முறையான பராமரிப்பு இல்லாமலும் இருக்கின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக மதுரை பைபாஸ் சாலையில் குடிநீர் ஏற்றிச்சென்ற மாநகராட்சி ஒப்பந்த டிராக்டர் ஒன்று அரசரடி குடிநீர் ஏற்றும் நிலையத்திலிருந்து குடிநீரை ஏற்றிக்கொண்டு பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.அந்த டிராக்டர் ஆனது சாலை முழுவதும் குடிநீரை சிந்திக் கொண்டு பின்புறம் டயர்களும் குதித்து குதித்து வாகனம் பவுலும் அளவிற்கு சென்றது. மேலும் வாகனம் விபத்தில் சிக்கி யாரேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் மாநகராட்சி பொறுப்பேற்குமா. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் வாகனங்கள் அனைத்தையும் தணிக்கை செய்து வாகன முறையாக பராமரிப்பு செயல்படுகிறதா குடிநீர் மற்றும் அன்றி ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனத்தையும் தணிக்கை செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.இது குறித்து, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? எதிர்பார்ப்புடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு. அரசு மருத்துவனையில் ஆக்சிசன் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இதுவரை 28 பேர் கொரோணா தொற்று பாதிப்படைந்ததால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று அந்த பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர். நிகழ்வில் உடன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் உங்களுக்கு தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்கின்றதா? என சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்ட போது ஆக்சிசன் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா மற்றும் படுக்கை வசதிகள் தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்படுகின்றதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படுபவர்களுக்குபோதிய ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா எனவும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் எந்த ஒரு தங்குதடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி சென்றார்
. செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநகர் பாலாஜி நகர் பகுதியில் காலி இடங்களில் குப்பை கொட்டுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அவலம்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பாலாஜி நகர் உள்ளது.இங்குள்ள ராகவேந்திரா தெரு மற்றும் சித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள காலி இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தேங்கும் குப்பைகளை கொட்டி தெருக்களை மாசடையச் செய்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது கரோன தொற்று பரவி வரும் நிலையில் மேலும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என . பாலாஜி நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.