16
வேலூர் மாவட்ட காட்பாடி பிஷப்டேவிட் நகரை சேர்ந்த ஜெயகுமார் (59). இவர் சோளிங்கர் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் வாலாஜா அரசு அனுமதிக்கப்பட்டார்.பின்பு கன்னிகாபுரத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் இன்று பகல் 11 மணிக்கு ஜெயகுமார் உயிரிழந்தார்.இவருக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர்.இவருக்கு சக காவல்துறையினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
You must be logged in to post a comment.